Thursday, July 26, 2012

யாத்திராகமம்-மோசஸ் கதைகள் - கர்த்தரின் குழப்பம்

  

யாத்திராகமம் 1:5 யாக்கோபின் வழிவந்த இவர்கள் அனைவரும் மொத்தம் எழுபது பேர். யோசேப்பு ஏற்கனவே எகிப்தில் இருந்தார்.6 பின்னர் யோசேப்பும் அவருடைய எல்லாச் சகோதரரும் அந்தத் தலைமுறையினர் அனைவருமே இறந்துபோயினர். 7இஸ்ரயேல் மக்களோ குழந்தைவளம் பெற்றுப் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தனர்: ஆள்பலத்தில் மேன்மேலும் வளர்ந்தனர்: இதனால் அந்நாடே அவர்களால் நிறைந்துவிட்டது.

14 கடினமான சாந்து செங்கல் வேலையாலும், அனைத்து வயல்வெளி வேலையாலும், மேலும் கொடுமைப்படுத்தி வாங்கிய ஒவ்வொரு வேலையாலும், அவர்கள் வாழ்க்கையே கசந்து போகும்படி செய்தனர்.15எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது:16 ″ எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்: ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்: பெண்மகவு என்றால் வாழட்டும்″ .17 ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.18 எனவே, எகிப்திய மன்னன் மருத்துவப் பெண்களை அழைத்து அவர்களை நோக்கி, ஏன் இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்? என்று கேட்டான்.19 அதற்கு மருத்துவப் பெண்கள் பார்வோனை நோக்கி,  ″ எகிப்தியப் பெண்களைப் போன்றவரல்லர் எபிரேயப் பெண்கள்: ஏனெனில், அவர்கள் வலிமை கொண்டவர்கள்: மருத்துவப்பெண் வருமுன்னரே அவர்களுக்குப் பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது″  என்று காரணம் கூறினர்.20 இதன்பொருட்டுக் கடவுள் மருத்துவப் பெண்களுக்கு நன்மை செய்தார். இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில் பெருகச் செய்தார். அவர்கள் ஆள்பலம் மிக்கவர் ஆயினர்.21 இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்.2

 யாத்திராகமம்21:1 இவ்வாறிருக்க, லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப்பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டார்.2 அவள் கருவுற்று ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்: அது அழகாயிருந்தது என்று கண்டாள்: மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள்.3 இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்: குழந்தையை அதனுள் வைத்து நைல்நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவைத்தாள்.4 அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்துகொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்.5 அப்போது பார்வோனின் மகள் நைல்நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்: அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்: அது அழுதுகொண்டிருந்தது.6 அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். ″ ″ இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று″ ″ என்றாள் அவள். உடனே குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி,7 ″ ″ உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?″ ″ என்று கேட்டாள்.8பார்வோனின் மகள் அவளை நோக்கி, ″ ″ சரி. சென்று வா″ ″ என்றாள். அந்தப் பெண் சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.9 பார்வோனின் மகள் அவளை நோக்கி, ″ ″ இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக் கூலி கொடுப்பேன்″ ″ என்றாள். எனவே குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள் அப்பெண்.10 குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக்கொண்டாள். 'நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்' என்று கூறி அவள் அவனுக்கு 'மோசே' என்று பெயரிட்டாள்.
15 இச்செய்தியைப் பார்வோன் கேள்வியுற்றபோது மோசேயைக் கொல்லத் தேடினான். எனவே மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று.16 அவர் ஒரு கிணற்றருகில் அமர்ந்திருக்க, மிதியானின் அர்ச்சகருடைய ஏழு புதல்வியரும் வந்து, தம் தந்தையின் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்ட நீர் மொண்டு தொட்டிகளை நிரப்பினர்.17 அங்கு வந்த இடையர்கள் அவர்களை விரட்டினர். உடனே மோசே எழுந்து அவர்களுக்குப் பாதுகாப்பளித்தார். அவர்கள் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்டவும் செய்தார்.18 அவர்கள் தம் தந்தையான இரகுவேலிடம் சென்றபோது அவர், ″ ″ என்ன, இன்று விரைவாக வந்துவிட்டீர்களே?″ ″ என்றார்.19 அவர்கள், ″ ″ எகிப்தியன் ஒருவன் இடையர்களின் தொல்லையிலிருந்து எங்களை விடுவித்ததோடு, எங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் இறைத்தான்: ஆட்டு மந்தைக்கும் தண்ணீர் காட்டினான்″ ″ என்றார்கள்.20 அவர் தம் புதல்வியரிடம், ″ ″ எங்கே அவன்? ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்? சாப்பிட அவனை அழைத்து வாருங்கள்″ ″ என்று கூறினார்.21 அவரோடு குடியிருக்க மோசே சம்மதிக்க, அவரும் மோசேக்குத் தம்மகள் சிப்போராவை மணமுடித்துக் கொடுத்தார்.22 அவள் ஒரு மகனை ஈன்றெடுத்தாள். 'நான் வேற்று நாட்டில் அன்னியனாய் உள்ளேன்' என்று கூறி மோசே அவனைக் 'கேர்சோம்' என்று பெயரிட்டழைத்தார்.


 ஆதியாகமம்15:12 கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. 13 ஆண்டவர் ஆபிராமிடம், ″நீ உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டியது: உன் வழிமரபினர் வேறொரு நாட்டிற்குப் பிழைக்கச் செல்வர். அங்கே அவர்கள் நானூறு ஆண்டுகள் அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவர். 14 அவர்கள் அடிமை வேலை செய்யும் நாட்டிற்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். அதற்குப்பின் மிகுந்த செல்வங்களுடன் அந்நாட்டைவிட்டு அவர்கள் வெளியேறுவர். 15 நீ மிகவும் முதிர்ந்த வயதில் அமைதியாக உன் மூதாதையரிடம் சென்றபின், நல்லடக்கம் செய்யப்படுவாய். 16 நான்காம் தலைமுறையில் அவர்கள் இங்கே திரும்பி வருவர். ஏனெனில் எமோரியர் இழைக்கும் தீமை இன்னும் முழுமை அடையவில்லை″ என்றார். 17 கதிரவன் மறைந்ததும் இருள்படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன. 18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, "எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்″ என்றார். 




பைபிளின் அடிப்படை ஆணிவேர்  கதை- எபிரேயர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்; இன்றைய இஸ்ரேல் - கானான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு. பாபிலோனின் அன்னியரான ஆபிர ஹாம் கர்த்தரால் தேர்ந்தெடுத்து அவர் வாரிசுகளுக்கு மட்டும் அரசியல் ஆட்சியுரிமை. பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எகிப்தியர் வேகமாக வளர ஆண்குழந்தைகளை கொலை சுய்யுமாறு எகிப்து மன்னர் சொல்ல தாதிகள் செய்யவில்லை.  எபிரேயர்களால் ஆண் குழந்தைகளை வளர்க்க முடியாத சூழ்நிலையில் மோசேயின் தாய் குழந்தையை விடுடு, எகிப்து அரச குடும்பத்தில் வளரும்படி செய்கிறார். 
கர்த்தர் சொல்ல மோசே தலைமயில் 30 லட்சம் எபிரேயர்கள் எகிப்திலிருந்து வெளியேரி வந்ததாகக் கதை.
வழியில் இர்ந்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் அப்பக்கம் செல்ல துரத்தியவர்களை கடல் விழுங்கியதாம். பின்னர் சாக்கடலும் வழிவிட்டதாம். பின் கானான் நாட்டு மண்ணின் மைந்தர்களை கொலை செய்து அடிமைப்படுத்தி எபிரேயர்கள் தங்கள் பகுதியை கைப்பற்றியதாகக் கதை.



 30 லட்சம் பேர் என்பதை ஆதரிக்கும் மூட நம்ப்பிக்க் சப்பைகட்டுக்கள்.
//After the first generation, let’s assume that his children start intermarrying, so no one is added to the clan via that route.
Generation// Starting population + Births - Deaths = Population
  • 2// 24 + 108 - 0 = 132
  • 3 // 132 + 594 - 2 = 724
Now, if this rate continued, the population at the end of 430 years would be over 50 billion (if you don’t believe me, do the math). But, to save that Christmas money, let’s assume that the Mustrealites start getting conservative in the 4th generation, and only have 4 kids per family, or 1.15 per person. (The numbers are rounded, so they may not add up exactly.)
Generation Starting population + Births - Deaths = Population
  • 4 // 724 + 869 - 22 = 1,535
  • 5 // 1,535 + 1,765 -108 = 3,191
  • 6 // 3,191 + 3,670 - 594 = 6,267
  • 7 // 6,267 + 7,208 - 833 = 12,643
  • 8 // 12,642 + 14,539 - 1,765 = 25,417
  • 9 // 25,416 + 29,229 - 3,670 = 50,976
  • 10// 50,976 + 58,622 - 7,208 = 102,390
  • 11// 102,390 + 117,748 - 14,539 = 205,599
  • 12// 205,599 + 236,439 - 29,229 = 412,809
  • 13// 412,809 + 474,731 - 58,622 = 828,918
  • 14// 828,918 + 953,256 - 117,748 = 1,664,426
  • 15// 1,664,426 + 1,914,090 - 236,439 = 3,342,077
At the end of 15 generations, which would not even take the full 430 years needed, the total population is well over the 3 million most commentators suggest as the total population, and without any strain to credulity, or even any miraculous intervention. Skeptical objections to the growth of the Israelite population are simply unreasonable.
Objection: By this logic, if Joseph's clan can grow from 70 to 2.5 million in 430 years then surely there is nothing to stop every other man's clan from doing the same.//


யாக்கோபு- ஜோசப்- மானசே- மாக்கீர் -4 தலைமுறை


மாக்கீர்- இஸ்ரேல் திரும்பி வந்தவர்.
யோசுவா 17:1 யோசேப்பின் முதல் மகனான மனாசேயின் குலத்திற்குக் கிடைத்த நிலப்பகுதியின் விவரம்: மனாசேயின் முதல் மகனும் கிலயாதின் தந்தையுமான மாக்கிர் போர்வீரனாக இருந்ததால் அவனுக்குக் கிலயாதும் பாசானும் அளிக்கப்பட்டன.

ஆதியாகமம்50:22யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில் குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப்பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.23 எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும் மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்.

   In the genealogy, God begins with the first born of Jacob to demonstrate that Moses is descended from Levi who is the third son of Jacob.  Reuben was the first, Simeon the second and Levi the third.  [Genesis 29:31-35]   
Y   Moses was descended the son of Amram and Jochebed.
Y   Jochebed was the sister of Kohath, Amram’s father.
Y   Moses was the second born son of Amram, who was the firstborn son of Kohath, who was the second born son of Levi, who was the son of Jacob whose name was changed to Israel, who went with his sons to Joseph in Egypt because of the famine in the land of Canaan.
 



மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்.

மாக்கீரும் மோசஸும் ஒரே தலைமுறை.





9 comments:

  1. அருமை சகோ. நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பைபிளை படிப்பதுண்டு ஆனால் பல வார்த்தைகள் புரியும்படியாக இருக்காது அதனாலேயே படிக்கும் ஆர்வம் குறையும். இதனாலேயே கிருத்தவ மக்கள் புரிந்துணர்வது கூட முடியாமல் கடமைக்கு படித்துவிட்டு போய்விடுகிறார்கள் என நினைக்கிறேன்.ஆனால் தங்களின் பதிவு தெளிவாக புரிய வைக்கிறது இருப்பினும்,குறிப்பாக ஸ்திரீகள்,பலத்துப் போனார்கள்,நீர் மொண்டு இது போன்ற வார்த்தைகளுக்கு பதிலாக பெண்கள்,அதிகரித்தார்கள் அல்லது வலுவானார்கள்,நீரால் நிரப்பினர் போன்ற வார்த்தைகளால் அலங்கரித்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது வேண்டுகோள். ஏனென்றால் இன்றைய‌ ம‌க்க‌ளுக்கு உண‌ர்த்த‌ வேண்டும் என்றால் ச‌ற்று கூடுத‌லாக‌ உழைக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் த‌ங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு அவ‌சிய‌மாகிற‌து,மேலும் அர்த்த‌ம் புரிந்தால் நீங்க‌ள் எடுத்த‌ முய‌ற்சி விரைவில் வெற்றி பெற‌ வாய்ப்பு உண்டு. நான் சொன்ன‌தில் த‌வ‌று இருந்தால் ம‌ன்னிக்க‌வும்.


    இனிய‌வ‌ன்...

    ReplyDelete
  2. இனியவரே,

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

    நான் முதலில் தந்திருந்தவை KJV பைபிளிலிருந்து.

    மாற்றிவிட்டேன்

    ReplyDelete
  3. மாக்கீர் யோசுவாவோடு இஸ்ரேலிற்கு வந்தவர். மோசஸும் மாக்கீரும் அதே தலைமுறை. மாக்கீர் குழந்தைகளை ஜோசப் தன் மடியில் வைத்து விளையாடினார்.

    அப்படியென்றால் மோசஸ் பிறப்பின் போது கண்டிப்பாக மோசஸ் பிறப்பின் போது ஜொசப் உயிரோடு இருந்திருக்க வேண்டும்.

    மேலும் நாலு தலைமுறை தான் எனவும் உள்ளதால்- நீங்கள் கோர்த்த வசங்கள் மிகச் சரியே. மோசே பிறப்பில் அதிசயம், கர்த்தரால் காப்பாற்றப் பட்டார், ஏன் எப்ரிரேயர்கள் எல்லாருமே எனும் கதை.

    இதில் ஒரு அழகான உளறல் காமெடி
    "21 இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்."

    எகிப்தினர் அனைவரும் குடும்பம் தழைக்க கர்த்தர் முதல் குழந்தைகளை கொலை செய்தார்.

    முன் பதிவில் தாங்கள் தந்த யூத கலைகளஞ்சியம் வாக்கு இதிலும் பொருத்தமே.
    The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity."

    இத்தனை பைபிள் வசனஙள் தராமல் நீங்கள் சுருக்கி வசன எண்களைத் தரலாமே!

    ReplyDelete
  4. http://biblelight.net/moses.htm
    http://www.jewfaq.org/moshe.htm
    http://en.wikipedia.org/wiki/Moses
    http://wiki.answers.com/Q/When_was_Moses_born

    ReplyDelete
  5. DearDevapriya,

    you are doing excellent job, but repetition of bible verses make too lengthy. Make it more interesting and laughing like
    http://pagadu.blog.com/

    ReplyDelete
  6. Entire Judaism and Christianity and why not Islam depends on story of Exodus..

    You prove it as myth

    ReplyDelete
  7. Judaism, Christianity and Islam needs story of Moses and Exodus.

    You prove that it is a fraud on people.

    ReplyDelete
  8. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை
    http://senkodi.wordpress.com/2010/03/26/fir-awn/
    George Udaykumar, on ஆவணி6, 2012 at 9:41 முப said: உங்கள் பின்னூட்டம் மட்டறுத்தலுக்காய் காத்திருக்கின்றது.
    சார்,
    முதலில் இஸ்ரேலியர் என்னும்படியான் பிரிவு மக்கள் பொ.மு.2ம் ஆயிர காலத்தில் வாழ்ந்தனரா?
    மோசே காலம் பைபிளில் உள்ளதில் உள்ள அர்த்தமற்ற தன்மை இவை பற்றிய தேவப்ரியா சாலமன் வலைக் கட்டுரைகள்
    யாத்திராகமம்- மோசே- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு
    http://pagadhu.blogspot.com/2012/08/blog-post.html
    யாத்திராகமம்-மோசஸ் கதைகள் – கர்த்தரின் குழப்பம்
    http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_26.html
    ஆதாமின் பாவமும் கிறிஸ்துவின் மரணமும்
    http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_25.html
    கர்த்தர் செய்த கொலைகள்.
    http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_22.html
    கர்த்தர் மனித குல எதிரி-பாபேல் கோபுரம் கதை!
    http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_18.html
    கர்த்தர் மனித குல எதிரி-ஆதிபாவக் கதை!
    http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_17.html
    கர்த்தர் உளறல் ஆபிரகாம் – ஈசாக்கு கதைகள்
    http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_15.html
    யாத்திராகமம் கட்டுக்கதை. இஸ்ரேல் பல்கலைக் கழகக் காணொளி- வீடியோ
    http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_1302.html
    ஆபிரகாம்- ஈசாக்கு கட்டுக்கதை. இஸ்ரேல் பல்கலைக் கழகக் காணொளி.http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_12.html

    ReplyDelete
  9. இறையில்லா இசுலாம் என்ற வலதளத்திற்கு இணைப்பு கொடுங்கள்.அரேபிய சமய கருத்துக்ளின் அசிங்கங்களைக் காணலாம்.

    ReplyDelete