Saturday, November 17, 2012

இயேசு உண்மையில் வாழ்ந்தவரா?

மதம் பரப்ப எழுதப்பட்டவை சுவிசேஷங்கள், இயேசு மரணத்திற்கு, 40- 70 ஆண்டு பின்பு தான் இவை ஒரு வடிவம் பெற்றது. இன்றுள்ள வடிவம் பெற்றது 4- 5 ஆம் நூற்றாண்டில் தான்.

நடுநிலையில் சம்காலத்தவர் - கூட இருந்த சீடர்கள் யாருமே ஏதுமே எழுதிவைக்கும் அளவிற்கு ஏசு எவ்விதமான தாக்கமும் ஏற்படுத்தவில்லை.

நடுநிலை கிறிஸ்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் கருத்துப்படி முதல் நூற்றாண்டில் சர்ச் உறுப்பினர்கள் என்பது 10,000 பேர்கள், 70 ஊர்களில், 6 கோடி மக்களில். அதாவது 6000 பேருக்கு ஒருவர் என்று தான். இது அடுத்த 300 ஆண்டுகளில் 7% என வந்தது. கான்ஸ்டன்டைன் மன்னனின் ஆட்சி துணை வந்த 50 ஆண்டுகளில் 90% தாண்டியது. கிறிஸ்துவ மதத்திற்கும் வரலாற்று ஏசுவிற்கும் சம்பந்தம் இல்லை.
Rodney Stark, The Rise of Christianity (1996)
Keith Hopkins, "Christian Number and Its Implications," Journal of Early Christian Studies 6.2 (1998)
   
கிறிச்துவம் வளர்ச்சிக்கு காரணம் ரோமன் ஆட்சியின் கத்தியே அன்றி வரலாற்று ஏசு அல்ல. ஏசு உயிர்த்தார் என்பதால் மதம் வளரவில்லை. ஆட்சிக் கத்தியின் துணை மட்டுமே, எனவே  நாம் மதம் வளர்க்கப் புனையப்பட்ட சுவிசேஷங்களில் வரலாற்று ஏசு உள்ளாரா எனப் பார்ப்போம்.

சுவிசேஷங்களின் இயேசு.

4 வெவ்வேறு கதாசிரியர்களால் வரயப்பட்டவை.

இவற்றின் பெருமளவின் வடிவம் பெற்றகாலம் என பெரும்பான்மை பைபிளியல் அறிஞர் ஏற்பது.

மாற்கு - 70  - 75  - இதை வைத்து வளர்த்து
மத்தேயு- 80 - 90
லூக்கா  85 - 95
யோவான் 95- 120



 ஏசு மரணத்திற்கு 40 ஆண்டு பின்பு மாற்கின்  கதை .

இயேசு பேசியது அரமிக் அல்லது எபிரேய மொழி, சுவிகள் அனைத்தும் கிரேக்க மொழியில் மட்டுமே.
மாற்கின் கதையை மாற்றாது நீட்டி அதே கதையையே சொல்வதால் - ஒத்த கதையமைப்பு சுவிகள் எனப்படும் -மாற்கு -  மத்தேயு- லூக்கா  மூன்றுமே.

மாற்கு சுவியை விடுத்து தனி நடையில் - இயேசு எப்படி இயங்கினார் என்ற அடிப்படையையே மாற்றி புனையப் பட்டது நான்காவது சுவி எனப்படும் யோவான் சுவிசேஷம் ஆகும்.
 ஒத்த கதையமைப்பு சுவிகள்
 நான்காவது சுவி
1.  இயேசு சீடரோடு இயங்கியது ஒரு வருடத்திற்கும் குறைவு.

 2.ஞானஸ்நானி யோவான் கைதிற்குப் பின் தான் ஏசு சீடர்கள் சேர்த்து இயக்கம் ஆரம்பம்

3.ஏசு இயக்கம் முழுமையும் கலிலேயாவில் மட்டுமே

 4.ஞானஸ்நானத்திற்குப்பின் ஏசு சீடோரோடு பஸ்கா பண்டிகைக்காக ஒரே முறை கடைசி வாரம் மட்டுமே யூதேயா- ஜெருசலேமிற்கு வந்தார்.

 5. ஏசு தன்னை கிறிஸ்து எனவோ மேசியா- கடவுள் மகன் என்றெல்லம் சொல்லிக் கொள்ளவே இல்லை.  பேய் பிடித்த சிலர் அடையாளம் கண்ட போது ரகசியம் காக்கச் சொன்னார்.

6.  ஏசு அதிசயங்கள் பெரும்பாலும் பேய் ஓட்டுபவை
1. சீடரோடு இயங்கியது 2 வருடம் மற்று சில நாட்கள் 

 2.ஞானஸ்நானி யோவான் இயங்கிய  போதே ஏசு சீடர்கள் சேர்த்து இயக்கம் ஆரம்பம்

 3.ஏசு இயக்கம்  கலிலேயா-யூதேயாவிற்கும் மாறி  மாறி பயணித்து இயங்கினார்.


 4.கடைசி 7 - 8 மாதங்கள்
யூதேயா- ஜெருசலேமில் தான்.




 5.  ஏசு ஆரம்பம் முதலே தன்னை கிறிஸ்து என அடையாளம் காட்டி பகிரங்கமாய் இயங்கினார்.






6. 















ஒரு பேய் ஓட்டும் அதிசய்ம் கூடக் கிடையாது.





ஏசு பிறப்பு பற்றி மாற்கு யோவான் சுவிகளில் கிடையாது.

மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம்
1. தாய் பெத்லஹேமில் வாழ்ந்த மேரி
2 தந்தை பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்
3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீது பரம்பரை
4 தாவீது உறவு முறை தாவீது- மற்றும் படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன் வரிசையில் ஏசு
5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 41வது தலைமுறை
6 பிறந்தது பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில்
7 ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர் மன்னர் பெரிய ஏரோது- இவர் இறந்தது வ.கா.மு.4 இல்.
8 சூழ்நிலை சோகம்
9 வரலாற்று சம்பவம் ஏரோது மன்னர் இரண்டு வயதுக்கு கீழான குழந்தைகளைக் கொலை செய்தல்
10 கர்ப்ப அதிசயம் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப் கனவில் வந்ததான தேவதூதன் சொன்னதாக
11 அதிசயக் கதைகள் கிழக்கிலிருந்த நாட்டு ஜோசியர்கள் நட்சத்திரம் பார்த்து, யூதர்களின் ராஜா பிறப்பைக் கணித்து, குழந்தை காண ஜெருசலேம் வந்து ஏரோது மன்னரைப் பார்த்து, பின் பெத்லஹேம் செல்ல- மீண்டும் அதே நட்சத்திரம் தோன்றீ வழிகாட்ட ஏசு வீடி சென்று பின் நேராக தன் நாடு சென்றனர்.
12 ஏசு பிறந்த பின்னர் கனவில் எச்சரிக்கப்பட ஏரோது மன்னர் குழந்தைகளைக் கொலை செய்தற்கு முன்பே அண்டைய நாடு எகிப்து ஓடல்

13 வாழ்வு -ஆரம்பம்-பின் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப் ஏரோது மன்னருக்கு பயந்து எகிப்து நாட்டில் ஏசு வாழ்வு ஆரம்பம்.ஏரோது மரணத்திற்குப் பின் யூதேயா வராமல் கலிலேயா சென்று நாசரேத்தில் வாழ்ந்தனர்.


 லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம்
1 தாய் நாசரேத்தில் வாழ்ந்த மேரி
2 தந்தை நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்.3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-தாவீதுபரம்பரை
4 தாவீது உறவு முறை தாவீது வேறோரு வைப்பாட்டி மூலம் பெற்ற மகன் நாத்தன் வரிசையில் ஏசு
5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 57வது தலைமுறை
6 பிறந்தது பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில்
7 ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர் சிரிய நாட்டின் கவர்னர் குரேனியு என்பவர்- இவர் பதவி ஏற்றது வ.கா.6 இல்.
8 சூழ்நிலை மகிழ்ச்சி
9 வரலாற்று சம்பவம் ரோம் மன்னர் ஆகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரிய நாட்டின் கவர்னர் குரேனியு கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு (வ.கா.8)
10 கர்ப்ப அதிசயம் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட மேரியினிடம் நேரில் வந்ததான தேவதூதன்
11 அதிசயக் கதைகள் அறுவடை கால பயிரைக் காத்திட ஆடு மேய்க்கும் சிறுவர், நள்ளிறவைல் வயலில் இருந்தபோது தேவதூதர்கள் வந்து கிரேக்க மொழியில் பாடல் பாடி ஆடி கொண்டாடினர்.
12 ஏசு பிறந்த பின்னர் குடும்பத்தில் முதல் மகன் ஆண் மகன் என்பதற்காக ஜெருசலேம் யூதக் கடவுள் ஆலயத்தில் யூதப் புராண சட்டப்படி மிருகபலி கொலை செய்ய தம்பதிகள் சென்றனர்
13 வாழ்வு -ஆரம்பம்-பின் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக பெத்லஹேம் வந்து பின் மிருகக் கொலை/பலிக்காக ஜெருசலேம் சென்று வந்தபின் சொந்த ஊர் நாசரேத்தில் வாழ்ந்தனர்

    

இவை எல்லம் உண்மையான ஏச்வை அறியாமல் புனையப்பட்டதே சுவிசேகங்கள் என்றும் வரலாற்று ஏசுவை சுவிசேஷக் கதாசிரியர் அறியவில்லை எனவும் அறிஞர்கள் ஏற்கின்றனர்.
I give the Current Position of Biblical Theologians summarised by American Scholar
Professor John Hick, sums up the current position of Theological research as follows:
“The weight and extent of the strain under which Christian Belief has come can be indicated by listing aspects of Traditional Theology which are, which are in the opinion of many Theologians today [including myself], either untenable ot open to Serious Doubts.
1. There are divinely revealed truths [such as the doctrines of Trinity or the two natures of Christ]
2. God Created the physical Universe out of nothing “n’ years ago.
3. Man was created originally brought into the existence as a finitely perfect being, but rebelled against God, and the human condition has ever since been that of creatures who have fallen from grace.
4. Christ come to rescue man from his fallen plight, buying man’ [or some men’s] restoration to grace by his death on the cross.
5. Jesus was born of a Virgin mother, without human Patenity.
6. He performed miracles in which the regularities of the natural order were suspended by Divine Power.
7. His Dead Body rose from the Grave and Returned to Earthy Life.
8. All men must respond to God through Jesus Christ in order to be saved.
9. AT Death a person’s relationship to God is irrevocably fixed.
10. There are two human destinies, traditionally referred to under the symbols of Heaven and Hell. “
“God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.
கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் பெருமளவில் சிக்கலைடந்துள்ளது என்பதை பழைமைவாதிளின் அடிபடை மத உணர்வுகள் பெரும்பாலும், இன்றைய பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுக்குப்பின் ஏற்கமுடியாதது, சந்தேகத்துக்கு உரியவை என நான் உட்பட பெருமளவு பைபிளியல் அறிஞர்கள் சொலவதை பட்டியல் இடுவோம்.
1. ஏதோ தெய்வீக உண்மைகள் அடிப்படையில் இருந்தது-அதாவது மூன்று கடவுள்; மூன்றும் ஒன்றே மற்றும் ஏசு மனிதன் – தெய்வம் என்னும் கற்பனைகள்.
2. கடவுள் இத்தனை ஆண்டுகட்கு முன் வெறுமையிலுருந்து இவ்வுலகைப் படைத்தார்.
3. மனிதன் முதலில் இறப்பே இன்றி தொடர்ந்து வாழ படைக்கப்பட்டு, பின்னர் கடவுள் சொல்லை மீறியதற்காக மனிதன் அதன்பின் இந்நிலைக்கு வந்து ம்ரணமடைகிறான்.
4. கிறிஸ்து மனிடர்களின் பாவத்தை மீட்க வந்தார், தன் சிலுவை மரணம் மூலம் மனிதர்களை (அல்லது சில மனிதர்களை) மீட்டார்.
5. இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம், மனித உடலுறவின்றி பிறந்தார்.
6. இயேசு பல மேஜிக்குகள் செய்தார் என்றும் அதில் இயற்கையின் ஆற்றலை இறை சக்தியில் கட்டுப் படுத்தினார்.
7. இயேசுவின் மரணத்திற்குப்பின் இயேசுவுடைய பிணவுடல் சவக்குழியிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வந்தது.
8. உலக மாந்தர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்றப்பட இயேசு கிறிஸ்து மூலமே ஆகும்.
9. ஒரு மனிதன் மரணத்தில் அவனுக்கும் கடவுளிற்கும் ஆன உறவு மாற்றமுடியாதபடி இறுதியாகிறது.
10. மனிதன் பெரும் இரு முடிவுகள், எனகூறப்படும் சொற்கம்-நரகம் என்பவை எனகடவுளும் உலகின் மத நம்பிக்கைகளும் என இன்கிலாந்து பினிங்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கூறுகிறார். “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.

4 comments:

  1. வணக்கம் சகோ,
    நல்ல பதிவு. இயேசு என்பவர் வரலாற்றில் இல்லை என்றால் என்ன பொருள்?

    1.கிறித்தவ வேதங்களைத் தவிர சமகால ஆவணங்களில் குறிப்பிடப்படாத சம்பவங்கள் ஆதாரம் அற்றவை.

    2. இயேசு என்பவர் ஒருவர் மட்டுமல்ல,ஒருவரின் பெயரிலே பல காலங்களில் வாழும் போது யாருடைய செயல் யார் எனவே பிரித்து அறிய முடியாது.

    எழுத்தாளர் ஆச்சார்யா இத்தலைப்பில் நிறைய எழுதி இருக்கிறார்.
    http://www.truthbeknown.com/
    இந்த கருத்துகள் முக்மது(சல்) க்கும் பொருந்தும் என்பதே இராபர்ட் ஸ்பென்சரின் புத்த்கத்தின் கருத்து.
    http://www.washingtontimes.com/news/2012/may/7/seeking-facts-of-elusive-canon/?page=all
    நன்றி

    ReplyDelete
  2. ஏசு பிறந்தார் என்பது அம்புலிமாமா கதை என்றுதான் எனக்கும் தோன்றியது. ஆதாமிடம் கர்த்தர் பேசியவற்றையும், ஆதாமின் மகன்கள் பேசியவற்றையும் அப்படியே அருகிலிருந்து பார்த்தது போல் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஏசு பிறந்தது முதல் 30 வயது வரை என்ன செய்தார்? என்ன பேசினார்? என்ற விபரங்களே இல்லை. ஆனால் கிமு கிபி என்று வரலாற்றை பதிவு செய்து ஏசு பிறந்தது உண்மை என்பது போல் குழப்பியுள்ளனர்.
    மிக அருமை. தொடருங்கள்.

    ReplyDelete
  3. அபய் சரண்November 18, 2012 at 12:43 AM

    சுவிசேசங்கள் கிரேக்க மொழியில் அமையக் காரணம் என்ன? லத்தீன் மொழியில் ஏன் எழுதப்படவில்லை? சுவிசேசங்களின் காலம் கணிக்கப்பட்டுள்ளது அனுமானத்தின் அடிப்படையிலா? வேறு விஞ்ஞான பூர்வ ஆதாரங்கள் உள்ளனவா? பர்னபாஸின் சுவிசேசத்தை விவேகானந்தர் வியந்து பாராட்டி, ஒரு முறையாவது படிக்க வேண்டும் என்று ஞான தீபத்தில் எழுதியிருக்கிறார். பர்னபாஸ் சுவிசே­ம் பற்றித் தாங்கள் ஏதும் எழுதவில்லை.

    சுவிசேசம் என்று எழுதுவதைத் தவிர்க்கவும். விசேசம் என்றால் சிறப்பானது. சு முன்பு சேர்த்தால் மிகவும் என்று பொருள் வருகிறது. அவை என்ன மிகவும் சிறப்புடையனவா? அபத்தக் களஞ்சியந்தானே? பைபிள் நூல் என்றே குறிப்பிடுங்கள்.

    ReplyDelete
  4. யூதர்கள் இறந்த மனிதர் ஏசுவைத் தெரியும், தெய்வீகர் என்பது இல்லை எனத் தெரியும். சர்ச்சின் மதமாற்ற இலக்கு யூதரல்லாத புற ஜாதியினர். எனவே கிரேக்க மொழியில் ஏசுவை அறியாதவர்களால் புனையப் பட்டதே சுவிசேஷங்கள். ரோமன் ஆட்சி கைப்பாவையாய் சர்ச் மாறிய பின் லத்தீனில் 4- 5 ஆம் நூற்றாண்டில் மொழி பெயர்க்கப்பட்டது வல்காத்து ஆகும்.

    ஏன் பழைய ஏற்பாடு கூட ஒரே நேரத்தில் அதாவது பொ.மு.300 - பொ.கா. 100 இடையே எபிரேயம் கிரேக்கத்தில் எழுதப் பட்டவை தான்.

    குட் ஸ்பெல் (Good Spelle- gospel) என்னும் சொல்லிற்கு நல்ல கதை எனப் பொருள். அதை சமஸ்கிரிதம் கலந்த தமிழில் சுவி- நல்ல சேஷம்- செய்தி எனும் படியும் நற்செய்தி எனவும் தரப்படுகிறது. அவர்கள் பயன்படுத்தும் பெயரில் தான் நாமும் கூற வேண்டும்.

    பர்னபாஸின் சுவிசேசம் ஏற்கப்படாதது- அதனால் அதை நாம் தொடவில்லை, மேலும் அது 16ம் நூற்றாண்டு இஸ்லாமிய போர்ஜரி என்பர் சர்ச்சினர்.


    சார்வாகன் - ராஜா வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

    கிமு கிபி கைவிடப்பட்டு 75 வருடம் ஆனது, இந்தியாவில் பைத்தியக்காரத்தனம் தொடர்கிறது.

    சுவி கதைகளின்படு மத்தெயூ பொ.மு 6இலும். லூக்க்காவின்படு பொ.கா.7- 8 இலோ ஏசு பிறந்திருக்க வேண்டும்.

    ReplyDelete