Wednesday, April 10, 2013

"தன்னை தானே தந்தானே" கிறிஸ்து இயேசு கடவுள் மகனா? இல்லையே!

தேயிலைத் தோட்டத்திற்கு – சொர்க்க வாழ்வு என அழைத்துச் சென்று கிறிஸ்துவ வெள்ளைக்கார துரைகள், தமிழ் மக்களை கொடுமைப் படுத்தியதையும், பெண்களை கற்பழித்தல் அனைத்தையும் செய்தனர், பின் மருத்துவம், உணவு தருதல் மூலம் மதம் மாற்றினர்.
கொடுமைப் படுத்தப்பட்ட கதையைத், ” பி.ஹெச்.டேனியல் எழுதிய ‘ ரெட் டீ’1969 – ”எரியும் பனிக்காடு” நாவலைத் தழுவி படம் உருப்பெற்றது. இதற்கு முன்பு 1937 முல்க் ராஜ் ஆனந்தின் Two Leaves and a bud”” என்ற அசாம் தேயிலைத் தோட்ட கொத்தடிமைத் தொழிலாளிகளின் வாழ்க்கையினை விவரிக்கும் நாவல் உள்ளது.
இதை நடந்தபடியே சினிமாவில்- பரதேசி  படத்தில் காட்டப்பட்டுள்ளது.


இதுவரை எந்த கிற்சிதுவ சர்ச் வரலாற்றாசிரியரும் இது தவறு எனச் சொல்லவில்லை. கிறிஸ்துவ வலைதளம் பாடலைப் புகழ்வது இங்கே.
http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=2570&Itemid=287

திருநெல்வெலி சர்ச் வரலாறு, தேயிலைத் தோட்ட மதமாற்ற்ப் பிரிவினருடன் எனச் சொல்லும் சர்ச் வலைதளம்.
http://www.csitirunelveli.org/Pastorate/manjolai.html

பாடலின் வரிகளை பார்க்கலாமா?

"தன்னை தானே நமக்காக தந்தானே;மண்ணை காக்க ஒளியாக வந்தானே;மாட்டு தொழுவ கூட்டில் பிறந்த தேவ தூதனாம்-ஆட்டு மந்தையை ஓட்டி செல்லும் நல்ல ஆயனாம்"
  
"மாட்டு தொழுவ கூட்டில் பிறந்த தேவ தூதனாம்"

லுக்கா கதையில் ஏலியின் மகன் சூசை நாசரேத்துக்காரன், அவனை பெத்லகேமுக்கு வரவைக்க கி.பி. 8ல் நடந்த சென்சஸ் கதையைச் சொல்லி உள்ளார்.
ஆனால் மத்தேயூபடி பெரிய ஏரோதுவின் மரணத்திற்கு(கி.மு.4) இரண்டு வருடம் முன் பொ.மு.6இல் யாக்கோபு மகன் சூசை பெத்லகேமிலேயே வாழ்பவர் தான். எனவே மாட்டுத்தொழுவம் கதை மத்தேயுவில் கிடையாதே.
வாட்டிகன் போப்பரசரும் 2007ன் கிறிஸ்துமஸில் மத்தேயூவின்படி என மாட்டுத்தொழுவத்தை நீக்கினார்.
http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html
http://www.upi.com/Top_News/World-News/2012/11/21/Pope-Donkey-and-ox-in-manger-scene-a-myth/UPI-89431353484800/

கதை பொய் என்பதை கத்தோலிக்க போப் தெளிவாக ஏற்கிறார்.

"ஆட்டு மந்தையை ஓட்டி செல்லும் நல்ல ஆயனாம்"-
 
மாற்கு 14:48 இயேசு அவர்களைப் பார்த்து, ' கள்வனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்?49 நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக் கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால் மறைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும் ' என்றார்.50 அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.51 இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள்.52 ஆனால் அவர் துணியை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்.
ஏசுவோடே தங்கி இயங்கிய சீடர்களே ஏற்காது சிதறினர். இவர் மற்ற்வர்ளை காப்பதாவது? என்னே உளறல்.


 "தன்னை தானே தந்தானே"-இல்லையே!

மாற்கு 14:கெத்சமனித் தோட்டத்தில் இயேசு
(மத் 26:36 - 46; லூக் 22:39 - 46)
32 பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், ' நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள் ' என்று கூறி,33 பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.34அவர், ' எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள் ' என்று அவர்களிடம் கூறினார்.35 சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார்.36அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் ″ என்று கூறினார்.
 லூக்கா22;42 ' தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் ' என்று கூறினார்.43( அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார்).44 அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.
இயேசு - கைது மரணத்திலிருந்து தப்பிக்க கடவுளை வேண்டினார். 

மாற்கு15:இயேசு உயிர் விடுதல்
(மத் 27:45 - 56; லூக் 23:44 - 49; யோவா 19:28 - 30)
33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? 'என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? 'என்பது அதற்குப் பொருள்.35 சூழ நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக்கேட்டு, ' இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான் ' என்றனர்.
 மத்தேயு27;45 நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று.46 மூன்று மணியளவில் இயேசு, ' ஏலி, ஏலி லெமா சபக்தானி? ' அதாவது, ' என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்று உரத்த குரலில் கத்தினார்.47அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, ' இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் ' என்றனர்.

கடைசியில் தன் நம்பிக்கை அனைத்தும் போக கடைசியில் தூக்கு மரத்தில் தீவீரவாதியாய் மரணமடைந்தார்.

 "தன்னை தானே தந்தானே"-தியாகமாகவா மக்களைக் காப்பாற்றவா-இல்லையே!


யோனாவின் அடையாளம்
(மாற் 8:11 - 12; லூக் 11:29 - 32)
மத்தேயு12:38 அப்பொழுது மறைநூல் அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, ' போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம் ' என்றனர்.39அதற்கு அவர் கூறியது: ' இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.40 யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.
 அடையாளம் கேட்டுச் சோதித்தல்
மாற்கு8:11 பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர்.12 அவர் பெருமூச்சுவிட்டு, ' இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.13அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்.



கதைப்படி ஏசு வெள்ளி-
னி இரவு மட்டுமே, மேலும் சரி ஒரு பகல் மட்டுமே மறைந்து இருந்தார். யோனா கதைப் பொய், மாற்கில் இல்லாததை மத்தேயு தானகப் புனைந்தார் என்பதும் தெளிவு.

வெள்ளி- மறைந்து -ஞாயிறு வெளி வருவேன் எனத் தெரிந்து வெளிவந்தால் (கதை பொய்யெ ஆயினும்) அது தியாகமா?
ரோமன்5:ஆதாமும் கிறிஸ்துவும்
12 ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது: அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.13 திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது: ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை.14 ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று: இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.5 ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது.
ரோமன்5: 18 ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது.19 ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
 ஆதாமின் பாவம், இயேசுவின் மரணத்தால் தீர்ந்ததாம். ஆதாமின் பாவமே மனிதன் பூமியில் சாகக் காரணம். 
இயேசு "தன்னைத் தானே"  மரணமடைந்து போக்கினால் மனிதன் அதன் பின் மரணமே கிடையாதே! இதுவ்ம் பைபிளில் உள்ளதே
யோவான்7:46 கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.47உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே. 51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். 
58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ' 
 46. தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர். 47. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.48. ஜீவ அப்பம் நானே.49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்50. இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
58. வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.

இதை சொன்னது சக்தியுள்ள கடவுள் அல்லது குமாரன் எனில் இது நடக்கவே இல்லை.

யோவான்21:இயேசுவும் அன்புச் சீடரும்
20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ' ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ' என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ' ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ' என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ' என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ' என்றுதான் கூறினார்.24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்.
இந்த நான்காவது சுவிக் கதை புனையப்பட்டது ரோமன் மன்னன் ட்ராஜான் காலத்தில் பொ.கா.98ல் பதவி ஏற்றார். அன்றைய நிலையில் உலக அழிவு- இரண்டாம் வருகை எதிர்பார்க்கப்பட்டது.

இன்றும் இது கடைசி காலம் என 1900 வருடங்களாக சர்சி உளறி வருகிறது.

இயேசு - தன்னைத் தானே தந்த கடவுள் - அல்லது தேவ குமாரன் இல்லை

2 comments:

  1. தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்களுக்குத்தான் தேவகுமாரன் என்றும் கடவுளின் தூதர் என்றும் ஒளிவட்டம் போட்டுக்கொள்கிறார்கள். வேடிக்கையான கடவுள்களும் கற்பனைகளும்.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete