Monday, June 3, 2013

ஏசு கிறிஸ்து- கன்னிப் பிறப்பு கட்டுக்கதைகள்

தெய்வீகமாக்கிய பைபிள் கட்டுக்கதைகள்-1
 2005_6025
மாற்கு 6:3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.4 இயேசு அவர்களிடம், ' சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் 'என்றார்.

The  Greek Word in Mark 6:3 for brothers and sisters - that are used to designate the relationship between Jesus and the relatives have the meaning of Full Blood Brothers and Sisters Sisters in the Greek speaking World of the Evangelist's time and would naturally be taken by his Greek readers in this way. Page-337 New Catholic Encyclopedia Vol-9

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு- பற்றி தெரிந்து கொள்ள உள்ள ஒரே ஒரு வழி சுவிசேஷக் கதைகளே.இந்த நான்கு கதாசிரியர்களில் முதலில் வரையப்பட்டது மாற்கு தான். இதன் காலம் பொ.கா. 65-75ல்.
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் வேதாகம விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் "The Real Jesus" என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,
The Conclusion usually (and I think rightly) drawn from their comparitive study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, andthat two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled "Q"}  .....   Page -25.

பொ.கா. 30 அல்லது 33, சுவிசேஷக் கதைகளின் நாயகர் மரணம் அடைந்தார். இவர் சீடர்களுடன் ஒரு வருடத்திற்குக் குறைவாகவோ அல்லது இரண்டு வருடங்களோ இயங்கினார்ஏசு கதை சொல்லும் முதல் புனையல் 65-75,அதாவது ஏசு மரணத்திற்கு 4045 வருடம் பின்பு, அன்றைய சராசரி ஆயுள் 42. முதல் சுவிசேஷக் கதைகள் புனைந்தபோது கண்ட சாட்சிகள்- மிகவும் குறைவு.

மாற்கு சுவிசேஷக் கதை, கலிலேயாவைச் சேர்ந்த ஏசு, யூதேயாவின் வனாந்திரத்தில் வாழ்ந்த யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கும்ஏசு பிறப்புக் கதைகள் கிடையாது. மேலே பார்த்தபடி ஏசுவிற்கு உடன்பிறந்த சகோதர சகோதரிகள் உண்டு.இவை மத்தேயு லுக்கா சுவிசேஷங்களில் முதல் ஓரிரு அத்தியாநங்களாக உள்ளன. இவற்றை பைபிளியலில் குழந்தைப் புனையல்கள் எனப்படும்
இவை பற்றி அமெரிக்காவின் கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் புதிய கத்தோலிக்கக் கலைக் களஞ்சியம் கூறுவது-"குழந்தைப் புனையல்கள் என்பவை பிற்காலத்தில் மிகைப்படுத்தப்பட்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, சர்ச்சின் அப்போஸ்தலர் கதைகள்-யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி ஈஸ்டர் அன்று சொர்கம் சென்றார் என்பதோடு மட்டுமே இருந்தது.."
There seems to be no doubt that Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and end with Ascension. Vol-14 Page- 695-New Catholic Encyclopedia 
நிகழ்வுகள் மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம்
நிகழ்வுகள் லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம்
1.         1.தாய் பெத்லஹேமில் வாழ்ந்த மேரி
2 தந்தை பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்
3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீதுபரம்பரை
4 தாவீது உறவு முறை தாவீது- மற்றும் படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன் வரிசையில் ஏசு

5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 41வது தலைமுறை

6
பிறந்தது பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில்
7
ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர் மன்னர் பெரிய ஏரோது- இவர் இறந்தது .கா.மு.4 இல்.

8
சூழ்நிலை சோகம்

9
வரலாற்று சம்பவம் ஏரோது மன்னர் இரண்டு வயதுக்கு கீழான குழந்தைகளைக் கொலை செய்தல்

10 கர்ப்ப அதிசயம் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப் கனவில் வந்ததான தேவதூதன் சொன்னதாக

11
அதிசயக் கதைகள் கிழக்கிலிருந்த நாட்டு ஜோசியர்கள் நட்சத்திரம் பார்த்து, யூதர்களின் ராஜா பிறப்பைக் கணித்து, குழந்தை காண ஜெருசலேம் வந்து ஏரோது மன்னரைப் பார்த்து, பின் பெத்லஹேம் செல்ல- மீண்டும் அதே நட்சத்திரம் தோன்றீ வழிகாட்ட ஏசு வீடி சென்று பின் நேராக தன் நாடு சென்றனர்.

12
ஏசு பிறந்த பின்னர் கனவில் எச்சரிக்கப்பட ஏரோது மன்னர் குழந்தைகளைக் கொலை செய்தற்கு முன்பே அண்டைய நாடு எகிப்து ஓடல்
13 வாழ்வு -ஆரம்பம்-பின் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப் ஏரோது மன்னருக்கு பயந்து எகிப்து நாட்டில் ஏசு வாழ்வு ஆரம்பம்.ஏரோது மரணத்திற்குப் பின் யூதேயா வராமல் கலிலேயா சென்று நாசரேத்தில் வாழ்ந்தனர்.
1 தாய் நாசரேத்தில் வாழ்ந்த மேரி

2
தந்தை நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்.
  
3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-தாவீதுபரம்பரை

4 தாவீது உறவு முறை தாவீது வேறோரு வைப்பாட்டி மூலம் பெற்ற மகன் நாத்தன் வரிசையில் ஏசு

5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 57வது தலைமுறை

6 பிறந்தது பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில்
7 ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர் சிரிய நாட்டின் கவர்னர் குரேனியு என்பவர்- இவர் பதவி ஏற்றது .கா.6 இல்.

8
சூழ்நிலை மகிழ்ச்சி

9
வரலாற்று சம்பவம் ரோம் மன்னர் ஆகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரிய நாட்டின் கவர்னர் குரேனியு கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு (.கா.8)
10 கர்ப்ப அதிசயம் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட மேரியினிடம் நேரில் வந்ததான தேவதூதன்

11
அதிசயக் கதைகள் அறுவடை கால பயிரைக் காத்திட ஆடு மேய்க்கும் சிறுவர், நள்ளிறவைல் வயலில் இருந்தபோது தேவதூதர்கள் வந்து கிரேக்க மொழியில் பாடல் பாடி ஆடி கொண்டாடினர்.

12 ஏசு பிறந்த பின்னர் குடும்பத்தில் முதல் மகன் ஆண் மகன் என்பதற்காக ஜெருசலேம் யூதக் கடவுள் ஆலயத்தில் யூதப் புராண சட்டப்படி மிருகபலி கொலை செய்ய தம்பதிகள் சென்றனர்

13 வாழ்வு -ஆரம்பம்-பின் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக பெத்லஹேம் வந்து பின் மிருகக் கொலை/பலிக்காக ஜெருசலேம் சென்று வந்தபின் சொந்த ஊர் நாசரேத்தில் வாழ்ந்தனர்.
ChristChild2.jpg  570_bc.jpg
கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.


6 comments:

  1. தேவபிரியா சாலமன் அவர்களே,

    கர்த்தராகிய ஏசு கிறிஸ்து பூமியில் மனுஷ குமாரனாகப் பிறந்து, மனித குலத்தின் பாவத்தை எல்லாம் நீக்க தன் உயிரை சிலுவையில் நீத்தார் என்பது வரலாறு. வரலாற்றை கிறிஸ்துவினைக் கொண்டு கி.பி. , கி.மு என உலகம் சொல்கிறது.

    சுவிசேஷங்களில் முதலில் அப்போஸ்தலர் மத்தேயுவினால் 40-45ல் எழுதப்பட்டது, அதே போல யோவான் சுவியும் அப்போஸ்தல சீடரால் எழுதப்பட்டது. மாற்கு முதல் போப்-பேதுருவின் சீடர். லூக்கா பவுலின் சீடர்.

    இவற்றை எல்லாம் மறைத்து ஏன் பொய் விடுகின்றீர்.

    ReplyDelete
  2. நீங்கள் கூறீய கத்தோலிக்க கலைக்களஞ்சியம் அங்கிகாரம் பெற்றது தானா?

    மேரி நித்தியக் கன்னி என்பது எங்கள் கத்தோலிக்கத்தின் ஆழமான நம்பிக்கை.
    சீடர்கள் எழுதாவிட்டாலும் சுவிசேஷங்கள் நம்பிக்கைகுறியது- இக்கட்டுரை படியுங்கள்.
    http://www.bibleuncle.com/2009/09/blog-post.html

    ReplyDelete
  3. தோழர்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    நண்பர் ரிச்சர்ட் அவர்களெ,

    சீடர் மத்தேயு எபிரேய மொழியில் சுவிசேஷத்தை எழுதினார், என்னும் கூற்று முழுமையும் தவறு என்பது அடுத்த கட்டுரையில் தெளிவாக்கப்படும்.

    ஜான்பால் பீட்டர் அவர்களே நாம் பயன்படுத்தும் நூல்கள் எல்லாம் பெரும் மதிப்பு பெற்ற பைபிளியல் பேராசிரியர்களுடையது தான்.

    ReplyDelete
  4. அருமையான கட்டுரை பீட்டர் செல்வநாயகம் கொடுத்துள்ள கட்டுரையில் உள்ள அதே பேராசிரியர் ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் தான் மாற்கு சுவி தான் முதல் எனக் கூறி உள்ளாரே

    ReplyDelete
  5. Richard5 June 2013 19:02
    //கர்த்தராகிய ஏசு கிறிஸ்து பூமியில் மனுஷ குமாரனாகப் பிறந்து, மனித குலத்தின் பாவத்தை எல்லாம் நீக்க தன் உயிரை சிலுவையில் நீத்தார் என்பது வரலாறு.//

    இப்படி ஏசு எங்காவது சுவிசேஷத்தில் கூறி உள்ளாரா?

    ReplyDelete
  6. மேரி இரண்டு குழந்தை வைத்துள்ளாரே, ஏசு இரட்டையாய் பிறந்தாரா? யார் அந்த இரட்டை நபரில் இன்னொருவர்?

    ReplyDelete