Monday, March 31, 2014

மாற்கு சுவிசேஷமும் வரலாற்று(?) இயேசு கிறித்துவும்

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகன் இயேசு என்பவர் வாழ்ந்தார்  என்பதற்கு ஒரு வரலாற்றுச் சான்று ஏதும்  கிடையாது.  30 வாக்கில் மரணமடைந்த   இயேசு பற்றி முதலில் புனையப்பட்டது மாற்கு சுவிசேஷம். 70-75 வாக்கில். ஏசு இறந்து 40 வருடம் பின்பு தான் முதல் சுவிசேஷத்தின் பழைய வடிவம் புனையல் ஆரம்பித்தது.
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் வேதாகமவிமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்-“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.

பெரும்பாலன ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, (என் கருத்தும்-அது சரி) மாற்கு சுவி(அல்லது அது போன்றது) கதையைக் கொண்டு, இத்தோடு இயேசு சொன்னவை எனப்படும் (Q) ஒரு 50 வாக்கில் எழுந்த குறிப்புகளும் கொண்டே மத்தேயு லூக்கா சுவி கதைகள் வளர்ந்தன.

நற்செய்தி நூல்களுள் மாற்கு நற்செய்தி நூல்தான் முதலாவதாக எழுதப்பட்டது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. கி.பி.64- ஆம் ஆண்டில் இருந்து 70-ஆம் ஆண்டுக்குள் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேணடும். எருசலேம் அழிக்கப்படவிருந்த சூழலில், உரோமையரால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டக் காலத்தில், உரோமை நகரிலிருந்த மாற்கு இதனை எழுதியிருக்க வேண்டும். பேதுரு,பவுல் போனற பெருந்தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்ட காலக் கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியைத் தொகுத்து அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டியது இன்றியமையாத தேவையாகத் தெரிந்திருக்க வேண்டும்.

மாற்கு சுவியில் ஏசு பிறப்பில் அதிசயம் பற்றி ஏதும் கிடையாது. ஏசுவின் மலைப் பிரசங்கம் கிடையாது.

கலிலேயாவில் வாழ்ந்த ஏசு, 100 மைல்கள் நடந்து யோவான் ஸ்நானகனைத் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்குகிறது.

(மத் 3:13 - 17; லூக் 3:21 - 22)

மாற்கு1:.4 இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார். 9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.

பிறகு ஏசு 40 நாள் உபவாசமிருந்து வர சாத்தான் வந்து சோதிக்க யோவான் கைதாகிட கலிலேயா வந்து சீடர் சேர்க்கிறார்.

இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(மத் 4:12 - 17; லூக் 4:14 - 15) முதல் சீடர்களை அழைத்தல் (மத் 4:18 - 22; லூக் 5:1 - 11)

மாற்கு1:14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15 ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார். 16 அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தார்கள்.17 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார்.18 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

பிறகு ஏசு 40 நாள் உபவாசமிருந்து வர சாத்தான் வந்து சோதிக்க யோவான் கைதாகிட கலிலேயா வந்து சீடர் சேர்க்கிறார். பின்னர் மேலுமாக 12 சீடர் சேர்த்து முழுமையாக கலிலேயாவில் இயக்கம் நடத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகைக்கு கர்த்தர் என்னும் சிறு எல்லை தெய்வம் இருக்கும் ஒரே ஒரு இடமான ஜெருசலேம் யூதாலயத்தில், எகிப்தின் சிறு குழந்தைகளை கொலை செய்தார் என்பதற்கு நன்றியாக வருடாவருடம் ஒவ்வொரு யூதரும் ஆடு கொலை செய்து பலி தர ஜெருசலேம் செல்ல வேண்டும். மாற்கு சுவியில் ஏசு யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபின் வந்த முதல் பஸ்கா ஆடு கொலை செய்து பலி தர செல்கையில் போது கைதாகி மரணம், அதாவது ஏசு சிடரிடம் இருந்து இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவு.
The Real Jesus நூலில் பேராசிரியர் F F புரூஸ்
Whereas in the synoptic record most of Jesus’ ministry is located in Galilee, John places most of it in Jerusalem and its neighbourhood. –P.27 ஒத்த கதை சுவிகள் இயேசு பெரும்பாலும் கலிலேயாவில் சீடரோடு இயங்கியதாகச் சொல்ல, நான்காவது சுவி ஜானிலோ பெருமளவில் ஜெருசலேமிலும் யூதேயாவிலும் இயங்கியதாக என்கிறது.
பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.

மாற்கு15: 16 சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

43 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது.44 அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், ' நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள் ' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.45 அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, ' ரபி ' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.46 அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.47 அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.
ஆனால் நான்காவது சுவியான யோவான் சுவியின்படி, ஏசு கைதான மறுநாள் தான் பஸ்கா பண்டிகை. கைது செய்தது ரோமன் படைவீரர்கள், ஆயிரம் வீரர் தலைவர்.

யோவான்18:  3 படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.   
12 படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.
28 அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை.

ஆயிரம் படைவீரர் தலைவர் ஏசுவை கைது செய்யவந்தார் எனில் முழுமையாக ரோமன் கவர்னர் ஆணையில் தான்.
 
 யூதேயா ரோமன் கவர்னர் கீழ் நேர் ஆட்சியின் கீழ் இருந்தது, இங்கே ஏசு இல்லை, கைது செய்தது யூதர் என மாற்கு ஏன் பொய்யாய் மோசடியாய் புனைந்தார்.
ஏசு யோவான் ஸ்நானகன் கைதிற்குபின் தான் இயக்கம் தொடங்குவதாகவும், அடுத்து வந்த பஸ்காவில் மரணம் எனவும் மாற்கு சொல்ல, ஏசு இயக்கம் தொடங்கியபின் ஸ்நானகன் வருவதாகவும் 4ம் சுவியில் உள்ளது. ஏசு 3 பஸ்கா பண்டிகைகளுக்கு யூதேயா வருவதாகவும் கதை தருகிறார்.
Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்- ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்-
“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned.
4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கிய துகலிலேயாவி ல்என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் -ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவி யோவேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்-பின்னும் இயங்கியதாகவும்; எழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவன் 3:24- ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.//

நாம் புரிந்து கொள்வது – மாற்கு சுவிசேஷக் கதாசிரியர் இயேசு சீடர்களோடு இயங்கிய விவரங்களைக் கூட சரியாகத் தரவில்லை. 

இது வேண்டுமென்ற மோசடியா, மாற்கு கதாசிரியருக்கு உண்மை தெரியவில்லையா?


6 comments:

  1. இயேசு என ஒருவர் வாழ்ந்தாரா இல்லையா?

    தெளிவாக சொல்லுங்கள்

    ReplyDelete
  2. எல்லாமே புனைவு என்றால் பைபிளின் நோக்கம்? ஏதோ ஒரு பிரசுரகர்த்தா தனது வியாபார லாபத்திற்காக கதை எழுதியதைப் போல சித்தரித்திருக்கிறீர்களே..பைபிளின் தெளிவான நோக்கத்தைச் சொல்வீரா?

    பைபிளே கட்டுக் கதை என்றால் அதில் வரும் முகம்மது? அவரும் கட்டுக் கதையில் வரும் ஒரு புனைவுக் கதாநாயகனா?

    ReplyDelete
  3. வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
    ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.

    ReplyDelete
  4. From Facebook
    Neengal Ulaka Islamiyar விரும்பியவர்கள் உளறலாம் என்பதற்காக பொய்யை கக்கக்கூடாது. மாற்கு என்பவர் பேதுருவின் சீடனாவார்.
    பேதுரு கூறிய விடயங்களையே மாற்கு எழுதியுள்ளார்.
    அது (மாற்கு புத்தகம்) முதலில் எழுதப்பட்டிருக்கலாம்.
    அதை மற்றைய ஆசிரியர்கள் பின்பற்றியிருக்கலாம்.
    அதனால் இங்கு தவறு ஒன்றுமில்லை.
    நீங்கள் என்ன வேண்டுமானால் நம்பலாம், புதிய ஏற்பாட்டில் உள்ள அனைத்தையும் ஒன்று சேர்த்து மூல கிரேக்கம், அரேமய மூலம் வரை சரி பார்த்து பைபிளியல் அறிஞர்கள் இன்றைக்கு மொத்தமாக ஏற்பதை நீங்கள் ஏற்காவிடில் என்ன செய்வது. பேதுருவிற்கும் ஏசு சீடர்களுக்கும் கிரேக்கம் தெரிய வாய்ப்பில்லை
    பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

    "The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus."
    Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork
    அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்.

    இதோ ஒரு தமிழ் பைபிள் இணைய தளம் சொல்வது - நற்செய்தி நூல்களுள் மாற்கு நற்செய்தி நூல்தான் முதலாவதாக எழுதப்பட்டது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. கி.பி.64- ஆம் ஆண்டில் இருந்து 70-ஆம் ஆண்டுக்குள் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேணடும். எருசலேம் அழிக்கப்படவிருந்த சூழலில், உரோமையரால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டக் காலத்தில், உரோமை நகரிலிருந்த மாற்கு இதனை எழுதியிருக்க வேண்டும். பேதுரு,பவுல் போனற பெருந்தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்ட காலக் கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியைத் தொகுத்து அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டியது இன்றியமையாத தேவையாகத் தெரிந்திருக்க வேண்டும். http://pagadhu.blogspot.in/2012/09/blog-post_26.html

    பைபிள் ஒளியில் இயேசு? கிறிஸ்து?: சுவிசேஷங்கள் எழுதியது யார்

    ReplyDelete
  5. From Facebook

    Neengal Ulaka Islamiyar பேதுருவிற்கும் ஏசு சீடர்களுக்கும் கிரேக்கம் தெரிய வாய்ப்பில்லை// 250 ஆண்டுகளாக மத்திய கிழக்கு கிரேக்கர்களால் ஆட்சிபுரியப்பட்டதால்.... கிரேக்க மொழியை யூதர்கள் அறிந்திருந்தனர்.
    கி.மு 275ல் பழைய ஏற்பாடு கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
    அடுத்ததாக கலிலேய பிரதேசம் புறஜாதிகள் வாழ்ந்த இடமாகும்.
    இறுதியாக கிரேக்கர்கள் இயேசுவை சந்திக்க வந்த சந்தர்ப்பமும் உண்டு.
    மத்தேயு.... பழைய ஏற்பாட்டு வசனங்களை கிரேக்க வேதாகமத்திலிருந்தே பார்த்து எழுதியுள்ளார்.
    இதனால்....பேதுருவிற்கும் ஏசு சீடர்களுக்கும் கிரேக்கம் தெரிய வாய்ப்பில்லை....என்னும் குறிப்பு உண்மையானதல்ல.

    ReplyDelete
  6. அப்போஸ்தலர்4:13 பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்: அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டனர். பைபிளில் உள்ளதை அறிந்தும், முதல் நூற்றாண்டின் நிலைமையை ஆராய்ந்த அறிஞர்கள் கூறியது வைத்து தான் இது சொல்லப்பட்டது

    ReplyDelete