Friday, July 4, 2014

சிலுவையில் இயேசு கிறிஸ்து பேசியதாக ஏழு வசனங்கள் - பொய்கள்

 ஏசு எனப்படும் புதிய ஏற்பாடு கதை நாய்கர் கதைப்படி பொ.கா.29-30 வாக்கில் ரோமன் கவர்னர் தூக்கு மரத்தில் தொங்கவிட மரண தண்டனையில் இறந்தார். ஏசு தூக்கு மரத்தில் 3 மணி நேரம் என சில சுவிசேஷங்களும், 6 மணிநேரம் என சிலவும் தொங்கினார் என்கிறது. 

இயேசுவின் சாவு சிலுவையில் இல்லையே


 மாற்கு சுவி தான் முதலில். ஏசுவின் மரண்த்திற்கு 40 வருடம் பின்பு தான் வரையப்பட்டது.
 
சீடர்கள் ஏசுவின் கைதின்போது ஓடிவிட்டனர் என்கிறது. மாற்கு சுவியின் கிரேக்க ஏடுகள் அனைத்தும் மாற்கு 16:8 வசனத்தோடு முடிகிறது.

மாற்கு 16:

1 ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் அவரது உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர்.2 வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள்.3 ' கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்? ' என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள்.4 ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல்.5 பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள்.6 அவர் அவர்களிடம், ' திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம்.7 நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ' உங்களுக்கு முன்பாக அவர் லிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள் ' எனச் சொல்லுங்கள் ' என்றார்.8 அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்.
சீடர்கள் சுவி கதைகள்படி - எப்படி நடந்து கொண்டனர் என்பதைக் காணலாம்.
எகிப்திலிருந்து திரும்பி வருதல்

மாற்கு 14: 45 அவன் இயேசுவிடம் வந்து அவரை முத்தமிட்டு “போதகரே” என்றான். 46 உடனே அவர்கள் இயேசுவின் மேல் கை போட்டுக் கைது செய்தனர். 47 இயேசுவின் அருகில் நின்ற ஒரு சீஷன் தன் வாளை உருவி இயேசுவைப் பிடித்தவனின் காதினை அறுத்தான். காது அறுபட்டவன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரன். 48 இயேசுவோ, “ஒரு குற்றவாளியைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாளோடும் தடிகளோடும் வந்துள்ளீர்கள். 49 நான் எப்போதும் உங்கள் மத்தியில் ஆலயத்தில்தானே உபதேசம் செய்து கொண்டிருந்தேன். அங்கே நீங்கள் என்னைக் கைது செய்யவில்லையே. எல்லாம் எழுதப்பட்டிருக்கிறபடி நடைபெற்றது” என்றார். 50 அவரது சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.51 ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டுவிட்டு நிர்வாணமாக ஓடினான்.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் விவிலிய விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்-“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.
முதலில் வரையப்பட்ட மாற்கு சுவியின் ஆரம்ப வடிவத்தின் காலம் 65 - 75.  சர்ச் செவிவழி  கதைகள்படிமாற்கு முக்கிய சீடர் பேதுரு சீடர். 70 வாக்கில் இவருக்கு ஏசு பிறப்பு,  அதில்  அதிச்யங்கள் ஏது தெரியாதுஎழுதவில்லைகடைசி சுவிசேஷம் யோவானிலும் (பொ.கா. 100 - 120)  ஏசு பிறப்புக் கதைகள் கிடையாது.//
முதலில் சுவிசேஷங்கள் எப்படி உருவானது - சீடர்கள் நினைவில் வைத்து சொன்னதைசர்ச் சேர்த்து வரைந்தவை. 

சுவிகள்படிஏசு தான் கைதாவேன் எனப் பல முறை சொன்னதாகக் கதைஏசு சொன்னதைபுரிந்து கொள்ளவே இல்லைஆனால் அத்தனையும் நினைவில் வைத்து இருந்தினராம்,புரிந்ததையே நினைவில் வைப்பது கடினம்புரியாதவர்கள் எப்படி ..???
பேரராசிரியர் F F புரூஸ் Whereas in the synoptic record most of Jesus’ ministry is located in Galilee, John places most of it in Jerusalem and its neighbourhood. –P.27 ஒத்த கதை சுவிகள் இயேசு பெரும்பாலும் கலிலேயாவில் சீடரோடு இயங்கியதாகச் சொல்ல, நான்காவது சுவி ஜானிலோ பெருமளவில் ஜெருசலேமிலும் யூதேயாவிலும் இயங்கியதாக என்கிறது.
Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்- ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்-“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned.4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கிய து கலிலேயாவில் என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் -ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவி யோவேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்-பின்னும் இயங்கியதாகவும்; ஏழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவான் 3:24- ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.
முதலில் புனைந்த மாற்கிலும் மத்தேயுவிலும் சிலுவையில் ஏசு பேசியதக உள்ளவை
மாற்கு15:33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? 'என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? 'என்பது அதற்குப் பொருள்.35 சூழ நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக்கேட்டு, ' இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான் ' என்றனர்.36 அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, ' பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம் ' என்றார்.37 இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.
மத்தேயு27:45 நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று.46 மூன்று மணியளவில் இயேசு, ' ஏலி, ஏலி லெமா சபக்தானி? ' அதாவது, ' என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்று உரத்த குரலில் கத்தினார்.47அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, ' இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் ' என்றனர்.48 உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்.49 மற்றவர்களோ, 'பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்' என்றார்கள்.50 இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.
மாற்கு சுவியில் கைதான ஏசு திகைத்து பயந்து ஏதும் பேசாது சில்கிறார், இதை மாற்றி இரண்டாம் நூற்றாண்டில் புனையப்பட்ட லுக்கா(இதோ) யோவான் சுவியில் பலவசங்கள் ஏசு பேசியதாக புனைகிறது. இவை அனைத்தும் புனையப்பட்ட கட்டுக்கதைகள்.

http://www.cmclanka.com/Home%2002.html

1."பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" (லூக்கா 23 : 34)
இயேசு, “தந்தையே, என்னைக் கொல்கிற இந்த மக்களை மன்னித்தருளுங்கள். அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்” என்றார்(.லூக்கா 23:34)


2. இயேசு அவனை நோக்கி, “கவனி, நான் சொல்வது உண்மை. இன்று நீ என்னோடு சேர்ந்து பரலோகத்திலிருப்பாய்” என்றார்.(லூக்கா 23:43)


3.)இயேசு அவருடைய தாயைப் பார்த்தார். அவரால் பெரிதும் நேசிக்கப்பட்ட சீஷனையும் அங்கே பார்த்தார். அவர் தன் தாயிடம், “அன்பான பெண்ணே, அதோ உன் மகன்” என்றார். 27 பிறகு இயேசு தன் சீஷனிடம், “இதோ உன்னுடைய தாய்” என்றார். அதற்குப்பின் அந்த சீஷன் இயேசுவின் தாயைத் தன் வீட்டிற்குத் தன்னோடு அழைத்துச் சென்றான்.யோவான் 19:26-27  5. பின்பு எல்லாம் முடிந்தது என்பதை இயேசு அறிந்தார். வேதவாக்கியம் நிறைவேறும்பொருட்டு அவர், “நான் தாகமாயிருக்கிறேன்” என்றார்.(யோவான் 19:28)


6.  இயேசு காடியைச் சுவைத்தார். பிறகு அவர், “எல்லாம் முடிந்தது” என்றார். இயேசு தன் தலையைச் சாய்த்து இறந்துபோனார்.(யோவான் 19:30)


7. 
இயேசு, “பிதாவே, என் ஆவியை உம்மிடம் தருகிறேன்” என்னும் வார்த்தையுடன் இறந்தார்.(லூக்கா 23:46).



இயேசு உயிர்த்து எழுந்தாரா? இல்லையே! ஈஸ்டர் கட்டுக்கதைகள்



 இப்படி பிற்கால சுவியில் இருப்பதை எல்லாம் சேர்த்து அவை ஏசு பேசியதாக ஒன்று சேர்க்கும் மழுப்பலாளர், அதே மாதிரி பேதுரு ஒவ்வொரு சுவியிலும் மறுதலித்ததை தனியாகக் கூடி 8 முறை எனவும், மத்தேயுவின் ஏசுவை தாவீது சாலமன் வரிசையில் பெத்லஹேம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் பரம்பரை எனவும், லூக்காவின் நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப் மகன் (தாவிது நாத்தன் வரிசை) என ஒன்றிணைத்து, மத்தேயுவின் ஏசு ஆபிரகாமிலிருந்து 41வது தலைமுறை என முதலில் வாழ்ந்தார், பின்பு லூக்காவின்படி 57வது தலைமுறையாக வாழ்ந்தார் எனவும் ஒன்று சேர்த்து சொல்லவேண்டும். மத்தேயுவின் ஏசுவிற்கு 400 ஆண்டு பின் தான் லூக்காவின் ஏசு வழ்ந்திருக்க முடியும்.

No comments:

Post a Comment