Sunday, May 31, 2015

திருக்குறளை இழிவு படுத்தும் தமிழர்கள் - தேவநேயப் பாவாணர்

திருக்குறளை சமண நூல் என  சென்னை  கூட்ட்த்தில் எதிர்த்துக் கேட்ட மாணவி ப்ரிதிவியை வெளியேற்றியதக் கண்டித்தல் என திரு.திருவள்ளுவன் இலக்குவனார் பதிவின்  இணைப்பு கீழே.

திருவள்ளுவர் பற்றிய தவறான கருத்து தெரிவித்தமையை மறுத்ததால் கல்லூரியில் இருந்து நீக்கம்! -திருவள்ளுவர் இலக்குவனார்



 

சாந்தோம் சர்ச் பணத்தில் - திருவள்ளுவர் கிறிஸ்துவரா என முதல் நூல் ஆரம்பித்து, பின் பல வெளியிட்டு, சாந்தோம் சர்ச் 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை அமைத்து 

வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.பக்௧31 திருவள்ளுவர் கிறித்தவரா? 
கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். பக்௧83

Image result for PAVANAR Image result for PAVANAR AND BIBLE

லெமூரியா, குமரிக்கண்டம் - விஷயத்தை அடிப்படையாக வைத்து  தமிழ் உலகின் முதல் மொழி, தமிழில் இருந்து சம்ஸ்கிருதத்திற்குச் சென்ற சொற்கள், தமிழ் மன்னரை 2000 வருடம் முன்பு "அடிமை"ப் படுத்திய ஆரியர் - இது போல பல அம்புலிமாமா கதைகளை விட்டவர், ஆனால் தமிழ் பற்றாளர் எனும் மாயை ஏற்படுத்தியவர்.

கிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் சாந்தோம் சர்ச் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.-
//புலவர் தெய்வநாயகம் தம் "திருவள்ளுவர் கிறித்தவரா?" என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. //http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=201&pno=51
பாவாணர்நோக்கில் பெருமக்கள் -தீர்ப்பாளர் மகராசனார் திருவள்ளுவர்
பாவாணர் அட்டைப் படம் பற்றி புகழ்ந்தவர் உள்ளே கிறிஸ்துவச் சதி விஷத்தை ஏன் விமர்சனம் செய்யவில்லை.(விளம்பரம் தரும் முயற்சியோ )

பாவாணர் தமிழ் பற்று திருவள்ளுவரின் இக்குறளினை உறுதிப் படுத்தும் போலி நபராய் தான் வரலாறு மெய்பிக்கிறது.
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
பைபிள் வெறும் பொய்யான பகுத்தறிவுக்கு சற்றும் பொருந்தாதும், வேறும் மாயக் கதைகளில் புனையப்பட்டுள்ளது என்பதை எங்காவது சொன்னாரா? பைபைளில் உள்ள நூல்கள் எதுவுமே சொல்லப்பட்ட ஆசிரியர் எழுதவில்லை. மிகப் பிற்காலத்தில் பின்னர் வந்தவர் யாரேனும் எழுதியவை என பைபிளியல் ஆய்வுகள் இவர் காலத்திலேயே சொல்லி விட்டது.
ஏசு வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. அவர் பற்றி உள்ள கதைகள் வெற்று உயர்வு நவிற்சியாய் புனையப்பட்டவை, ஆய்வுலகில் உறுதி செய்யப் முடியாத கதைகள் என்பது பைபிளியலாளர் ஏற்றவை.
எகிப்தில் இஸ்ரேலியர் இருந்ததே இல்லை, யாத்திரை எனும் செங்கடல் வழிவிட்ட கதை முழு கட்டுக்கதை என்பதை பாவாணர் ஓரிடத்தில் சொல்லி உள்ளாரா?
பாவாணர் தமிழ்பற்று என்பது கிறிஸ்துவம் பரப்ப, தமிழர்களை கடவுளின் சமயமான மெய்யியல் ஹிந்து மதத்தை, அதனின் கல்வி நிலையாளர் பிராமணர்களை இழிவு படுத்த, எந்த ஒரு ஆதாரமும் இல்லா ஊகங்களான குமரிக் கண்டம், முச்சங்கம், எவ்வித பன்னாட்டு பல்கலைக் கழகமும் ஏற்காத வேர்சொல் மூலம் நிருபித்தல் இவை தமிழ் இளைஞர்களை முட்டாளாக்கிறது தவிர வேறு பயனில்லை.
தமிழினை ஆய்வு செய்தவரால் பைபிளை - விவிலியத்தை பற்றிய ஆய்வு முடிவுகளைப் பற்றி ஏன் சொல்லவில்லை.

G.U.Pope in English Translation Introduction.
“Thiruvalluvar worked hard to acquire knowledge by all means. Whenever a ship anchors in Mylapore coast, Valluvar’s ‘Captain’ friend would send him message about the arrival of new visitors including foreigners. Many foreigners could have travelled in his friend’s vessel and landed in Mylapore via Sri Lanka. Within me I see the picture of Thiruvalluvar talking with the Christians gathering information and knowledge. He has gathered a lot of Christian theories in general and the minute details of Alexandrian principles in particular and incorporated them in his Thirukkural. The philosophy of Christian theories from the Church situated near Valluvar’s place is present clearly in Thirukkural. Thiruvalluvar lived between 800 AD and 1000 AD. The Christian Biblical works were certainly an evidence for Valluvar’s Thirukkural. He was certainly inspired by the Bible.”


எப்போது போலியாய் ஆரியர் திராவிடர் எனும் பிளவை வளர்த்ததோ, எட்டப்பர்களும், திராவிடக் கட்சி இக்கால எட்டபர்களும் உள்ளபோது எதுவும் எழுத முடியும்.


திருவள்ளுவர் காலம் 9 - 10 ம் நூற்றாண்டு, அவர் துறைமுகமான மயிலாப்பூரில் தங்கியதால், கிறிஸ்துவ வியாபாரிகளிடம் பெற்ற பைபிள் அறிவால் தான் திருக்குறல் எழுதியிருக்க வேண்டும்- எனப் பிதற்றினார்.
( இதில் தோமோ வருகை கிடையாது.)
இதைக் கொண்டு, கிறிஸ்துவ சாந்தோம் சர்ச் - பாவாணர், அவர் சீடர் தெய்வநாயகம் கொண்டு திருவள்ளுவர் கிறிச்துவரா என்ற நூலைக் கருணனிதி வாழ்த்துரையோடு, அன்பழகன் தலைமையில் வெளியிட, பின் அருளப்பா தோமா கட்டுகதையை மிகவும் வளர்த்தார்.
தொல்லியல் ரீதியில் ஓரளவு மக்கள் குடியேற்றம் பெற்று இஸ்ரேலில் குடியேறியது பொ.மு.10 நூற்றாண்டு இறுதியில் தான், அசிரியர் படையெடுப்பில் சமாரியர், சிரியர் – கானானியர் யூதேயா நகர யூதேயா 20000 மக்கள் தொகை தொட்டு நாடு ஆனது பொ.மு.7ம் நூற்றாண்டில் தான். அதாவது விவிலியக் கதை சொல்லும் ஆபிரகாம் – மோசே – தாவீது – சாலமோன் காலங்களில் யூதேயா நாடே கிடையாது.
சாக்கடல் சுருள்களின்படி பொ.மு.100- 70 நியாயப் பிரமாண ஏடுகளில், இஸ்ரேலிற்கான எல்லை தெய்வம் யாவே தன் ஆலயம் பலிக்கு என தேர்ந்தெடுத்தது சமாரிய கெர்சிம் மலை தான், இங்கு தான் கதையின் ஆபிரகாம் ஈசாக்கை பலி தர முயன்றதும். சமாரியர் – யூதர் பிளவு பொ.மு.127ல். அப்போது நியாயப் பிரமாணம் மட்டுமே இருந்தது, அது மட்டுமே அவர்கள் பைபிள். (Torah)
பிரிவுக்கு பின் நியாயப் பிரமாணம் திரித்து மாற்றப்பட, ஜெருசலேம் – சியோன் கதைகள் உருவாயின.
ஏசு காலத்தில் பழைய ஏற்பாடு தோராவும்- தீர்க்கர் மட்டுமே. கேதுபிம் எனும் எழுத்துக்கள் சேர்க்கப் படவில்லை. ஏசு பல முறை சட்டங்களும்- தீர்க்கரும் என்பார். கதைப்படு ஏசு உயிர்த்தபின் பேசும்போது பாடல்களும் எனச் சேர்ப்பார். இது லூக்காவில் – பொ.கா. 100 வாக்கில், கேதுபிம் 2ம் நூற்றாண்டில் இணைக்கப் பட்டவை. நீதி மொழி காலம் ஏசுவின் சமகாலம் அல்லது பின்னால் தான்.
வரலாற்று ரீதியில் பழைய ஏற்பாடு உருவானது, இஸ்ரேலின் உண்மை வரலாறு அறிய – இன்று வாழும் பழைய ஏற்பாடு தொல்லியல் ஆய்வில் முன்னோடி கோபன் ஹேகன் பல்கலைக் கழக பேராசிரியர் தமஸ் எல் தாம்சன். கீழுழுள்ள் நூல் இணையத்தில் இலவசமாயும் கிடைக்கிறது.
posted simulaniously in facebook
The Mythic Past: Biblical Archaeology And The Myth Of Israel [Thomas L. Thompson]
http://www.amazon.com/The-Mythic-Past.../dp/0465006493 posted athttps://xavi.wordpress.com/2008/02/22/valluvar_solomon/




The Jewish people's historical claims to a small area of...
AMAZON.COM

பாவாணர் ஏன் அட்டை படத்தை போற்றி விளம்பரம் தந்து, உள்ளே கிருத்துவம் விஷமாய் பொய் கூறியதை பேச வில்லை. தோமோவழி கிறித்துவம் தேவநேயப் பாவாணர் - சாந்தோம் சர்ச் திட்டமோ. பாவாணர் மேலுள்ள மரியாதை போய் விட்டது.

பைபிள் கடவுள் பெயர்கள் தமிழ் மொழி பெயர்ப்பில் மறைக்கப் படுகிறதே, அதை பாவாணர் விமர்சித்து உள்ளாரா?

எல்- எல்லை இல்லாதவன், எழும்புதல் இல்லாதவர், -பிறவா யாக்கைப் பெரியோன். எல்சடை - இவர் மேல் பகுதியிலுருந்து ஆறுகள் உருவாகிறதாம். யார் ஐயா இது?
கடவுளை யாக்கோபு லிங்க வடிவில் வைத்து எண்ணெய் ,சாராயம் உற்றி அபிஷேகம் செய்ய, அவருக்கு இஸ்ரேல் எனப் பெயர் வந்ததாய் விவிலியத்தில் உள்ளதே.

ஆபிராம் என கடவுள் வழிபாட்டினன், கடவுளின் விலகிட ஆபிரகாம் என ஆனதும் பைபிள் கதையில் உள்ளதே.
Image result for சாமி சிதம்பரனார்,
பேராசிரியர் சாமி சிதம்பரனார் மாபெரும் தமிழறிஞர்-
“தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்களிடையே இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் எண்ண வேண்டும். அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை.”

சாமி சிதம்பரனார் மேலும் சொல்கிறார்:

“இந்தியாவின் அடிப்படை நாகரிகம் ஒன்றுதான் என்று கூறும் சரித்திராசிரியர்கள் உண்டு. 'இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ' என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை. இந்தக் கொள்கைக்குத் தொல்காப்பியம் ஆதரவளிக்கிறது.”

“இந்த நூலில் விளக்கப்படும் செய்திகள் கற்பனையோ, ஊகமோ அன்று. ஒவ்வொரு செய்தியும், தொல்காப்பியச் சூத்திரத்தின் மேற்கோளுடன் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சூத்திரத்தின் இறுதியிலும் அச்சூத்திரத்தின் எண், அதிகாரம், இயல் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கின்றன.” - என்றும் முன்னுரையின் இறுதியில் அழுத்தமாய்க் குறிப்பிடுகிறார் சாமி சிதம்பரனார்.
திராவிடஸ்தான் அரசியல்வியாதிகள் காலம்காலமாய் அப்பாவித் தமிழ்மக்களை ஏமாற்றி ஏய்ப்பதற்குச் சொல்லிவரும் பல பொய்கள் உடைத்தெறியப்பட்டுள்ளன.

1. நால்வகை வகுப்புப்பிரிவுகள் வெளிநாட்டினர் கொண்டுவந்ததல்ல என்ற உண்மையை புறத்திணை இயல்சூத்திர ஆதாரத்தைக் கொண்டு நிரூபிக்கிறார் ஆசிரியர். (பக்கம் - 55,56)
2. தொல்காப்பியர் 'அந்தணர் மறைத்தே ' என்று குறித்திருப்பதும், எட்டுவகை (கந்தருவம் உள்ளிட்ட) மணங்களைக் குறிப்பிட்டிருப்பதும் அவை (தொல்காப்பியர் சொல்லும் மறை என்பது) வடமொழி வேதங்கள்தாம் என்பதற்குப் போதுமான சான்றாகும். அவை தமிழ்வேதங்கள் என்பது பொருந்தாது. (பக்கம் - 81-84)
3. தொல்காப்பியம் கடவுளையும் வேறுபல தெய்வங்களையும் மறுக்கவில்லை. தொல்காப்பியர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்று துணிந்து கூறலாம். (பக்கம் - 86)
4. தொல்காப்பியர் காலத்திலே திருமால், சேயோன், வருணன், வேந்தன், கொற்றவை, சூரியன், சந்திரன், அக்கினி முதலிய தெய்வங்கள் வணங்கப்பட்டன. இன்னும் கூற்றுவன், தேவர்கள், பேய்பிசாசுகளும் இருப்பதாகவும் தமிழர்கள் நம்பினர். தெய்வ வணக்கம் தமிழ்நாட்டிலிருந்தது. தமிழர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர் என்பதற்கு இவை போன்ற பல ஆதரவுகள் தொல்காப்பியத்திலே காணப்படுகின்றன. இவ்வழக்கம் தமிழர்களிடம் இயற்கையாகவே தோன்றியதாகும். வேறு எவராலும் புகுத்தப்பட்டதும் அன்று. போதிக்கப் பட்டதும் அன்று. (பக்கம் - பக்கம் 92,93)
5. 'பண்டைத் தமிழகத்திலே உருவ வணக்கம் இருந்ததில்லை; அது இந்நாட்டிலே குடிபுகுந்த ஆரியரால் புகுத்தப்பட்ட வழக்கம் ' என்று சிலர் சொல்லுகின்றனர். இதற்கு ஆதரவு ஒன்றுமில்லை. இது வெறுப்பைத் தூண்டும் வீணான கூற்று. உருவ வணக்கமுறை எல்லா நாடுகளிலும் இருந்தது. பழைய பைபிளைப் படிப்போர் இதைக் காணலாம். பல நாட்டு வரலாறுகளிலும் இதைக் காணலாம். தமிழ்நாட்டிலும் உருவ வணக்கமுறை தொன்றுதொட்டே ஏற்பட்டிருந்தது என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாம். (பக்கம் - 94)
6. தமிழ்மொழி தொல்காப்பியத்துக்கு முன்பாகவே பிறமொழிச் சொற்களை ஏற்று வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் ஆதாரத்துடன் காட்டுகிறார்: பழந்தமிழ்ச் செல்வமாகிய தொல்காப்பியத்திலேயே பல வடசொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். திசை, பூதம், பிண்டம், ஏது (ஹேது), பயம், மந்திரம், நிமித்தம், தாபதம், அவிப்பலி, அமரர், மங்கலம், மாயம், காரணம், கருமம், கரணம், அந்தம், அந்தரம், புதல்வன், வதுவை, பதி, மாத்திரை, படலம், அதிகாரம், வைசிகள் இவைகள் எல்லாம் வடசொற்கள் என்று கருதப்படுகின்றன. இன்னும் பல வடசொற்களும் தொல்காப்பியத்தில் பலவிடங்களில் காணப்படுகின்றன. இன்றுள்ள தமிழ்நூல்களிலே தலைமையான நூல் என்று எண்ணப்படும் தொல்காப்பியத்திலேயே இவ்வாறு வடசொற்கள் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது. (பக்கம் - 130)

இறுதியாய் இன்றைய தமிழர்களுக்கு சாமி சிதம்பரனார் மிகுந்த வருத்ததுடன் கூறுவது:

“இன்று குறிக்கோளைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அடுக்குச் சொற்களைச் சேர்த்து எழுதுவதையே இலக்கியம் என்று எண்ணுகின்றனர். மற்றொரு சாரார் மறுமலர்ச்சி இலக்கியங்கள் என்ற பெயரில் எழுதும் வெறும் காமவிகாரத்தை வளர்க்கும் கட்டுக்கதைகளே இப்பொழுது மலிந்து வருகின்றன. தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு என்று எதை எதையோ எழுதிக் குவித்து வருகின்றனர். தனித்தமிழ் அன்பர்களும், காதல் வெறியர்களும் எழுதி வெளியிடும் புத்தகங்களிலே பெரும்பாலானவை தமிழையோ, தமிழ் இலக்கியங்களையோ வளர்ப்பதற்கு வழிகாட்டவேயில்லை. இவைகளிலே பெரும்பாலான புத்தகங்கள் மொழிவெறி, சாதிவெறி, இனவெறி இவைகளையே அடிப்படையாக வைத்துக்கொண்டு எழுதப்படுவன. மக்களிடம் இன்று வேரோடியிருக்கும் இத்தகைய வெறிகள் எல்லாம் அழிந்துபட வேண்டும் என்னும் ஆர்வத்தில் எழுதப்படும் புத்தகங்கள் மிகச்சிலதான்.

ஆதலால் இன்று வெளிவரும் மறுமலர்ச்சித் தமிழ்ப்புத்தகங்களிலே பல, மக்களிடம் நேசப் பான்மையை நிலைநிறுத்த உதவுவதில்லை. இதற்கு மாறாக வெறுப்பையும், விரோதப்பான்மை யையுமே வளர்த்து வருகின்றன.

 பழந்தமிழர் வரலாறுக் கருத்துகள் பல வடமொழி நூற்களை வெளிநாட்டவர் ஆராய்ந்து சொன்னவற்றின் அடிப்படையிலேயே இருக்கிறது. அது வெறும் வெறுப்பை நல்குவதாக இருப்பதையும் காண்கிறோம். அவ்வாறின்றி பழந்தமிழ் இலக்கியங்களையும் மற்ற ஆதாரங்களையும் (கல்வெட்டு, அகழ்வாராய்ச்சி) கொண்டு அதன் மூலம் தமிழர் வரலாற்றுக் கூறுகள் எடுத்துக் காட்டப்படுமாயின் மிக நன்றாக இருக்கும். 


 “தமிழகத்திலே இன்று இனவெறுப்பு தலைவிரித்தாடுகிறது. மொழிவெறுப்பு முறுக்கேறி நிற்கின்றது. நாகரிக வெறுப்பு நடனமாடுகின்றது. வரலாறு, நாகரிகம், பண்பாடு என்ற பெயர்களைச் சொல்லித் தமிழ்மக்களிடையே கலகத்தீயை மூட்டிவிடுகின்றனர் சிலர். இத்தகைய வெறுப்புத்தீ அணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழர் முன்னேற்றமடைவர்; தமிழ்மொழி வளர்ச்சியடையும்.”

இது போல பல அம்புலிமாமா கதைகளை விட்டவர், ஆனால் தமிழ் பற்றாளர் எனும் மாயை ஏற்படுத்திய்வர். போலி தேவநேயப் பாவாணர் தொல்காப்பியர் அந்தணர்- தமிழின் மூத்த குடி அந்தணர். தமிழிற்கு அதிகமாய் தொண்டு செய்துள்ளோரும், செய்துவருபவர்களும் அந்தணரே- பொய்யாய் ஆரியர் - திராவிடர் எனும் பேசும் பிதற்றலாளர்கள் விரட்டப் படவேண்டும்

No comments:

Post a Comment