Saturday, May 9, 2015

மதமாற்றம் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரி-நீதிபதி நியோகி கமிஷன்

டாக்டர் பவானி சங்கர் நியோகி என்ற மூத்த நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட அந்த கமிஷனுக்கு நியோகி உள்பட மொத்தம் ஆறு உறுப்பினர்கள். அதில் வார்தாவில் கல்லூரியில் பேராசிரியராக இருந்த எஸ்.கே. ஜார்ஜ் என்னும் காந்தியவாதியான கிறிஸ்தவரும் ஒரு உறுப்பினர். அந்த கமிஷன் 14 மாவட்டங்களுக்கும் 77 இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தியது; 770 கிராமங்களிலிருந்து வந்த 11, 360 பேரைச் சந்தித்தது; தவிர, 375 நிறுவனங்களிடமிருந்தும், தனி நபர்களிடமிருந்தும், வந்த விளக்கங்களையும், விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்தியது.
Image result for niyogi commision report   Image result for niyogi commision report
மதமாற்றத்திற்கு வெளிநாட்டிலிருந்து ஏராளமான பண உதவி கிடைக்கிறது. கிறிஸ்தவ நிறுவனங்கள் மத உரிமையைப் பயன்படுத்தி ஏராளமான, ஒன்றுமறியாத மக்களை ஏமாற்றி, ஆசை காட்டி மதம் மாற்றுகின்றன. அதாவது மதம் மாறினால் வேலை; மதம் மாறினால் மாணவர்களுக்கு இலவச ஹாஸ்டல், புத்தகம், படிப்பு, மருத்துவ உதவி என்கிற அடிப்படையில் மதம் மாற்றப்படுகிறார்கள்.

இந்த மதமாற்றம், நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரம் இல்லாமல், இதற்கு அரசியல் நோக்கமும் இருக்கிறது. நம் நாட்டு கிறிஸ்தவ நிறுவனங்கள் அனைத்துமே, அன்னிய நாட்டுச் சர்ச் ஆணைப்படிதான் நடக்கின்றன.
இதற்கெல்லாம் ஆதாரம் காட்டி, இது போன்று மோசடி செய்து, கட்டாய மதமாற்றம் செய்வதைச் சட்டப்படி தடை செய்யவேண்டும் ‘நியோகி கமிஷன்’ பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில் 1968ம் ஆண்டு மத்தியப்பிரதேச அரசு, ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. (ஏன் மத்திய பிரதேசம் 11 ஆண்டுகளுக்கு ஒன்றும் செய்யவில்லை? ஒரே காரணம் 1964 வரை நேரு அவர்களின் ஆட்சி மத்தியில் இருந்ததுதான்). ஆனால் அதற்கு முன்னாலேயே கட்டாய மதமாற்ற தடுப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது - ஒரிஸ்ஸா மாநிலம்தான். அது 1967லேயே இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்த இரண்டு சட்டங்களையும் எதிர்த்து கிறிஸ்துவ பாதிரிகள் சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடர்ந்ததில், 1977ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் இரண்டு சட்டங்களும் ‘அரசியல் சாஸானப்படி சரியானதே’ என்று தீர்ப்பு அளித்து, ‘மத சுதந்திரம் என்பது மதம் மாற்றும் சுதந்திரம் அல்ல’ என்று பட்டவர்த்தனமாகக் கூறியது. ‘கட்டாய மதமாற்றம் அல்லது ஆசை காட்டி, மோசம் செய்து மதம் மாற்றுவது சமூக அளவில் அமைதியைக் குலைக்கும். அதனால் அது போன்ற மதமாற்றங்களைத் தடை செய்வதற்கான சட்டம் இருக்கவேண்டும்’ என்று தீர்ப்பு கூறியது உச்ச நீதிமன்றம். அதன் பிறகு அருணாச்சலப் பிரதேசத்திலும் இது போன்ற கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டங்களின் மிக முக்கியமான அம்சம், யார் யாரெல்லாம் மதம் மாற்றப்படுகிறார்களோ, அவர்கள் மதம் மாறியது பற்றிய விவரம் பதிவு செய்யப்படவேண்டும் என்பதுதான். இப்படிப் பதிவு செய்வதன் அவசியத்தை, ஒரிஸ்ஸாவில் ‘ஸ்டெயின்ஸ்’ என்ற ஆஸ்திரேலிய கிறிஸ்துவ மதபோதகர் கொலை செய்யப்பட்டதை விசாரிக்க அமைக்கப்பட்ட வாத்வா கமிஷன் எடுத்துக்கூறியது. ஒரிஸ்ஸாவில் நடந்த பல மதமாற்றங்களைப் பதிவு செய்யவில்லை, அப்படி செய்திருந்தால் நிலைமை மோசமாகியிருந்திருக்காது என்பது கமிஷனின் முடிவு. அதாவது கட்டாய மதமாற்றத் தடை செய்யும் சட்டத்தை, சரிவர நிர்வாகம் செய்யவில்லை என்பதுதான் இதன் விளக்கம். இதிலிருந்து கட்டாய மதமாற்றம், தடுக்கப்படவேண்டிய ஒன்று என்பது புரியும்.
http://vijayabharatham.in/index.php/2015-01-01-06-30-50/item/783-2015-01-12-21-20-41/783-2015-01-12-21-20-41

தமிழ்நாட்டில் முதல் முறையாக மதமாற்றம் சம்பந்தமாக ஏற்பட்ட கலவரம், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த மண்டைக் காடு கலவரம். இது கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஹிந்துக்களுக்கும், ஹிந்துக்களுக்குமிடையே நடந்த கலவரம். இது நடந்தது 1982-ல். எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்து வந்த காலம். அந்தக் கலவரம் பற்றி ஆய்வு செய்ய எம்.ஜி.ஆர். ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்தார். நீதிபதி வேணுகோபால்தான் விசாரணை செய்யும் தனி நபர் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி வேணுகோபால்தான் அந்த தனிநபர் கமிஷன் என்பது மிக முக்கியம். எனென்றால், அவர் ஈ.வெ. ராமசாமி பெரியாரின் சீடர். நாத்திகர், திராவிட இயக்கத்தில் தீவிர பற்றுள்ளவர்.

மண்டைக்காடு கலவர கமிஷனின் அறிக்கையில், தீவிர விசாரணைக்குப் பின் கன்னியாகுமரியில் கிறிஸ்தவ மதமாற்றத்தின் காரணமாகத்தான் சமூக அமைதி குலைந்திருக்கிறது என்ற உண்மையை ஆதாரபூர்வமாக விளக்கிக் கூறியிருந்தார் நீதிபதி வேணுகோபால். இதுபோன்று சமூக அமைதி குலையாமல் இருக்க வேண்டுமானால், கலவரங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்றால், வேணுகோபால் அவர்கள் பரிந்துரைத்தது இதுதான்; அதாவது, ‘ஆசை காட்டி, மோசம் செய்து, கட்டாயப்படுத்தி, செய்யப்படும் தடைசெய்ய சட்டம் கொண்டுவர வேண்டும்’ - என்பதுதான். இந்த கமிஷனின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது 1984ல். எப்படிப்பட்ட சட்டம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக, அந்த சட்டத்தின் மாதிரி நகல் ஒன்றையே அந்த அறிக்கையுடன் சேர்த்து சமர்ப்பித்திருந்தார் நீதிபதி வேணுகோபால்.

எம்.ஜி.ஆர் மண்டைக்காடு கலவர கமிஷனை நியமித்து, அதன் அறிக்கை வந்தவுடன் அதை கிடப்பில் போடவில்லை. அதை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அதாவது அதில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்தார்.
ஆனால் எம்.ஜி.ஆர். அந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை உடனே கொண்டு வரவில்லை. நிறுத்தி வைத்தார். மத்தியில் ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சியாக அ.இ.அ.தி.மு.க இருந்தது. ‘காங்கிரஸ் அரசு இதுப்போல் சட்டம் கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், எம்.ஜி.ஆர். இந்த சட்டம் கொண்டுவரும் திட்டத்தைத் தள்ளி போட்டார்’ என்பது விபரம் அறிந்தவர்கள் பலருக்கும் தெரியும்.

சட்டப் பேரவையில் 31-10-2002 அன்று ஜெயலலிதா ஆட்சியில் மதமாற்றத் தடைச் சட்ட மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தி.மு.கழகமும் மற்ற எதிர்க் கட்சிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. பெரும்பான்மை காரணமாக அந்தச் சட்டம் ஆளுங் கட்சியினால் அவையிலே நிறைவேற்றப்பட்டது.

ஆனால் ஜெயலலிதா 18-5-2004 அன்று கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்து அவசரச் சட்டம் பிறப்பித்தார். 
நீதிபதி வேணுகோபால் கமிஷன் -http://idlyvadai.blogspot.in/2008/08/blog-post_25.html
நீதிபதி வேணுகோபால்தான் அந்த தனிநபர் கமிஷன் என்பது மிக முக்கியம். எனென்றால், அவர் ஈ.வெ. ராமசாமி பெரியாரின் சீடர். நாத்திகர், திராவிட இயக்கத்தில் தீவிர பற்றுள்ளவர். பல திராவிட தலைவர்கள், அறிவு ஜீவிகள் போல அவர் ஹிந்து மதத்தின் பேரில் வெறுப்பில்லாதவராக அவர் இருந்திருக்கலாம். ஆனால் அதில் அதிகமாக மரியாதை இல்லாதவர். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் எம்.ஜி.ஆர். அவரை நியமித்தார். ஹிந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் இடையே நியாயம் செய்ய பழுத்த திராவிட பண்புடைய ஒருவரை நியமித்தால்தான், சச்சரவு வராது என்பதால்தான் எம்.ஜி.ஆர் திரு. வேணுகோபால் அவர்களைத் தேர்ந்தெடுத்து, கமிஷன் நியமித்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

மண்டைக்காடு கலவர கமிஷனின் அறிக்கையில், தீவிர விசாரணைக்குப் பின் கன்னியாகுமரியில் கிறிஸ்துவ மதமாற்றத்தின் காரணமாகத்தான், சமூக அமைதி குலைந்திருக்கிறது என்ற உண்மையை, ஆதாரப்பூர்வமாக விளக்கிக் கூறியிருந்தார் நீதிபதி வேணுகோபால் அவர்கள். இதுபோன்று சமூக அமைதி குலையாமல் இருக்க வேண்டுமானால், கலவரங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்றால், வேணுகோபால் அவர்கள் பரிந்துரைத்தது இதுதான்; அதாவது 'ஆசை காட்டி, மோசம் செய்து, கட்டாயப்படுத்தி, செய்யப்படும் மதமாற்றங்களைத் தடைசெய்ய சட்டம் கொண்டுவரவேண்டும்' - என்பதுதான். இந்த கமிஷனின் அறிக்கை சவர்ப்பிக்கப்பட்டது 1984 இல். அதாவது கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னாலேயே. எப்படிப்பட்ட சட்டம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக, அந்த சட்டத்தின் மாதிரி நகல் ஒன்றையே அந்த அறிக்கையுடன் சேர்த்து சமர்ப்பித்திருந்தார் நீதிபதி வேணுகோபால் அவர்கள்.

http://tamilthamarai.com/political-science/3026-2012-08-01-16-46-48.html
அப்பா:என்ன ரமேஷ்,நம்ம தெருவில டமாரச்சத்தம்? சோப்பு விளம்பரமா?
ரமேஷ்:எதிர்வீட்டு எட்வர்டு அங்கிள் வீட்டு மொட்டைமாடியில் ஷாமியானா போட்டு அல்லேலுயாக்காரங்க கோஷம் போட்டு கொட்டடிக்கிறங்கப்பா!
அப்பா:சரிதான்,அவங்க மதச்சடங்கு போலிருக்கு.நடக்கட்டும்.
ரமேஷ்:"சாத்தானை மிதிப்போம்; தேசத்தை சுத்திகரிப்போம்"னு பாடறாங்களே,எதை சாத்தான்னு சொல்லுறாங்க? இஸ்லாத்தையா? இந்துயிசத்தையா?
அக்கா: ரமேஷ்,நான் சொல்லுறேன்.சாத்தான் அப்படீனா இஸ்லாத்தை நம்ம நாட்டில சொல்றதை கிறிஸ்தவங்க தவிர்ப்பாங்க.அது அவங்களோட யுத்த தந்திரம்.நம்ம இந்துயிசத்தை பேர் சொல்லாம இழிவு படுத்துறதுல இவங்க எக்ஸ்பர்ட்.தெரிஞ்சுக்கோ.
அம்மா:அதென்னமோ நம்ம ஸ்லோகம் சொல்லித்தர்ற மாமி வீட்டுக்குள்ள வந்து அவங்க கணவர் உடல் தேற பிரார்த்தனை செய்கிறோம்னு வந்து போறாங்களே?
ரமேஷ்:உங்க சாமி காப்பாத்தாது.ஏசு சாமிதான் காப்பாத்தும்னு சொல்லி கவலையோடு உள்ளவங்க கழுத்துல சிலுவை மாலை போட்டு சர்ச்சுக்கு ஆள் சேர்க்கிற வேலையம்மா அது.வெறும் மூளைச்சலவை.
அண்ணன்:சர்வதேச அளவுல போடப்பட்ட திட்டம் இது. 'ஜனானா ஊழியம்'னு பேரு.ஆம்பிளைங்க வீட்ல இல்லாத நேரம் பார்த்து வீட்டுப் பெண்களை குழப்பி மதமாத்துறாங்க.
ரமேஷ்:(வீட்டுக்குள் ஓடி வந்து)அண்ணா,அண்ணா,எட்வர்டு வீட்டை ஜெபவீடா மாத்தப் போறதா மைக்கில சொல்றாங்க.
அப்பா:அதெப்படி? நம்ம தெருப் பேரே பிள்ளையார் கோயில் தெரு.அப்படி இருக்க சர்செல்லாம் வந்திச்சின்னா சங்கடம் தான்.
அம்மா:ஆமாம்,ஆமாம்,எந்தத் தெருவில யார் இறந்து போனாலும் சவம் எடுக்கற வரைக்கும் கோவில் நடை சாத்தி வப்போம்;ஆனால் பக்கத்துத் தெரு சர்ச்ல தைப்பொங்கல் அன்னிக்கி எங்கிருந்தோ ஒரு சவத்தைக் கொண்டு வந்து வச்சு பிரேயர் செஞ்சாங்க.சர்ச்னா நம்ம கோயில் மாதிரி இல்லிங்க.அங்க நாள்,கிழமை ஒண்ணும் கிடையாது.
அப்பா: ஓகோ,அதனாலதான் கன்யாகுமரி ஜில்லாவுல ஒரு ஊர்ல ஒருத்தர் குடியிருக்கும் வீட்டை சர்ச்சாக்கப் பாத்தபோது அது கேஸாகி அப்படி செய்யக் கூடாதுன்னு தடுத்து கோர்ட் தீர்ப்பு சொல்லியிருக்கு போல இருக்கு.நாம் உஷாராயிடணும்.எட்வர்டைக் கூப்பிட்டு பேசிப்பார்ப்போம்;சரிப்பட்டு வரலேனா இருக்கவே இருக்கு அந்த கோர்ட் தீர்ப்பு.
பெரியப்பா,பெரியம்மா: என்ன இன்னிக்கு இங்க கோர்ட், கேஸ் ,தீர்ப்புன்னு அமளிதுமளிப்படுது?
ரமேஷ்:(வந்த பெரியவர்களை வணங்கி) நீங்களே சொல்லுங்க பெரியப்பா,என் சிநேகதன் ஒருத்தன் அவங்க அம்மாதான் உசத்தின்னு சொல்றதுக்காக எங்க அம்மா மட்டம்னு பேசறான்.அநியாயமில்லையா?
பெரியப்பா: அக்கிரமம்.உன்னை அடிதடிக்கு தூண்டுறான் அப்டீன்னுதான் ஆகுது.
ரமேஷ்: அப்படிச் சொல்லுங்க பெரியப்பா,ஹிந்து மதம் மட்டம்;எங்க மதம் தான் ஒரே வழி; அப்டீன்னு பேசறவங்களும் அப்படித்தானே?
பெரியம்மா:அப்படித்தான்.இது சுவாமி தயானந்த சரஸ்வதி போல உள்ளவங்க எல்லாம் சொல்ற உதாரணம் தானே?
அக்கா:ஆமாம் பெரியம்மா,.கண் மண் தெரியாம மதமாற்றக் கூட்டங்கள் சுற்றிகிட்டுத் திரியுது.பாருங்க எதிர்வீட்ட!
பெரியப்பா:எப்பவும் கிறிஸ்தவ மிஷனரிகள் அப்படித்தான்.என் சர்வீஸில் நான் பாத்திருக்கேன்.1928இல் திருவாங்கூர் மகாராஜா எல்லா ஹிந்துக்களையும்(ஹரிஜன் உள்பட) ஆலயப்பிரவேசம் செய்யலாம்னு சட்டம் போட்டார்.இதனால மதமாற்ற வேலைக்கு ஆபத்துன்னு பாதிரிகள் வெள்ளைக்கார அரசாங்கத்தை எச்சரிக்க இங்கிலாந்துக்கே போனாங்க.
அப்பா: 1961இல் கோவாவை பாரத ராணுவம் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து விடுவிக்கிறதுக்கு முன்னாடி கோவா பிஷப்பை அடக்கி வைத்து உத்தரவிடும்படி சொல்ல நேரு அரசு,போப்பிடம் மண்டியிடாத குறையாக கெஞ்சியது சந்தி சிரித்ததே?
அண்ணா: கல்லூரிப் பேராசிரியராக இருந்த டாக்டர் என்.ராதாகிருஷ்ணன். . .
அக்கா: யாரு? ஜனாதிபதி ஆனாரே?
அண்ணா: ஆமாம் அவர்தான். அவர் எழுதிய வேதாந்தக் கருத்துக்கள் அடங்கிய தத்துவ இயல் புத்தகங்கள் பாடநூலாவதைத் தடுத்து மறித்துக்கொண்டிருந்தது கிறிஸ்தவ ஆதிக்கம் உள்ள கல்வித்துறை.அழுதே விட்டார் ராதாக்ருஷ்ணன்.
ரமேஷ்: அது சரி,சுதந்திர பாரத அரசாங்கம் இந்துக்களை மதமாற்றச் சதியிலிருந்து காப்பாத்த எதுவுமே செய்யலியா?
பெரியப்பா: 1950 களில் நியோகி கமிஷன் வந்தது;மதமாற்றத்தடைச் சட்டம் போடச் சொல்லி சிபாரிசு செஞ்சது.ஆனா பார்லிமெண்டில் ஒரு எம்.பி. மதமாற்றத் தடைச்சட்ட தனி நபர் மசோதாவைக்கொண்டு வந்தார்.உடனே,மதர் தெரஸா நமது சுதேசிப் பிரதமர் மொரார்ஜி தேசாயை சந்தித்தார்.மசோதா சட்டமானால் அதை எதிர்த்து நான் இந்திய நாட்டை விட்டே வெளியேறிவிடுவேன் என்று மிரட்டிப் பணிய வைத்தார்னா பார்த்துக்கோயேன்?
அண்ணா: எம்.ஜி.ஆர்.ஆட்சிக் காலத்துல கூட வேணுகோபால் கமிஷன் வந்ததே? மதமாற்றம் தான் (கன்னியாக்குமரி மாவட்டத்துல மண்டைக்காடு)கலவரத்துக்குக் காரணம்;அதனால மதமாற்றங்களைத் தடை செய்யணும்னு அவர் பரிந்துரை செஞ்சாரே?
ரமேஷ்: அப்ப,போன ஆட்சிக் காலத்துல ஜெயலலிதா மேடம் மதமாற்றத்தடைச் சட்டம் கொண்டு வந்து. அப்பா: அதைத் தான் வாபஸ் வாங்கிட்டாங்களே?
ரமேஷ்: அப்டீனா மதமாற்ற விஷயத்துல அரசாங்கத்தை நம்பி பிரயோஜனமில்லை. . .
அண்ணா: படிச்சவங்க,விவரம் தெரிஞ்சவங்க தான் மத்தவங்களுக்கு விஷயங்கள எடுத்துச் சொல்லிப் புரியவைக்கணும்.
அக்கா: என்னனு?
அண்ணா:மதத்தப் பிரச்சாரம் செய்யற உரிமைய கையில வச்சுக்கிட்டு,பணம் கொடுத்து,மிரட்டி,கடன் கொடுத்து,மோசடி பண்ணி மதமாத்துறது சமூக நல்லிணக்கத்தை அழிச்சுடும்.அழிச்சுக்கிட்டு இருக்குது.ஊர்ல எல்லோரும் ஒண்ணா இருக்குறது நல்லதா,மதத்தைக் காட்டி வெறுப்பத் தூண்டி சண்டை சச்சரவுல எறங்குறது நல்லதான்னு எல்லாரையும் யோசிக்க வைக்கணும்.
ரமேஷ்:எப்படி?
அண்ணா:வீடு வீடா ஏறி இறங்கணும்.காந்திஜி,அம்பேத்கர் மாதிரி பெரியவங்கல்லாம் மதமாற்றம் பத்தி பேசியிருக்கறத வீடு வீடாப் போய் எடுத்துச் சொல்லணும்.மற்ற அனைவரும்:அது சரிதான்.அப்படியே செய்வோம்!
நன்றி:விஜயபாரதம் 
நன்றி வீரமுனி ஸ்ரீவிலிபுத்தூர்

No comments:

Post a Comment