Sunday, April 16, 2017

Pastor and 17 Christians attack police when they Stop illegal assembly at Hindu God worship place

Police injured inChristians Attack.
Police stopped their Assembly of  False Dead man worship  in a place originally Hindus worship the God Almighy the creator
மலை ஆக்கிரமிப்பு மோதல் தடுக்க போலீஸ் குவிப்பு

பதிவு செய்த நாள்

17ஏப்
2017 
00:45


திருக்கழுக்குன்றம்;ஆக்கிரமிப்பு மலை பிரச்னை தொடர்பாக, மோதல் ஏற்படலாம் என்பதால், அழகுசமுத்திரத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.திருக்கழுக்குன்றம் அருகே அழகுசமுத்திரம் உள்ளது. இக்கிராமத்தை ஒட்டியே சோகண்டி கிராமத்தில், அழகுசமுத்திர மலையை ஆக்கிரமித்து, ஒரு சமூகத்தினர் வழிபாடு தலம் உருவாக்கினர். தொடர்ந்து வழிபட்டு வந்தனர். இதற்கு, அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, கடந்த டிசம்பர் மாதம், திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன், ஆக்கிரமிப்பை அகற்ற உத்திரவிட்டார். தொடர்ந்து, ஆக்கிரமிப்பை அகற்றி, வருவாய் துறையினர் அறிவிப்பு பலகை வைத்தனர்.இந்நிலையில், நேற்று நடந்த விழாவுக்காக, மேற்கண்ட சமூகத்தினர், மலையில் அமைக்கப்பட்டுள்ள வழிபாடு தலம் செல்ல முயன்றதாக தெரிகிறது. இதற்கு, பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும், பிரச்னை ஏற்படாமல் இருக்க, செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசார், அந்த பகுதியில் குவிக்கப்பட்டு, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.காவல் துறையிடம் கேட்டபோது 'அசம்பாவிதங்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.

மலைக்காக நடந்த மோதலில் 3 போலீஸ் காயம்


செங்கல்பட்டு அருகே சோகண்டி கிராம மலையில் வழிபாடு நடத்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள் என இரு மதத்தினருக்கும் தடை விதிக்கப்படுவதாக கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த மலையில் வழிபாடு நடத்துவது தொடர்பாக ஏற்கெனவே இரு மதத்தினருக்கும் மோதல் நிலவி வரும் சூழலில், புனித வெள்ளியையொ‌ட்டி கிறிஸ்துவர்கள் அங்கு வழிபாடு நடத்தினர். இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு சென்ற வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும், கிறிஸ்துவர்களின் பிரார்த்தனையை முடித்து, அனைவரையும் வெளியேற்றினர்.
இதனால் அதிருப்தி அடைந்த சிலர், மலையடிவாரத்தில் அமர்ந்து போ‌ராட்டத்தில் ஈடுபட்டனர்.‌ இதற்கிடையே, அத்துமீறி தேவாலயத்திற்குள் நுழைந்து வழிபாட்டை சீர்குலைத்ததாக வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிருஸ்தவ நல்லிணக்க தலைவர் இருதயராஜ் தலைமையில் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்கள் மலை மீது செ‌ல்வதைத் தடுக்கும் வகையில், அங்கு வட்டாட்சியர் தலைமையில் அகழி வெட்டப்பட்டது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 3 காவலர்கள் காயமடைந்தனர். காயமடைந்த காவலர்கள் தியாகராஜன், வெங்கடாஜலபதி, சதீஷ் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment