Monday, March 12, 2018

ஆசிரியர் அந்தோணிசாமி பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டி மாணவிகளை நிர்வாணமாக செல்போனில் வீடியோ

நெல்லையில் வகுப்பறையில் மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய ஆசிரியர் கைது

நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை, வகுப்பறையில் வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியின் கணினி ஆசிரியராக இருப்பவர் அந்தோணிசாமி. இவர் 3 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு பயின்ற மாணவிகளிடம், தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டி முத்தமிடுவது, பாலியல் ரீதியில் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் அப்பாவி மாணவிகளை நிர்வாணமாக செல்போனில் வீடியோ பதிவு செய்தும் ஆசிரியர் வைத்துள்ளார். அத்துடன் வகுப்பறையில் யாரும் இல்லாத போது மாணவிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி, செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், 3 மாதங்களுக்கு முன் தனது செல்போனை பழுதுநீக்குவதற்காக பணகுடியில் உள்ள கடையில் ஆசிரியல் அந்தோணிசாமி கொடுத்துள்ளார். மெமரி கார்டை ஆய்வு செய்தபோது,
பள்ளி மாணவிகளை ஆசிரியர் அந்தோனிசாமி நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது.


அத்துடன், அந்த காட்சிகளை அந்த கடைக்காரர் தனது நண்பர்களுக்கும் செல்போனில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சியை வைத்து ஆசிரியர் அந்தோணிசாமியை, செல்போன் கடைக்காரரின் நண்பர்கள் சிலர், மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய தொகை கேட்டதால், அந்தோணிசாமி பணம் தர மறுத்துள்ளார்.
இதையடுத்து, ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சிகளை அவர்களில் சிலர் பணகுடி போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினரிடம் புகாரைப் பெற்ற பணகுடி போலீசார், அந்தோணிசாமியை கைது செய்துள்ளனர்.

வேலியே பயிரை மேய்ந்தது... பெயிலாக்கி விடுவதாக மிரட்டி மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியர் கைது. 


2018-03-09@ 17:34:46

பணகுடி: பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியராக இருப்பவர் அந்தோணிசாமி. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அதே ஊரில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்றில் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு படித்து வந்த மாணவிகளிடம் கணினி தேர்வில் தோல்வியடைய செய்து விடவேன் என மிரட்டி முத்தமிடுவது, பாலியல் ரீதியில் துன்புறுத்துவது போன்ற இழி செயல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் வகுப்பறையில் யாரும் இல்லாத போது மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை தனது மொபைலில் வீடியோ பதிவு செய்துள்ளார். அப்பாவி மாணவிகளை நிர்வாணமாக்கி அந்த வீடியோக்களையும் தனது போனில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் அவரது மொபைல் ரிப்பேர் ஆனது. இதனையடுத்து போனை ரிப்பேர் செய்ய பணகுடியில் உள்ள கடை ஒன்றில் ஆசிரியர் அந்தோனிசாமி கொடுத்துள்ளார். அந்த கடைக்காரர் அந்தோணிசாமியின் மொபைலில் இருந்த மெமரி கார்டை ஆராய்ந்த போது, ஆசிரியர் அந்தோனிசாமி
பள்ளி மாணவிகளிடம் நடத்திய காம களியாட்டங்கள் இருக்கும் வீடியோக்களை பார்த்து விட்டார். ஆனால் கல்நெஞ்சம் படைத்த அந்த கடைகாரரோ அந்த காட்சிகளை தனது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகளை வைத்து அந்தோணிசாமியை, செல்போன் கடைக்காரரின் நண்பர்கள் சிலர், மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய தொகையை அவர்கள் கேட்டதால் அந்தோணிசாமி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த அவர்கள் நல்லவர்கள் போல மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சிகளை பணகுடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் புகார் பெற்ற போலீஸார், அந்தோனிசாமியை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=382773
https://www.polimernews.com/view/2255-Teacher-arrested-for-video-recording-the-girl-students-and-sexual-harrasment
Thanks Shri. Vedam Vedaprakash on photos of School - https://christianityindia.wordpress.com/2018/03/11/habitual-rapist-escaped-by-not-registering-case-under-relevant-act/

No comments:

Post a Comment