Monday, October 15, 2018

பைபிளை வரலாற்று ஆசிரியர் ஏன் நிராகரிக்கின்றனர்

எபிரேய பைபிளின் அடிப்படை, கானான் மண்ணின் அன்னியர்களான எபிரேயர்கள்  வந்தேறிகளாய் நுழைந்து, மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை, இன அழிப்பு செய்து, இஸ்ரேலிற்கான தெய்வம் யாவே கர்த்தர் சொன்னபடி கன்னிப் பெண்களை அனுபவிக்க கைப்பற்றி கர்த்தருக்கும் பங்கும்ம் தந்தனர்.
கதைப்படி  வந்தேறி எபிரேயகள்  யூதேயா & இஸ்ரேல் ஆட்சி உரிமை யூதா கோத்திரத்துக்கு மட்டுமே.
பைபிளின் கதைப்படி ஆபிரகாம் காலம் முதல் இன்று வரை ஒரு நாள் கூட யாவே கர்த்தர் கூறிய இடமான எகிப்தின் நைல் நதி முதல் எபிராய்த்து நதி இடை ஆன முழு பகுதி எபிரேயர்கள் வந்ததில்லை.
தொல்லியல்படி யூதேயா & இஸ்ரேல் பகுதி, நாகரீகமற்ற நாடோடிகளான கானானிய எந்பிரேய்ர்கள் ஆடு மாடு மேய்த்து வாழ்ந்து வந்தனர். ஏசுவிற்கு 200 ஆண்டு முன்பு தான் நாகரீகம் வந்தது.

 



எபிரேய பைபிள் கட்டுக் கதைகள்படி 30லட்சம் மக்கள் எகிப்திலிருந்து வந்தேறிகளாய் கானானில் மண்ணின் மைந்தர்கள் எனப் பத்து நாட்டு மக்களை இனப் படுகொலை செய்து குடியேறியதாய் கதை. 603,550." எண்ணாகமம் 1:45-46   601,730."எண்ணாகமம் 26:51 லட்சம் குடும்பம் என்றால் + பெண்கள் - குழந்தைகள், முதியோர் 6x 5 - 30,00,000 ஆகும்.
எபிரேயருக்கு இஸ்ரேலின் கடவுள் கர்த்தர் அந்த மண்ணின் மைந்தர்களை 10 நாட்டு மக்களை அழிக்க உதவியதாயும், இனப் படுகொலை நிகழ்ந்தன எனவும் பைபிள் கதை சொல்கிறது. 

ஆதியாகமம் 15:19 இந்த பூமி கேனியர்கெனிசியர்,கத்மோனியர்20 ஏத்தியர்பெரிசியர்ரெப்பாயீமியர்,21 எமோரியர்,கானானியர்கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்என்றார்.
 உபாகமம் 20:1“நீங்கள் உங்கள் எதிரிகளை எதிர்த்து, போருக்காகக் செல்லும்போது குதிரைகளையும், இரதங்ளையும், உங்களிடமிருப்பவர்களைவிட மிகுதியான ஜனங்களையும் அவர்களிடம் கண்டால், அவற்றைக் கண்டு பயப்படாதிருங்கள். ஏனென்றால் எகிப்து தேசத்திலிருந்து வெளியே அழைத்து வந்த உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு கூடவே இருக்கின்றார்
 உபாகமம் 6:10..நீங்கள் இதுவரை உருவாக்காத வளமான பெரிய நகரங்களைத் தருவார். 11 நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக்கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம்.

பைபிள் கதைப்படி பத்து நாடுகளில் சில 30 லட்சம் யூத்ர்களைவிட அதிகமான மக்கள் கொண்டது எனவும் சொல்கிறது. 10 நாடு மொத்தம் - ஒரு சில குறைவு - ஒருசில பெரிது சராசரி 25 லட்சம் எனில் கானானில் நுழைந்தபோது 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.                                                              உள்ளே  நுழைந்து 480 வருடம் பின்பு ஜெருசலேம் யாவே ஆலயம் சாலமோன் கட்டியதாய் கதை.(1ராஜாக்கள் 6:1).தாவீது காலத்து மக்கள் தொகை என பைபிள் கதைஅகள் சொல்வது 

 1 நாளாகமம் 21: எனவே தாவீது யோவாப்பிடமும், ஜனங்கள் தலைவர்களிடமும், “போய் அனைத்து இஸ்ரவேலரின் எண்ணிக்கையையும் கணக்கிடு. நாட்டிலுள்ள ஒவ்வொருவரையும் பெயர்செபா முதல் தாண் வரையுள்ள அனைவரையும் கணக்கிடு. பிறகு எனக்குச் சொல். மொத்தத்தில் ஜனங்கள் தொகை எத்தனை என்று கணக்கிட்டு எனக்குச் சொல்” என்றான். 

 அவன் தாவீதிடம் ஜனங்களின் எண்ணிக்கையைச் சொன்னான். இஸ்ரவேலில் 1,100,000 பேர் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். யூதாவில் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் 4,70,000 பேர்.


தாவீது மக்கள்  கணக்கெடுப்பு போது இஸ்ரேலில் படை வீரர்கள் மட்டுமே 15.7 லட்சம், அதிலும் இரு கோத்திரம் சேர்க்காமல் எனக் கதை. அவர்களையும் சேர்த்தும் யூதர் அல்லாதவர்கம் மற்றும் ஊன்முற்றொர் எனக் கொண்டு 20 லட்சம் குடும்பம் என்றால் 1 கோடி மக்கள் தாவீது ஆட்சியில் என ஆகும்.

தொல்லியல் அகழ்வாய்வில் இன்று உள்ள தொழில் நுட்பம் கொண்டு இஸ்ரேல், யூதேயா முழுமையாய் துல்லியமாய் சர்வே செய்து - பல பகுதிகளில் அகழ்வாய்வுகளும் முடிந்து விட்டது. இந்த ஆய்வுகளினை தொகுத்த அனைத்தையும் ஒரு டேபிளில் வரலாற்று ஆசிரியர் மரியோ லிவரேணி நூலில் தந்துள்ளது. (Page-123)
தொல்லியல் அகழ்வாய்வுபடி மொத்த கானான் பகுதிகளில் 8ம் நூற்றாண்டு இடையே (பொ.மு. 750) தான் உச்ச கட்டமாய் வளர்ச்சியும் மக்கள் தொகை அதிகமாய் வாழ்ந்தனர், அப்போது 1000க்கும் மேற்பட்ட ஊரிகளில் 3000 கிராமங்கள், சிறு ஊர்களில் மொத்தம் 4.25லட்சம் மக்கள் குடியிருந்தனர்.

பைபிள் சொல்லும்  கதைகள்படியாக 17மண்டலமாய் பிரிக்க, அதில் 3 பகுதிகள் என்றுமே எபிரேயர் கீழ் வந்ததே இல்லை. அதாவது இஸ்ரேலியர் வாழ்ந்த பகுதி மக்கள் தொகை - பெண்கள்+ குழந்தைகள், முதியோர் + வீரர் 3.6 லட்சம் மட்டுமே - 2850 பல்வேறு கிராமங்களில்.
நாம் தெளிவாய் வரலாற்று கண்ணோட்டத்தில் பார்த்தால் - கிரேக்கர் காலத்திற்குமுன் இஸ்ரேல் யூதேயா என நாடுகள் இருந்ததே இல்லை, இவை அசிரியா கீழான நியாயதிபதிகள்   கீழ்(பஞ்சாயத்து தலைவர்கள்  ) கீழான சிறு சிறு ஊர்/கிராமங்கள்.

 நாம் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பேராசிரியர்கள் நூலில் பார்ப்போம்
Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.

The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them. Page-77

எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.  Pages- 87,88

ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.

Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.  Page-77

The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle.
The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further.
It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought.  Pages 86-87.

வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை.

பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை.
இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர்.
பழைய ஏற்பாட்டின்படி கடல் இஸ்ரேலியருக்கு ஒரு வாழ்க்கைப் பட்குதியாகவே இல்லை.

இன்னுமொரு நூல் – • Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8.                            இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.
இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.                                 1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.                           2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.                                         3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.                                                                                                                                                       4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.                                                         5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.                                                                                                                                                         6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.           7. ஜெருசலேம் தேவாலயம் என ஏதும் சாலமோனால் கட்டப் படவில்லை.

No comments:

Post a Comment

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி