(Historical & Theological view based on International University researches)
Saturday, February 28, 2026
பீகார் மதுபானி மருத்துவக் கல்லூரியில் ரம்ஜான் மாதம் என மாணவர்கள் மீது முஸ்லிம் மதவெறி மிரட்டல் சர்குலர்
ரமலான் மாதத்தில் மாணவ மாணவியர் ஜோடியாகத் திரிந்தால் திருமணம் செய்து வைக்கப்படும்....புதுவிதமான எச்சரிக்கை..

மருத்துவம் படிக்க வந்தால் மதவாத திணிப்பு. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி கிடையாதா ?
ஈஷாவின் எரிவாயு மயானம் - உச்ச நீதிமன்றம் பாராட்டு
புதுடெல்லி: ஈஷா சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு மயானத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் தனிநபர் ஒருவரால் இவ்விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று (26/02/2026) இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ஈஷாவின் இச்சேவையை ஓர் புனிதமான நற்பணி என்று பாராட்டினார்.
மேலும், மனுதாரருக்கு மாற்று நிலம் வழங்குவது தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஏற்பாட்டை மேற்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஈஷா சார்பில் கட்டப்பட்ட நவீன எரிவாயு மயானத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்பில் “இவ்வழக்கில் மனுதாரருக்கு எந்தவொரு சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை. எரிவாயு மயானம் முறையான பஞ்சாயத்து அனுமதியுடன், விதிகளுக்கு உட்பட்டே கட்டப்பட்டுள்ளது. மேலும் ஒரு மயானம் கட்டப்படுவது அதுவும் எரிவாயு மயானமாக கட்டப்படுவது சமூகத்திற்கு பயன்படும், இதனை பொதுநலனுக்கு எதிரானது என்று கூற முடியாது” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரர் ஏற்கனவே தனது நிலத்தின் ஒரு பகுதியை ஈஷாவிற்கு விற்றுள்ளதைக் குறிப்பிட்டு எஞ்சிய நிலம் தொடர்பாக இரு தரப்பினரும் பேசி ஒரு சுமூகமான முடிவை எட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதனை ஏற்றுக்கொண்ட இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக தீர்க்க ஒப்புக்கொண்டனர். இதற்காக ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரனை மத்தியஸ்தராக நியமிக்க உத்தரவிட்டது.
ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள், அவர்களின் பகுதிக்கு அருகிலேயே ஒரு மயானத்தை அமைத்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, ஈஷா அறக்கட்டளை பஞ்சாயத்து அனுமதியுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட இதர அரசு துறைகளின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவீன எரிவாயு மயானத்தை அமைத்தது.
அனைத்து மக்களுக்கும் கண்ணியமான இறுதிச் சடங்குகள் மற்றும் எரியூட்டும் சேவைகளை வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், ஈஷா அறக்கட்டளை 2010-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை இயக்கி பராமரித்து வருகிறது. தற்போது சென்னை பெசன்ட் நகர், கோவை, நெய்வேலி, வேலூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் 30 மயானங்களை ஈஷா பராமரித்து வருகிறது.
இந்த மயானங்களில் அழகான பூங்காவைப் போன்று பசுமையான சூழலை உருவாக்குவதல், மயானத்தை சுற்றி அடர் மரங்களை நட்டு பராமரித்தல், முறையான நடைபாதை வசதிகளை உருவாக்குதல், சுகாதாரமான முறையில் குளியல் மற்றும் கழிவறைகளை பராமரித்தல் மற்றும் அரசின் உதவியோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாத வகையில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் எனப் பல்வேறு பணிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது. இதை ஈஷா வணிக நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது.
மேலும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசுடன் ஈஷா அறக்கட்டளை இணைந்து, குறிப்பாக ஈஷா சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியத்துடன் எந்தவித நிதிச்சுமையுமின்றி மேற்கொள்ள உதவும் வகையில் ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை’ வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தவெக ஜோசப் விஜய் உண்மையில்
கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த ’புலி’ திரைப்படம் அக். 1ஆம் தேதி வெளியானது. அதற்கு முதல் நாள் செப். 30ஆம் தேதி நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா மற்றும் புலிபடத்தின் தயாரிப்பாளர்கள் இடங்களில் வரி ஏய்ப்பு சந்தேகத்தில் வருமானத்துறை சோதனை நடத்தியது.
அச்சோதனையின் போது, புலி படத்திற்கு சம்பளமாக ரூ.16 கோடிக்கான காசோலையோடு ரூ.5 கோடியை பணமாக பெற்றதாக அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார் விஜய். 2015-16 நிதியாண்டில் கூடுதலாக ரூ.10 கோடியுடன் மொத்தம் ரூ.15 கோடியை பணமாக பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். காசோலைக்கு மட்டுமே மூலத்தில் வரிபிடித்தம் செய்யப்பட்டிருந்தது(TDS). பணமாக பெற்ற தொகை கணக்கில் காட்டப்படாததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, 2015-16 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான அறிக்கையை 29.07.16ல் தாக்கல் செய்யும் போது, 2015ல் அதிகாரிகள் சோதனையில் கண்டறிந்த பணமாக பெற்ற ரூ.15 கோடியை சேர்த்து மொத்தம் சுமார் ரூ.35,42,91,890-ஐ வருமானமாக கணக்கு காண்பித்தார் விஜய். அதில் செலவுகளாக, சொத்துக்களுக்கான தேய்மானமானம் - ரூ.89,07,814 & ‘பட வெளியீடு & ரசிகர் மன்ற செலவுகள்’ எனும் தலைப்பில் - ரூ.2,92,44,825 இரு கணக்குகள் காட்டப்பட்டுள்ளதை வரி மதிப்பீட்டு அதிகாரி ஏற்க மறுத்து விரிவான விளக்கத்தை நடிகர் விஜயிடம் கோரினார். புலி பட தயாரிப்பு நிறுவனம் தனது சம்பளத்தின் ஒரு பகுதியை ரொக்கமாக தந்த ரூ.5 கோடியில், விஜய் ரசிகர் மன்றங்களின் உறுப்பினர்களுக்கு ரூ.2 கோடியை தயாரிப்பு நிறுவனமான SKT Studios தந்துவிட்டது. பாக்கி ரூ.92,44,825-ஐ ரசிகர் மன்ற செலவுகளுக்கு தானே பணமாக கொடுத்தாக விளக்கம் அளித்தார் விஜய். இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த மதிப்பீட்டு அதிகாரி, தேய்மானமாக சொல்லப்பட்ட தொகையில் 20 சதவிகிதத்தையும் (ரூ.17,81,562), தயாரிப்பு நிறுவனம் மன்ற உறுப்பினர்களுக்கு தந்ததாக சொன்ன ரூ.2 கோடியையும், அதே மன்றங்களுக்கு விஜய் தந்ததாக சொன்ன தொகையில் 70 சதவிதத்தையும் (ரூ.64,71,377) வருமான வரி கணக்கிற்குள் கொண்டு வந்தார். மொத்தம் ரூ.38,25,44,829 வருமானத்துக்கான வரியையும், வருமானத்தை மறைத்ததற்கு தனியே அபராதத்தையும் கட்டும்படி 30.12.2017ல் விஜய்க்கு உத்தரவிட்டார். தேய்மான தொகையை வருமான கணக்கில் சேர்த்ததை மட்டும் தவிர்த்து, ரசிகர் மன்ற செலவுகள் தொடர்பான உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறையில் 25.01.2018ல் மேல்முறையீடு செய்தார் விஜய். விஜய் வீட்டில் நடந்த சோதனையில் கண்டறியப்பட்டு, அவரால் ஒப்புக்கொள்ளப்பட்ட கணக்கில் வராத ரொக்கம் ரூ.5 கோடியின் ஒரு பகுதி தான், ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் தந்த ரூ.2 கோடி என்ற விஜயின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதாவது கணக்கில் காட்டப்படாத பணமாக இருந்தாலும், ஒரே பணத்திற்கு இருமுறை வரிவிதிக்க முடியாது என்பதே. வரி மதிப்பீட்டு அதிகாரி கணக்கில் எடுத்துக்கொண்ட 70 சதவிகிதத்திலிருந்து குறைத்து 50% மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்று மேல்முறையீட்டு அதிகாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, வருமான வரித்துறை சார்பில் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கே வருமான வரித்துறை முன்வைத்த வாதங்களை பார்ப்போம்.. விஜய் வீட்டில் 2015ல் வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.5 கோடி கண்டறியப்பட்டு, அதனை அவரும் ஒப்புக்கொண்ட பின்னர், பின்யோசனையாக (afterthought), மன்ற செலவுகளுக்கு தனது சம்பளத்திலிருந்து ரூ.2 கோடியை படத்தின் தயாரிப்பு நிறுவனம் செலவிட்டதாக இப்போது விஜய் சொல்வது நம்பமுடியாத கதை, ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவும், முந்தைய கணக்கீட்டு ஆண்டுகளில் 2013-14: ரூ.5,05,019 2014-15: ரூ.4,76,440 2015-16: ரூ.7,24,971 என ரசிகர் மன்ற பட வெளியீட்டு செலவுகள் கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில், இந்த குறிப்பிட்ட ஆண்டில் மட்டும் ரூ.92,44,825 செலவாகியுள்ளதாக சொல்கிறார் விஜய். இதற்கு உரிய விளக்கம் எதையும் அவர் அளிக்கவில்லை என்று வருமான வரித்துறை வாதிட்டது. இந்த இரு மேல்முறையீட்டு வழக்குகளிலும், தான் நேரடியாக மன்றங்களுக்கு ரொக்கமாக தந்ததாக சொன்ன ரூ.92,44,825-க்கு உரிய கணக்கு தாக்கல் செய்ய முடியாததற்கு விஜய் சொன்ன காரணம்: பேனர். கட்-அவுட் கட்டுவதற்கும், பூஜை செய்வதற்கும், இனிப்புகள் & பரிசுப் பொருட்கள் தருவதற்கும், கேஸ் பலூன், மாலை, ஆரத்தி, பால் அபிஷேகம், மலர்கள் உள்ளிட்ட செலவுகளுக்கும், ஆதரவற்ற இல்லங்களின் குழந்தைகளுக்கு இலவச டிக்கெட் கொடுப்பது போன்றவற்றில் செலவிடப்பட்டது. அந்த குறிப்பிட்ட ஆண்டில் பட வெளியீட்டின்போது ரசிகர்களின் அனைத்து செலவுகளையும் முடிந்தளவு தானே ஏற்றுக்கொள்ள விஜய் விரும்பியதால், இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்தார். மேலும், விஜய் அளித்த ரசிகர் மன்ற உறுப்பினர்களின் பட்டியலின் அடிப்படையில் தயாரிப்பு நிறுவனம் ரூ.2 கோடியை அந்த பட்டியலில் உள்ள ரசிகர்களுக்கு தந்ததாக ஒப்புக்கொண்டு கடிதம் அளித்துள்ளது. அந்த கடிதத்தை வருமான வரித்துறை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விஜய் தரப்பு வாதிட்டது. சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் கண்டறியப்பட்ட பின்னர், ரசிகர் மன்ற செலவுகளாக அதனை நடிகர் விஜய் கணக்கு காட்டிய ரூ.2,92,44,825-ல் 50% மட்டுமே செலவாக கணக்கிட்டு, மீதமுள்ள 50%க்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்று 22.12.2021ல் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இந்த கட்டத்தில் தான் 10.08.2022ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கிறார் நடிகர் விஜய். அதன் வழக்கு எண்: WP-21006/2022. கணக்கில் காட்டப்படாத பணம் மீது அபராதம் விதிக்க பின்பற்றப்பட்ட நடைமுறை, அதற்குரிய சட்டவிதிகள் சொல்லும் காலவரையறைக்குள் நடத்தப்படவில்லை. அதனால் அபராதம் விதித்தது செல்லாது என்று தான் நீதிமன்றத்தை விஜய் அணுகினார். 2022ல் விசாரித்த நீதிபதி Dr.அனிதா சுமந்த் வருமான வரித்துறை அபராதம் வசூலிப்பதற்கு இடைக்கால தடை விதித்தார். 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பை தான் கடந்த 6.2.26ல் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அளித்தார். கணக்கில் காட்டப்படாத பணம் மீது வருமான வரித்துறை விதித்த அபராதம் குறித்து விஜய் தரப்பு எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிடுகிறார். நடிகர் விஜய் கணக்கில் காட்டாத பணத்தின் மீது விதிக்கப்பட்ட அபராதம், உரிய சட்டவிதிகள் சொல்லும் காலவரையறைக்குள் தான் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் விஜயின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். காலவரையறை தொடர்பான வாதத்தை தவிர்த்து வேறு ஏதேனும் வாதங்கள் இருந்தால், உரிய சட்ட அமர்வில் மனுதாரர் தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்று விரிவாக தீர்ப்பளித்துள்ளார். நடிகர் விஜயின் புலி படத்தை தயாரித்து, சம்பளமாக விஜய்க்கு ரூ.16 கோடி காசோலைகளுடன் கணக்கில் வராமல் ரொக்கமாக ரூ.5 கோடியை தந்து, அதில் விஜய் அளித்த ரசிகர் மன்ற உறுப்பினர்களின் பட்டியலில் இருந்தவர்களுக்கு ரூ.2 கோடியை தனியே தந்த SKT Studios, அன்றைய காலகட்டத்தில் நடிகர் விஜயின் மேனேஜராக இருந்த திரு.பி.டி.செல்வக்குமார் நிர்வகித்தது. இந்த வழக்கையும் அதில் வைக்கப்பட்ட வாதங்ளையும் உற்று கவனித்தால், நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் நிறுவனமாக பயன்படுத்தி வந்துள்ளாரா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.நடிகர் விஜய் ஊழல் - 2
‘குட்டி ஸ்டோரி’ புகழ் நடிகர் விஜய்யின் ஊழல் ஸ்டோரி! ’பிகில்’ பட வருமானம் தொடர்பாக 5.2.2020ல் நடிகர் விஜயின் பனையூர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அவர் ‘மாஸ்டர்’ பட ஒளிப்பதிவில் நெய்வேலியில் இருந்ததால், அங்கிருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த சோதனையின்போது ’cjv.vijay@gmail.com’ என்ற ஒரே Apple IDல் நடிகர் விஜய் பயன்படுத்தி வந்த Apple IPhoneX மற்றும் lPAD Pro சாதனங்களை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த சாதனங்களில் இருந்த தரவுகளில் ஒன்று, வேறொரு Samsung மொபைலில் குறிப்புகள் எழுத்தப்பட்டிருந்த ஒரு படத்தை தனது IPhone மூலம் 18.11.2017 அன்று எடுத்த புகைப்படம். இதில் இருந்த தரவுகளின் அடிப்படையில் விரிவான கேள்விகளை கேட்டு விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதிகாரிகள் அனுப்பிய முதல் நோட்டீசுக்கு 6.2.2020ல் விஜய் அளித்த பதில், ’இது எனது மொபைலில் எடுக்கப்பட்ட பிரிண்ட் அவுட் தான். நான் முதலீடு செய்துள்ள நிலங்கள் பற்றிய தரவு அதில் உள்ளது. தி.நகர் பாண்டி பஜாரில் மூன்றரை கிரவுண்டில் ரூ.23 கோடி, பனையூர் 3வது அவென்யூ மூன்று கிரவுண்டில் ரூ.6.5 கோடி, நீலாங்கரை Kazura Garden 4 கிரவுண்டில் ரூ.5 கோடி, 2127 சதுர அடியில் அடையார் அலுவலக ஃபிளாட்டில் ரூ.2 கோடி, படூர் 2 ஏக்கர் 65 செண்ட் நிலத்தில் ரூ.15.5 கோடி ஆகிய தரவுகள் உள்ளன. அதிலுள்ள மற்ற நில முதலீடுகள் குறித்து உடனடியாக நியாபகத்தில் இல்லை. ஒரு வார காலத்திற்குள் அந்த விவரங்களை அளிக்கிறேன்’என்றார். நடிகர் விஜயின் மொபைலிலிருந்து அதிகாரிகள் கைப்பற்றிய அந்த படத்தில், விஜய் வாங்கிய சொத்துக்களின் விவரம், அதன் மதிப்பு மற்றும் அவை வாங்கப்பட்ட தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது. 5 அசையா சொத்துக்களில் மொத்தம் ரூ.52 கோடியை முதலீடு செய்துள்ளதாக விஜய் ஒப்புக்கொண்டதன் அடிப்படையிலும், ஒரு வாரத்திற்குள் விஜய் சமர்ப்பித்த மற்ற சொத்து முதலீடுகளையும் ஆராய்ந்ததில் பல முரண்பாடுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். கைப்பற்றப்பட்ட படத்தில் குறிப்பிடப்பட்ட சொத்தின் மதிப்பைவிட அந்த சொத்து ஆவணத்தில் உள்ள மதிப்பு குறைவாக இருந்துள்ளது. அதாவது தி.நகரில் உள்ள நிலம் மற்றும் கட்டிடத்தை 11.12.2014 அன்று ரூ.16 கோடிக்கு வாங்கியதாக சொத்து ஆவணம் சொல்கிறது. ஆனால், விஜயின் மொபைலில் கைப்பற்றப்பட்ட குறிப்பில் அந்த சொத்தின் மதிப்பு ரூ.23 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டுக்கும் ரூ.7 கோடி வித்தியாசம். இதே போன்று ஆவணங்களின்படி விஜய் வாங்கிய 4 சொத்துகளின் மதிப்பு ரூ.33 கோடி என்று இருந்தாலும், கைப்பற்றப்பட்ட குறிப்பில் அவற்றின் மதிப்பு ரூ.50 கோடியாக எழுதப்பட்டிருந்தது. ஆக ரூ.16 கோடிக்கு விஜயிடம் எந்த கணக்கும் இல்லை என்பது தான் வருமான வரித்துறையினரின் குற்றச்சாட்டு. இந்த முரண்பாடு குறித்து அதிகாரிகள் அனுப்பிய இரண்டாவது நோட்டீசுக்கு 12.3.20ல் நடிகர் விஜய் இப்படி பதில் அளித்தார்.. “சொத்துக்களை வாங்குவதற்காக கேட்டபோது அதன் உரிமையாளர்கள் சொன்ன முதற்கட்ட விலையை தான் கைப்பற்றப்பட்ட குறிப்பில் நான் எழுதியுள்ளேன். உரிமையாளர்களிடம் எனது குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி முதற்கட்ட விலையிலிருந்து குறைத்து வாங்குவர். அந்த விலையை நான் பிறகு குறிப்பில் எழுதவில்லை” என்றார். முதல் நோட்டீசுக்கும் இரண்டாவது நோட்டீசுக்கும் சுமார் ஒரு மாதம் இடைவெளி என்பதால் விஜயின் பதிலை முன்னரே கணித்திருந்த அதிகாரிகள், இரண்டாவது நோட்டீசில் இன்னொரு கேள்வியையும் கேட்டிருந்தனர்.. ’கைப்பற்றப்பட்ட குறிப்பில் 2016ல் வாங்கப்பட்ட பொதூர் சொத்தின் மதிப்பு ரூ.15.50 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த குறிப்பை 2016ல் தான் நீங்கள் எழுதியிருக்க முடியும். தி.நகர் சொத்து 2014லும், நீலாங்கரை Kazura Garden சொத்து 2013லும் வாங்கப்பட்டன. ஆனால் 2016ல் பொதூர் சொத்து குறித்து எழுதும்போது ஏற்கனவே வாங்கப்பட்டிருந்த சொத்துக்களின் உண்மையான மதிப்பு திருத்தப்படாமல், ஏன் சொத்தின் ஆஃபர் விலையையே குறிப்பிட்டுள்ளீர்கள்?’ திரைப்படங்களில் கருப்புப் பண வில்லன்கள் அளிக்கும் வழக்கமான பதிலை தான் ஹீரோ விஜய் இதற்கும் அளித்தார் - ‘அந்த சொத்துக்கள் ஏற்கனவே வாங்கப்பட்டுவிட்டதால், அவற்றின் விலையை குறிப்பில் திருத்துவதற்கு மறந்து போயிருப்பேன்’ என்பதே அந்த பதில். முதல் நோட்டீசுக்கு அளித்த பதிலில், கைப்பற்றப்பட்ட குறிப்பில் இருப்பது முதலீட்டு செய்த சொத்துக்களின் மதிப்பு என்று பதிலளித்தார் விஜய். ஒரு மாதத்துக்கு பின்னர் இரண்டாவது நோட்டீசுக்கான பதிலில், அவை சொத்துக்களின் மதிப்பு அல்ல, அவற்றை வாங்குவதற்கு முன்னர் பெறப்பட்ட முதற்கட்ட விலை என்று பல்டி அடித்தார். இதனை மறுத்து, விஜயின் அலுவலகம் இயங்கிவரும் அடையாறு ஃபோர் சீசன்ஸ் வீட்டை 2007ல் ரூ.1.45 கோடிக்கு வாங்கப்பட்டதாக சொத்து ஆவணம் சொல்கிறது. ஆனால், விஜய் தனது மொபைலில் எழுதி வைத்திருந்த குறிப்பில் அதன் விலை ரூ.2 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் 2007ல் வாங்கிய சொத்தின் விலையை கூட குறித்து வைத்துள்ளார் விஜய் என்பது தெளிவாகிறது. ஆஃபர் விலையை தான் குறித்துள்ளேன், வாங்கிய சொத்தின் மதிப்பு அல்ல என விஜய் சொல்வது ஏற்க முடியாது. விஜய் எழுதி வைத்துள்ளது தான் அந்த சொத்துக்களின் உண்மையான மதிப்பு என்று அமலாக்கத்துறை வாதிட்டது. Unexplained Investment என்ற பெயரில் இந்த தொகையை 2014-15 முதல் 2017-18 வரை அந்தந்த கணக்கீட்டு ஆண்டுகளின் வருமானத்தில் சேர்த்தது வருமான வரித்துறை. இதனை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவில் அவருக்கு சாதகமாக மேல்முறையீட்டு அதிகாரி தீர்ப்பளித்தார். மேல்முறையீட்டு அதிகாரியின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். அங்கு தான் மேலே விவரிக்கப்பட்டுள்ள இந்த வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதாக ஆவணங்கள் கூறுகிறது. விஜய் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முழுமையாக விசாரிக்கவில்லை. ஆவணங்களில் கண்டறியப்பட்ட முரண்பாடுகளை மட்டும் வைத்து, சந்தேகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படுகிறது என்று சொல்லி மேல்முறையீட்டு அதிகாரியின் தீர்ப்பையே 3.12.2024ல் தீர்ப்பாயமும் உறுதி செய்தது. ஓரளவு அடிப்படை நிதி நிர்வாகம் தெரிந்தவர்கள் இந்த வழக்கு விவரங்களை பார்த்தாலே, ’சொத்துக்களில் கருப்பு பண முதலீடு’ நடைபெற்றுள்ளதை புரிந்துக்கொள்வார்கள். இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்தும் குற்றத்தை நிரூபிக்க மிகவும் அடிப்படையான விசாரணையை கூட வருமான வரித்துறை நடத்தாமல் ‘கோட்டை’ விட்டுள்ளது தெளிவாகும். இந்த பிழை தெரியாமல் நடந்தது அல்ல. டெல்லி முதலாளிகளின் கண்ணசைவில் அதன் கூலிப்படையான வருமானத்துறை செய்துள்ள ‘சமரசத்தால்’ நடிகர் விஜய் தப்பிக்க விடப்பட்டுள்ளார்.இரண்டு குழந்தைகளின் தாய் பால்மலர் மர்ம மரணம்
பால்மலர் நினைவிருக்கா உபிஸ்?! .....தீய சக்தி திமுகவின் கோர வரலாறு!
திமுக பெண் பிரமுகர் பால் மலர் கொலை வழக்கு என்னாச்சு?? By Mayura Akilan August 4, 2013
திமுக கருணாநிதியின் குடும்பத்திற்குள் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்றார். ஸ்டாலினுடன் பால்மலர் நெருக்கமாக இருப்பது கட்சியில் பலருக்கும் பிடிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஜுலை மாதம் 3ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர் வீடு திரும்பவில்லை. அதன்பின் கை, கால்ல்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டைக்குள் மணிமங்கலம் என்ற இடத்தில் பிணமாக கிடந்தார்.
சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் சென்னையில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடி காரணமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு குழந்தைகளுடன் இடம் மாறினார் குமாரவேல்.
Friday, February 27, 2026
சட்டவிரோத கிறிஸ்தவ சர்ச் கட்டுமான பணிகளை நிறுத்திட உத்தரவு- திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகிலுள்ள தெற்குஏறாந்தை
ஒன்றுபட்ட இந்து சக்தி வென்றது!!
நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகிலுள்ள தெற்குஏறாந்தை கிராமத்தில், இந்துக்கள் முழு பெரும்பான்மையாக உள்ள நிலையில், சட்டவிரோத கிறிஸ்தவ சர்ச் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி..
வருவாய்துறை உத்தரவில் காவல்துறை பாதுகாப்போடு சர்ச் கட்டுமானம் துவக்கியதை கண்டித்து, ஊர் பொதுமக்களோடு இந்துமுன்னணி நிர்வாகிகள் இணைந்து போராடினர்..
இந்நிலையில் சர்ச் கட்டுமான பணிகளை நிறுத்திட ஊராட்சி மன்ற செயலர் அறிவிப்பு வழங்கியுள்ளார்.
இதனால் சர்ச் கட்டுமான பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்ட சட்டரீதியான நீதிமன்ற நடவடிக்கையை இந்து முன்னணி வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இது ஒன்றுபட்ட இந்து சக்திக்கு கிடைத்த வெற்றி!!
கேதார்நாத் கோயில் -சுற்றுச்சூழல் மோசமடைவதாக புகார்
அதிகளவில் குப்பை சேரும் கேதார்நாத் கோயில்: சுற்றுச்சூழல் மோசமடைவதாக புகார்28 Feb 2026 Tamil Hindu
புதுடெல்லி: ஆண்டுதோறும் அதிக அளவில் கேதார்நாத் கோயில் பகுதியில் குப்பை சேர்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் கோயிலைச் சுற்றி சுற்றுச்சூழல் மோசமடைவதாக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புண்ணியத்தலங்களாக கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை உள்ளன. இவை சார்தாம் என்று அழைக்கப்படுகின்றன. இந்துக்கள் இந்த சார்தாம் கோயில்களுக்கு புனிதச் சுற்றுலா சென்று வருவதை புண்ணியமாகக் கருதுகின்றனர்.
குறிப்பாக கேதார்நாத் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இந்தக் கோயிலைச் சுற்றியும், மலைப்பகுதிகளிலும் அதிக அளவில் குப்பை சேர்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
2025-ம் ஆண்டில் மட்டும் இங்கு 21.4 மெட்ரிக் டன் குப்பை சேர்ந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 22 சதவீதம் அதிகமாகும். அதிக அளவில் இங்கு குப்பை சேர்வதால் இப்பகுதியின் சுற்றுச்சூழல் மோசமாகும் நிலை ஏற்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இங்கு வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் பொருட்களை பயன்படுத்திவிட்டு அப்படியே வீசி விடுவதால் அதிக அளவில் குப்பை சேர்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிப்பததாக அமைந்துள்ளது.
யுனெஸ்கோவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த புண்ணியத் தலத்தை குப்பை போன்ற மாசுகளில் இருந்து காக்கவேண்டும் என்ற கோரிக்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து எழுந்துள்ளது.
இந்த ஆய்வை கேதார்நாத் நகர் பஞ்சாயத்து நடத்தியுள்ளது. இதுதொடர்பாக அமித் குப்தா என்று சுற்றுச்சூழலியலாளர் கூறும்போது, “குப்பை போன்ற திடக்கழிவு மேலாண்மைக்கான வசதிகள் இருந்தபோதிலும், சரிவர அவை அகற்றப்படுவதில்லை. இது திடக் கழிவு மேலாண்மை தோல்வியைத் தெளிவாகக் காட்டுகிறது.
2025-ம் ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் இடையே சேர்ந்த 21.4 மெட்ரிக் டன் குப்பையில் வெறும் 8.7 மெட்ரிக் டன் குப்பை மட்டுமே பதப்படுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள 12.7 மெட்ரிக் டன் குப்பை, கேதார்நாத் கோயிலுக்கு அருகே உள்ள அடிப்படை முகாமின் நிலப்பரப்புகளிலோ அல்லது திறந்தவெளி இடங்களிலோ குவிந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இது மிக அதிக அளவிலான திடக்கழிவாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு உண்டாகும்” என்றார்.
இந்நிலையில் ரூ.3.13 கோடி மதிப்பிலான திடக்கழிவை பதப்படுத்தி வெளியேற்றும் கருவிகளை வாங்குவதற்காக திட்டமும் இன்னும் நிலுவையில் உள்ளதாக கேதார்நாத் கோயில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து உத்தராகண்ட் மாநிலத்தின் கர்வால் இமாலய மலைப்பகுதியில் கேதார்நாத் புனிதத் தலம் 3,583 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் மேம்பாடு, ஹெலிகாப்டர் சேவைகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டாலும், திடக்கழிவு நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாப்பாநாடு கூட்டுப் பாலியல் வன்கொடுமை - திமுக கவிதாசன் (பிணையில் வெளியே வந்த) தலைமறைவு
பாப்பாநாடு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இடைக்கால பிணையில் வெளியே வந்த திமுகவை சேர்ந்த கவிதாசன் தலைமறைவாகி உள்ளார். கவிதாசனை உடனே கைது செய்து சிறையில் அடைக்க முதல்வர், உள்துறை செயலர், DGP உள்ளிட்டோருக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மனு அனுப்பியுள்ளது.
https://x.com/chnmharish/status/2027489281317752863
இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறுவன் உட்பட 4 பேர் கைது
https://www.hindutamil.in/news/crime/1295356-4-including-minor-boy-arrested-in-rape-case.html
பில் கேட்ஸின் வாழ்க்கை case study- பணக்காரத்தனமும், கிறிஸ்துவ பாவ மன்னிப்பு எனும் நுகர்வு வாழ்க்கை
பில் கேட்ஸின் வாழ்க்கை ஒரு சிறந்த case study
எண்ணி முடியாத பணமும், யாரும் தொட முடியாத உயரமும், அசைக்க முடியாத வலிமையையும் பெற்றிருந்தும்... பணக்காரத்தனமும், கிறிஸ்துவ பாவ மன்னிப்பு எனும் நுகர்வு வாழ்க்கை
பில் கேட்ஸின் வாழ்க்கை ஒரு சிறந்த case study.பாகிஸ்தானில் வறுமையில் வாழ்பவர் 11 ஆண்டுகளில் உயர்ந்தது
கையில் இருக்கும் பொருளைக் காப்பாற்ற குறைந்தபட்சம் அது கெட்டுப்போகாமல் இருக்கத் தேவையான செயல்கள் செய்ய வேண்டும். ஒரு action தேவை. நான் அது கெட்டுப்போக எதுவும் செய்யவில்லையே, சும்மாதானே இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னாலும் அதைக் காத்துக்கொள்ள உங்கள் பங்கில் ஒரு வேலை தேவை.
உங்கள் பொருளை அழிக்க நீங்கள் எதுவுமே செய்யாமல் இருக்கும்போதே அது அழிந்துபோகும் என்றால், அதை அழிக்க நீங்கள் மும்முரமாக இருந்தால் என்னாகும்?
இதற்கு பாகிஸ்தான் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தங்களுக்கென ஒரு நாட்டைப் பெற்றுக்கொண்டு போனார்கள். அதில் மகிழ்வாக வாழ்ந்திருக்கலாம். அந்தப் பொருளை பெருக்கியிருக்கலாம். துபாய் போல வளர்ந்த நிலமாக மாற்றியிருக்கலாம்.ஆனால் உலகிற்கே பயங்கரவாதத்தை supply செய்யும் தொழிற்சாலையாக அது மாறிப்போனது. கிடைத்த நாட்டை வளர்க்க முயற்சிக்கவில்லை என்பதோடு, அதை அழிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியது பாகிஸ்தான்.
கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவு, வறுமை 29%-ஆக உயர்ந்து, மாதத்திற்கு குறைந்தபட்சம் 8,484 ரூபாய் கூட இல்லாமல் 7 கோடி மக்கள் கடும் வறுமையில் வாழ்வதாக Times of India சொல்கிறது. 21 ஆண்டுகளில் இல்லாத அளவு, வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.1%-ஆக எகிறியிருக்கிறது.
இதற்கெல்லாம் யார் காரணம்? என்றைக்காவது இந்தியர்கள் உடலில் குண்டைக் கட்டிக்கொண்டுபோய் பாகிஸ்தானில் வெடிக்கச் செய்திருக்கிறார்களா? சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாவாசிகளை மனைவி கண்முன் சுட்டிருக்கிறோமா? கிடைத்த பொருளை பாதுகாக்கவே தனியான வேலை தேவைப்படும்போது அதை அழிக்க ஒரு நாடே முயன்று, இப்போது அதில் வெற்றியும் பெற்று, இன்று பிச்சைக்கார நாடாய் ரோட்டில் நிற்கிறது. பாலஸ்தீனில் நடந்தது இதேதான்.
பயங்கரவாதம் தவிர்ப்போம், தோழர்.











































