Saturday, December 24, 2022

ஈ.வெ.ராமசாமி மணியம்மையை திருமணம் கண்டித்து, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் கூறியது

சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான
மூவலூர் ராமாமிர்தம் அம்மாள்
13.11.1938ல்
ஈ.வெ.ராமசாமிக்கு #பெரியார் என்ற பட்டம் கொடுத்தவர்களில் ஒருவர்!
அதே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
1948ஆம் ஆண்டில் ஈ.வெ.ராமசாமி(வயது 70) கொஞ்சம் கூட புத்தியில்லாமல்
31 வயது மணியம்மையை திருமணம் செய்ததை பெண்ணடிமைத்தனமாகவே பார்த்தார்
மற்றவர்களுக்கொரு நீதி,
திராவிட அமைப்பு பேர்வழிகளுக்கு ஒரு நீதி என்கிற
#மகா_அயோக்கியத்தனமான_திராவிட கொள்கையை ஏற்க மறுத்தார் அவர்.
எவ்வளவுதான் 'பெண் விடுதலை' என பேசினாலும்
தனக்கென்று வருகிறபோது,
தான் கூறியதையே காற்றில் பறக்கவிடுகிற பித்தலாட்டக் குணத்தை கொண்டிருந்த ஈ.வெ.ராமசாமியை கண்டித்து,
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் கூறியது
👇👇👇👇
"சொத்தைப் பாதுகாக்கவோ, வாரிசுக்காகவோதான் ஒரு ஏற்பாடு தேவை” என்றால்
எதற்காக சின்னப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும்?
இயக்கத்திலே இருந்து வரும் என்னைப் போன்ற கிழவிகளை திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே?" என்று ஈவெராமசாமி நாக்கை பிடுங்கி கொள்வது போல் கேட்டவர்தான் மூவலூர் ராமாமிர்த அம்மையார். (ம.வெங்கடேசனின் 'பெரியாரின் மறுபக்கம்' – அத்தியாயம்14ல் இருந்து)
மூவலூர் ராமாமிர்த அம்மையார் கேட்டதில் தவறொன்றும் இல்லையே!?
அப்போது, மூவலூர் ராமாமிர்த அம்மையாருக்கு வயது 67.
ஈ.வெ.ராமசாமிக்கு வயது 72

இன்று பெரியார் நினவு தினம்.
1. அவர் மக்களாட்சிக்கு கடைசி வரை எதிராக இருந்தார்
2. மன்னராட்சி வேண்டும் என்று சொன்னார்.
3. எதிர்க்கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று சொன்னார்.
4. ஹிட்லரிய அழித்தொழிப்பு இனவெறி வாதத்தை தமிழகத்திற்கு அறிமுகம் செய்தார்.
5. பிராமணர்களை அடியோடு கொலை செய்ய வேண்டும் என்று பேசினார்.
6. பிராமணப் பெண்களை வேசிகள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.
7. அம்பேத்கரை காங்கிரசுக்கு விலை போனவர் என்று சொன்னார்.
8. கம்யூனிஸ்டுகளைப் பொறுக்கித் தின்னிகள் என்று சொன்னார்.
9. சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாரே தவிர, சாதி எதிர்ப்பு போராட்டம் ஒன்றைக் கூட நடத்தவில்லை.
10. இந்துக் கடவுளர்களை தொடர்ந்து இழிவு செய்தார். சீதையை சோரம் போனவள் என்று எழுதினார்.
11. காந்தி ஒழிய வேண்டும் என்று சொன்னார்.
12. இந்தியா என்ற அமைப்பிற்கே எதிராக இருந்தார்.
13. தலித் மக்கள் இடைநிலைச் சாதியினரிடம் நன்றியோடு இருக்க வேண்டும் என்று சொன்னார்.
14. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தாசானுதாசனாக இருந்தார்.
15. கம்யூனிஸ்டுகளுக்குத் துரோகம் செய்து விட்டு அன்றைய் ஆங்கில அரசு வழி காட்டுதலின்படியே நடப்போம் என்றார்.
16. ஜீவானந்தத்தை பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கேட்டு சிறையை விட்டு வெளியில் வரச் சொன்னார்.
17. தானே மன்னிப்புக் கேட்டார். (நான் சொல்வதல்ல ராஜதுரையும் கீதாவும் சொல்வது).
18 தமிழைக் காட்டு மிராண்டி மொழி என்றார்.
19. தமிழ் இலக்கியத்தைக் குப்பை என்றார்.
20 . வருவாய் உடைய ஆண்களுக்கு பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சுகம் கொடுத்து சுகம் பெற்றுச் செல்ல வேண்டும் என்று சொன்னார்.
21. மாணவர்களை முட்டிக்குக் கீழ் சுட்டிருந்தால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பிசுபிசுத்துப் போயிருக்கும் என்றார்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்
  • Like

அருமனை காமக் கொடூரன் ஸ்டீபன் கிறிஸ்துமஸ் விழாவில் ரௌடிகள் தலைவர்

 https://www.facebook.com/groups/madhyamararasiyal/permalink/3366208683696088/

ஒரு மனிதன் பொது வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும்.... மற்றவர்கள் அவரை.... அவர் சார்ந்த மதம் எது என்பதன் அடிப்படையில் அணுக முயற்சிப்பது மிகவும் மோசமான (இதைவிட மோசமான வார்த்தையை நாகரிகம் கருதி இங்கு பயன்படுத்தவில்லை) செயல் ஆகும்.

அதைவிட மோசமானது பொதுவாழ்வில் இருக்கும் ஒரு மனிதன்... பொதுவெளியில், தனது சுயநலத்துக்காக மதத்தைக் கொண்டுவருவது.
அந்த வகையில் திராவிடர்களின் இளவரசர் "" நான் ஒரு கிறிஸ்தவன்.....நான் ஒரு முஸ்லிம்....என்மனைவி கிறிஸ்தவர்"" என்று பேசிய பேச்சு அநாகரீகத்தின் உச்சம்....அதைவிட கேவலம்....இதை கேட்டு சங்கிகள் வயிறு எரியும் என்று சொல்லி சிரித்தது.
இங்கு, எனக்கு, கவிஞர் வாலி அவர்களின் கீழ்காணும் பொன்னான பாடல் வரிகள் நியாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
{ வயிறு வலிக்க
சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறு எரிய
சிரிப்பவர்கள் மிருக ஜாதி }
என்பதே அந்த பாடல் வரிகள்
ஒரு முஸ்லிமை பொறுத்தவரை அல்லாவை தவிர வேறு யாரையும் கடவுளாக ஏற்க முடியாது....முகமது நபிகளே அவர்களின் இறுதி தூதர்...அவரது வழிகாட்டுதலை தவிர வேறு எதையும் ஏற்க முடியாது.
அதேபோன்றதே கிறிஸ்துவமும்...கிருத்துவர்கள் முகமது நபிகளை தங்களது தூதராக ஏற்பார்களா?
இந்த இரண்டு சமயங்களிலும் கடவுள் மறுப்பு....நாத்திகம் என்று பேசினால் பேசும் நபர்களை பர லோகத்துக்கு அனுப்புவதுதான் தொன்றுதொட்டு வழங்கிவரும் வழக்கம்.
ஆகவே ஒரு கிரிஸ்தவர் அல்லது முஸ்லிம் நாத்திகராக இருக்கவே முடியாது.
இந்த விஷயங்கள் கூட தெரியாத சாதாரண குடிமகன் கூட யாரும் இந்த காலத்தில் இல்லை.
அப்படி என்றால் உண்மையில் நீங்கள் கிறிஸ்தவரா அல்லது முஸ்லிமா.
இந்துக்கள் தான் ஏமாறப் பிறந்தவர்கள்.... திராவிடம், பகுத்தறிவு என்னும் பெயரில் ஏய்க்கின்றீர்கள் விட்டு விடுவோம்... கிரிஸ்தவர்களும் முஸ்லீம்களும் உங்களுக்கு என்ன பாவம் செய்தார்கள்....
நீங்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொள்கிறோமே நாங்கள் பைத்தியங்களா.....இல்லை எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசும் நீங்களா?
ஒன்றுமே புரியவில்லையே.....