Monday, August 16, 2021

சிஎஸ்ஐ பாதிரி பயிற்சி வகுப்பு இளைஞரிடம் ஓரினச் சேர்க்கையில் பாதிரியார் டேவிட் ஜெபராஜ்

போதகர் பயிற்சி வகுப்புக்கு வந்த இளைஞரிடம் ஆபாசக் கதைகள்ர கூறியும் ஓரினச்சேர்க்கையில் பாதிரியார் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் மதுரை சிஎஸ்ஐ சர்ச்சில் நடந்தேறியுள்ளது. 
மதுரை நரிமேடு பகுதியில் சிஎஸ்ஐ திருச்சபைக்கு சொந்தமாக கதீட்ரல் சர்ச் உள்ளது. அந்த சபையில் பாதிரியாராக இருந்து தற்போது சிவகாசி மேற்கு சபையில் பணிபுரிந்து வரும் டேவிட் ஜெபராஜ் என்பவர் இளைஞர்களுக்கு போதகர் பயிற்சி அளிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார். அந்த இளைஞர் முதலில் மதுரையில் உள்ள கத்தீட்ரல் சர்ச்சுக்கு பெற்றோருடன் சென்று வந்துள்ளார். பிறகு பாதிரியார் டேவிட் ஜெபராஜ் அந்த இளைஞரிடம் தொடர்புகொண்டு போதகர் பயிற்சி வகுப்பிற்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். 
ஆனால் அந்த இளைஞருக்கு போதகர் பயிற்சியில் சேர்வதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்த உடன் அவரது பெற்றோர்களிடம் அந்த இளைஞரை பெண்களுடன் தொடர்புபடுத்தி தவறாக பேசியுள்ளார். மேலும் போதகர் பயிற்சி வகுப்பிற்கு வந்தால் மட்டுமே உங்களது பையன் நல்ல நிலைக்கு வருவான் என்று கூறி அந்த இளைஞரை பயிற்சி வகுப்புக்கு வருவதற்கு வற்புறுத்தியுள்ளார்.

https://kathir.news/news/breakingnews-kathirnews-breaking-1113806

 

No comments:

Post a Comment

TATA Sons must go public as per RBI Rules