Kovai Sathyan இன்று தேசிய ஊடகம் NDTV கான்கிளேவில் பேசிய பொம்மை ஸ்டாலின் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டியில் பொய் பரப்புகிறார்கள் என்று புலம்பியது கேட்க நேரிட்டது.
உங்கள் அறிவாலய பரம்பரை கொத்தடிமைகள் பரப்பும் சொற்களின் விபரம் இதோ
அதிமுக பாஜக கூட்டணி வெற்றி அடைந்தால் ஆட்சியில் பங்கு தேவையில்லை என்று கூறிய பாஜக. அதற்கு பதிலாக முதல் கட்டமாக என்னென்ன மாற்றங்கள் அதிமுக செய்ய வேண்டும் என்று சுமார் 30 விஷயங்களை பாஜக அதிமுகவிற்கு அறிவுறுத்தியுள்ளது. அதில் சிலவற்றை காணலாம்.
* அதிமுக பாஜக கூட்டணி வெற்றி அடைந்தால் சட்டமன்றத்தில் தேசிய கீதம் முதலில் பாடப்படும் நேரம் இருந்தால் மட்டுமே தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்.
* தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழகம் என்ற புதிய பெயர் சூட்ட வேண்டும்.
* இஸ்லாமிய கிறிஸ்தவ பெயர்கள் கொண்ட தெருக்கள் பகுதிகள் அரசு கட்டிடங்கள் என்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களின் பெயர்களை இந்துமத பெயர்களில் சாதி இணைக்கப்பட்டு மாற்றப்பட வேண்டும்.
* டாஸ்மாக் தொடர்ந்து அரசாங்கத்தின் கீழ் இயங்கலாம் ஆனால் தனியாருக்கு (முதல் கட்டமாக) 100 டாஸ்மாக் கடைகள் லீசுக்கு கொடுக்க வேண்டும்.
* அரசு அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் 18 இந்து கோவில்கள் முதல் கட்ட சோதனை முயற்சியாக இரண்டு வருடத்திற்கு தனியாரிடம் லீசுக்கு கொடுக்க வேண்டும்.
* இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 18 கோயில்களில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மாமிச கடைகள், மாமிச உணவகங்கள் போன்றவை அகற்ற வேண்டும். முக்கியமாக மதுரை மீனாட்சியம்மன் கோவில்.
* கிராமப்புறங்களில் இருக்கும் கோயில்களுக்கு ஆடு கோழி பலியிடுவதாக இருந்தால் முன்கூட்டியே அரசாங்கத்திடம் அனுமதி சீட்டு வாங்க வேண்டும்.
* எருமை மாடு காளை மாடு அறுப்பதாக இருந்தால் அது நகரத்திலிருந்து 5 km தொலைவில் கடைகள் அமைத்துக் கொள்ள வேண்டும். நகரத்திற்குள் அனுமதி மறுக்கப்பட வேண்டும்
* வீட்டின் வளாகத்திற்குள் இஸ்லாமியர்கள் சமாதிகள் அமைப்பது, கிறிஸ்தவர்கள் சிலை வைத்து அதற்கு சிறிய வீடு போல் கட்டுவது, வெளிப்புற சுவர்களில் கிறிஸ்தவர்கள் சாமி சிலையை வீட்டின் மூலையில் வைப்பது போன்றவை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். இதை மதமாற்றும் செயலாக கருதப்பட வேண்டும்.
* இஸ்லாமிய மசூதி ஊர்வலங்கள். கிறிஸ்தவ தேர் பவனி போன்றவை 1 கிலோ மீட்டருக்கு மேல் அனுமதிக்க கூடாது.
* வீடுகளுக்குள் நடக்கும் குர்ஆன் பயிற்சி என்பது மதராசாவாக கருதப்பட வேண்டும்.
கிறிஸ்தவர்கள் வீடுகளில் செய்யும் அன்பியம் ஜெப கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
கிறிஸ்தவர்கள் மத பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.
* கூடுதலாக மூன்று இந்து பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்.
* தமிழ்நாட்டில் வட இந்தியர்களும் இருப்பதால் அவர்களுக்கு என்று இருக்கும் ஒரு ஹிந்து பண்டிகையை தேர்வு செய்து அதற்கு அரசு விடுமுறை ஒரு நாள் அறிவிக்க வேண்டும்.
* அரசு பேருந்துகளில் இருக்கும் நல்லிணக்க மத சிலை பதாகைகள் அகற்றப்பட வேண்டும். அதாவது (இஸ்லாமிய ஹிந்து கிறிஸ்தவ சிலைகளை சேர்த்து வைக்கக் கூடாது)
* அரசு மருத்துவமனைகள் அரசு வளாகங்களுக்குள் இஸ்லாமிய கிறிஸ்தவ சிலைகள் போட்டோக்கள் எதுவும் இருந்தால் அதை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும்.
* சிதம்பரம் கோயில் அர்ச்சகர்கள் அனைவரையும் மாநில அரசாங்க ஊழியர்களாக ஏற்றுக்கொண்டு 18000-96000 அரசு ஊதியம் வழங்க வேண்டும்.
* புதிதாக உருவாக இருக்கும் 6 ஹிந்து அமைப்புகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
* அறநிலையத்துறையில் செக்யூரிட்டிகளாக வேலை செய்பவர்கள் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும்.
* சுமார் ஆறு ஹிந்து கோவில்களின் பரப்பளவை 500அடிக்கு விரிவு படுத்த வேண்டும். அந்தக் கோவில்களின் அருகில் இருக்கும் கடைகள் வீடுகள் கட்டிடங்கள் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும்.
* இஸ்லாமிய, கிறிஸ்தவ மசூதிகள், சர்ச்சுகள், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், மருத்துவ சோதனைக்கூடங்கள், தொண்டு கட்டிடங்கள் போன்றவற்றின் நில டாக்குமென்ட்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும் ஆக்கிரமிப்புகள் அல்லது இரண்டாவது மாடி கட்டுவதற்கு அனுமதி இல்லாமல் இருப்பவை போன்றவற்றை ஒரு வருடத்திற்குள் அகற்ற வேண்டும்.
இவை அனைத்திற்கும் அதிமுக பொதுச் செயலாளர் திரு எடப்பாடி பழனிசாமி நியமித்த குழு ஓகே சொன்னதாக தான் தகவல்கள் வருகிறது
No comments:
Post a Comment