Sunday, February 15, 2026

திராவிட மாடல் - ஜாதி திராவிடப் பண்ணையாரிய ஜாதிவெறி தூண்டல், பிளவு வாதம் செய்யும் திமுக?

 பிராமணப் பூச்சாண்டி -தின மலர் 15 பிப்ரவரி 2026, ஞாயிறு


'எவனாவது ஒரு 'பார்த்தசாரதி'யை வைத்து மகளிர் உரிமைத்தொகை விரய செலவு என சொல்லி வழக்கு போட்டு அதற்கு உச்சுக் குடுமி மன்றம் வழியே தடை வாங்கி விடுவது என்பதுதாள் அந்த பதிவு.

தொல்காப்பியன் என்ற பெயரில், சமூக ஊடகங்களில் இதை பதிவிட்டவர் தமிழகத்தில் ஆளும் திமுகவை சேர்ந்தவர் என்பது தெளிவு.

ஆளும் கட்சியை சேர்ந்தவர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இந்த பதிவில், தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகையை எதிர்த்து, குறிப்பிட்ட ஒரு ஜாதியை சேர்ந்தவர்களால் வழக்கு தொடரச் செய்து, குறிப்பிட்ட ஒரு ஜாதியை சேர்ந்த நீதிபதியால் தடை வாங்கிவிடுவார்கள் என்பதுதான் இந்த பதிவில் அந்த நபர் சொல்லியிருக்கும் செய்தி.

இதன் மூலம் அந்த நபர், அல்லது அவர் சார்ந்த இயக்கம், எந்த ஜாதியினருக்கு எதிரான தனது வன்மத்தை, வெறுப்பை கக்கியிருப்பதோடு, சம்பந்தப்பட்ட அந்த ஜாதியினர் மற்ற ஜாதியினரின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்ற நஞ்சையும் கக்கி இருக்கிறார்.

பகுத்தறிவு மண் என்று சொல்லிக் கொண்டு சம்பந்தமே இல்லாமல் ஒரு ஜாதியை வம்படியாக இழுத்து, அந்த ஜாதியை மற்ற ஜாதியினருக்கு எதிராக கூர்தீட்டும் ஜாதி அரசியல் கூச்சநாச்சமின்றி நடக்கிறது

பொய்யை கூசாமல் சொல்கிறார்கள் அதை நன்றாக பிரசாரம் செய்கிறார்கள் . அதன் பெயர்தான் திராவிடமாடல்

No comments:

Post a Comment