"அண்ணா! ப்ளீஸ் அண்ணா! என்னை விட்ருங்க அண்ணா"- கதறிய 14 வயது சிறுமி; இரக்கமே இல்லாமல் கூட்டு பா*லியல் வன்கொடுமை செய்த அண்ணன் தம்பி; உடனிருந்த அண்ணன் மனைவி...!!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவை சேர்ந்த 14 வயது சிறுமி மற்றும் அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் மாதம்தோறும் வந்தவாசி சேத்துப்பட்டு சாலையில் உள்ள சைதானி பீவி தர்காவிற்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பாத்திமா(30) அதே தர்காவிற்கு சென்றுவந்துள்ளார்.
இதில்தான் தர்காவிற்கு வந்து செல்லும் அந்த 14 வயது சிறுமியிடம் பாத்திமாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பாத்திமா 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஆற்காட்டிற்கு பேருந்தில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் பாத்திமாவின் கணவர் இம்ரான் பாஷா(35) மற்றும் அவரது தம்பியான கிளீனர் அஜ்மல் பாஷா(30) ஆகிய இரண்டு பேரும் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி லாரியில் ஆற்காடு பகுதியில் இருந்து பெங்களூருக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது லாரியில் பெங்களூர் செல்லும் வரை இரண்டு 2 பேரும் சேர்ந்து சிறுமியிடம் கூட்டு பா*லியல் வ*ன்கொ*டுமை செய்துள்ளனர்.
மேலும் லாரி பெங்களூர் பகுதி சென்று நின்றவுடன் லாரியில் இருந்து சிறுமி இறங்கி அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் சென்றுள்ளார். அவர்களிடம், தன்னை அழைத்து வந்த அந்த இரண்டு பெரும் சேர்ந்து தன்னை பா*லியல் வ*ன்கொ*டுமை செய்ததாக கூறியிருக்கிறார்.
அதன்பின்னர், பொதுமக்கள் இரண்டு பேருக்கும் தர்ம அடி கொடுத்து, பெங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் போலீசார் வந்து சிறுமியை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று சம்பவம் குறித்து விசாரணை செய்துள்ளனர்.
இதையடுத்து பெங்களூர் போலீசார் வந்தவாசி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் பெங்களூர் போலீசார் 14 வயது சிறுமியை மகளிர் பாதுகாப்பு இல்ல விடுதியில் பொதுமக்கள் உதவியுடன் தங்க வைத்திருந்தனர்.
இதனையடுத்து பெங்களூருக்கு சென்ற வந்தவாசி போலீசார் சிறுமியை அழைத்து வந்து, வந்தவாசி காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றியுள்ளனர்.
பின்னர் வந்தவாசி போலீசார் 14 வயது சிறுமியை கூட்டு பா*லியல் வ*ன்கொ*டுமை செய்த இம்ரான் பாஷா மற்றும் அவரது தம்பி அஜ்மல் பாஷா சிறுமியை அழைத்து செல்வதற்கு உடந்தையாக இருந்த இம்ரான் பாஷாவின் மனைவி பாத்திமா ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டு வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தனது கணவன் செய்யும் தவறுகளை கண்டிக்க வேண்டிய மனைவியே, தனது கணவனின் காம இச்சைக்கு ஒரு அப்பாவி சிறுமியை சீரழித்த
கொடூரம்.

No comments:
Post a Comment