Thursday, July 2, 2026

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி லஞ்சம் வாங்கிய புகாரில் கைது

 ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது

https://x.com/sureshkalipandi/status/2072693096018747545

அம்மாபேட்டை தீபாம்பாள்புரம் வள்ளியம்மைநாதர் கோயில் புதுப்பிக்கும் பணிக்கான ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை. இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இந்து சமய மற்றும் அறநிலைய அறநிலையத் துறையில் (HR&CE) உதவி ஆணையராகப் பணியில் சேர்ந்தார். கடந்த 2024 பிப்ரவரி மாதம் வெளியான இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின்படி, உதவி ஆணையராக இருந்த இவர் துணை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். பின்னர் இணை ஆணையராகவும் பதவி உயர்வு பெற்றார். திருவண்ணாமலை மாவட்டக் கோயில்களின் உதவி ஆணையராகவும், சென்னை பார்த்தசாரதிசுவாமி கோயிலின் துணை ஆணையராகவும்/செயல் அலுவலராகவும் ஜோதி லட்சுமி பணியாற்றியுள்ளளார். திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி கோவில் மற்றும் தஞ்சாவூர், திருவண்ணாமலை போன்ற பல முக்கிய கோயில்கள் மற்றும் பகுதிகளில் அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார் தமிழகத்தின் பல்வேறு முக்கிய திருக்கோயில்களில் உதவி ஆணையராகவும் (Assistant Commissioner), துணை மற்றும் இணை ஆணையராகவும் (Joint Commissioner) பணியாற்றியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நேரத்தில் 10 லட்சம் வரை கோயில் பணத்தை மாற்றாமல் வீணடித்ததாக இவர் மீது புகார் உள்ளது. அதேபோல பக்தர் ஒருவர் காணிக்கையாக கொடுத்த கோயில் நகையை அபகரித்தாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல சொர்க்கவாசல் திறப்பு தரிசன டிக்கெட் பணம் ரூ.4 லட்சம் வரை ஏமாற்றியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. இன்னும் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தும் 17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டன. ஆனாலும் இவருக்கு தொடர்ந்து பதவி உயர்வு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி லஞ்சம் வாங்கிய புகாரில் கைது

  ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது https://x.com/sureshkalipandi/status/2072693096018...