பலூஜிஸ்தானின் இளம் பாடகி பாடிய ஓம் நமசிவாய..
அது அரசியலைப் பற்றியோ, எல்லைகளைப் பற்றியோ அல்ல, மாறாக அவளது பாலைவனத்தில் ஆயிரம் ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கும் ஹிங்லாஜ் மாதா கோயிலின் இறைவனான சிவபெருமானைப் பற்றியது.
அவளது குரல் ஆழமான, சினிமாத்தனம் மிக்க, துயரமும் மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் இழைந்த ஒரு விசித்திரமான உணர்வைத் தந்தது —
அவளது மலைகள் எப்போதுமே அறிந்திருந்த பழங்கால மந்திரத்துடன் பலூச்சி கவிதைகள் உருகி இணைந்தன.
ஹர ஹர மகாதேவ்! 
"
பலூசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த சிவ பக்தை ஒருவர், பாபா போலேநாத் மற்றும் மாதா ஹிங்லாஜ் ஆகியோரிடம் தனது பகுதியின் நன்மைக்காக பிரார்த்தித்தவாறு, இனிமையான குரலில் பக்திப் பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறார்.
அப்படியே நம்மை இழுத்துக் கொண்டு போகிறது இசையும் சிவபெருமானை போற்றும் அந்த பெண்ணின் குரலும்...
சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும் புகழ்பெற்ற ஹிங்குலாஜ் (ஹிங்ராஜ்) மாதாவின் ஆலயம், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லஸ்பெலா மாவட்டத்தில் உள்ள ஹிங்கோல் தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. இக்கோயில் கராச்சி நகரிலிருந்து கிட்டத்தட்ட 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சிந்தி மொழியில் ஹிங்குலி என்றால், முன் வகிட்டுக் குங்குமப் பொட்டு அல்லது செந்தூரம் என்று பொருள். அன்னையின் வகிட்டுக் குங்குமம் வைக்கும் உச்சந்தலை (பிரம்மராந்திரம்) இப்பகுதியில் விழுந்து சக்தி பீடம் ஆனதால்தான் இப்புனித இடத்துக்கு ஹிங்குலாஜ் என்று பெயர் வந்ததாம். இந்த மகாசக்தி பீடேஸ்வரியின் திருநாமம் கோடரீ. இங்கே காவல் தெய்வமாக விளங்கும் இறைவன் (பைரவர்), பீமலோசனர்
அருணாசலேஸ்வரா

No comments:
Post a Comment