Saturday, April 23, 2022

நிலைமறந்தவன் படத்தை வெளியிட கூடாது களம் இறங்கும் கிறிஸ்தவ அமைப்புகள்

 pP

 "நிலை மறந்தவன் படத்தை வெளியிட கூடாது களம் இறங்கும் கிறிஸ்தவ அமைப்புகள்... 

https://tnnews24air.com/posts/publish-that-image--Who-is-going-to-win-Latest-tamil-current-update
 

 
மலையாள திரைப்படமான டிரான்ஸ் திரைப்படத்தை தமிழில் "நிலை மறந்தவன்"  என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று டப்பிங் செய்து தயாரித்துள்ளது இந்த படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது, அதில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் கதா பத்திரத்தின் பெயர்கள் தற்போது பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.
 


நிலை மறந்தவன் திரைப்படத்தில் கிறிஸ்தவ மத போதகர்களின் செயல்பாடுகள் மற்றும் சில அமைப்புகளின் ஏமாற்று வேலை போன்றவற்றை பட்டியல் போட்டு இருப்பதாகவும், இந்த திரைப்படம் மலையாள திரைப்படமாக வெளிவந்தாலும் தமிழில் சில மத போதக அமைப்புகள் எவ்வாறு மக்களை முட்டாள் ஆக்குகின்றன என்பதை மையமாக வைத்து திரைப்படம் தயாரிக்க பட்டு இருக்கிறது.

இதில் இடம்பெற்ற கதா பாத்திரங்களுக்கு மோகன் சி லாசர்ஸ், சற்குணம் போன்றவற்றை நினைவு படுத்தும் விதமாக பெயர்கள் அமைந்துள்ளது என்பது ட்ரைலர் மூலம் தெரியவந்துள்ளது, இது தற்போது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, வேண்டும் என்றே கிறிஸ்தவ அமைப்புகள் மீது தவறான எண்ணத்தை விதைக்க இந்த திரைப்படம் தயாரிக்க பட்டு இருப்பதாகவும், உடனே இந்த படத்தை தடை செய்யவேண்டும் என சில அமைப்புகள் விரைவில் போர் கொடி தூக்க இருக்கிறதாம்.

 

நிலை மறந்தவன் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு இது குறித்து மிக பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் சில கிறிஸ்தவ அமைப்புகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது, நிலை மறந்தவன் திரைப்படத்தில் ஜோதிகா குறித்த குறியீடும் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


விரைவில் இந்த படம் திரைக்கு வரும் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு பல்வேறு விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் என அரங்கேறும் என்பது மட்டும் தற்போது தெளிவாகிறது. நிலை மறந்தவன் திரைப்படத்தின் ட்ரைலர் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

'நிலைமறந்தவன்' திரைப்படம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான திரைப்படம் அல்ல. மத வியாபாரிகளுக்கு எதிரான திரைப்படம் அவ்வளவே.
பலர் அடியேனிடம் "கோடிக்கணக்கான டாலர்கள் புழங்கும் மத வியாபாரத்திற்கு எதிராக நீங்கள் களம் இறங்குகிறீர்கள். தமிழகத்தின் ஆளும் கட்சி மற்றும் முக்கிய கட்சிகளின் ஆதரவு வேறு அவர்களுக்கு இருக்கிறது. படத்திற்கு ஆதரவு பெருக பெருக அவர்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள்" என்றெல்லாம் அச்சுறுத்துகிறார்கள்.
நாம் சொல்வதெல்லாம் ஒன்றுதான். நாம் சட்டத்திற்கு புறம்பாகவோ, சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவோ எதையும் ஒரு போதும் செய்வதில்லை, செய்யப் போவதும் இல்லை. ஆகையால் யாருடைய உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் எள்ளளவும் அஞ்சப் போவதும் இல்லை. இந்த திரைப்படத்தை தமிழில் கொண்டு வர நினைத்த போதே இதன் பின்விளைவுகளின் உச்சத்திற்கு தயாராகியே இறங்கி உள்ளேன். இறைவன் நம்மோடு இருக்க, நம்மை யார் என்ன செய்துவிட இயலும் ?
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

No comments:

Post a Comment