Sunday, February 22, 2026

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: தந்திரிக்கு எதிராக சாட்சியமில்லை - நீதிமன்றம் தகவல்

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: தந்திரிக்கு எதிராக சாட்சியமில்லை - நீதிமன்றம் தகவல்   22 Feb 2026 


கொல்லம்: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்​பன் கோயி​ல் தங்​கம் கொள்ளை தொடர்​பான 2 வழக்​கு​களில் கோயில் தந்​திரி​யான கண்​டரரு ராஜீவரு திரு​வனந்​த​புரம் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

இந்நிலையில், ராஜீவருவின் ஜாமீன் மனு மீதான விசா​ரணை கொல்​லம் குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம் அவருக்கு ஜாமீன் வழங்​கியது. விசா​ரணை​யின்போது நீதி​மன்​றத்​தில் தந்​திரி​யின் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர், “உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி 2018-ல் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் பெண்​கள் நுழைந்து தரிசனம் செய்ய கேரள மாநில அரசு அனு​ம​தித்​தது.

இதற்கு அப்​போது கண்​டரரு ராஜீவரு கடும் எதிர்ப்பு தெரி​வித்​தார்.அதற்கு பழி​வாங்​கும் நடவடிக்​கை​யாக இந்த தங்​கத் திருட்டு வழக்கை கேரள அரசு அதி​காரி​கள் தொடர்ந்​துள்​ளனர்” என்று தெரி​வித்​தார். இந்​நிலை​யில்​தான் ஜாமீனில் ராஜீவரு வெளியே வந்​துள்​ளார்.

மேலும் இந்த வழக்​கில் கண்​டரரு ராஜீவருக்கு எதி​ராக எந்​தச் சாட்​சி​ய​மும் இல்லை என்று கொல்​லம் குற்​ற​வியல் நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது. இது கேரள அரசி​யலில் பெரும் புயலைக் கிளப்​பி​யுள்​ளது.

கண்​டரரு ராஜீவருவை வேண்​டுமென்றே கேரள போலீ​ஸார் கைது செய்து விசா​ரணை நடத்​தி​ய​தாக​வும், இது பழி வாங்​கும் நடவடிக்கை என்றும் கேரளா​வில் உள்ள எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சாட்​டி​யுள்​ளன.

இந்த தங்​கம் திருட்டு வழக்​கில் முன்​னாள் தேவஸ்​வம் போர்டு அமைச்​சர் கடக்​கம்​பள்ளி சுரேந்​திரன் சம்​பந்​தப்​பட்​டுள்​ளார் என்​றும், அதை திசை திருப்​பவே தந்​திரி கண்​டரரு ராஜீவருவை கேரள போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர் என்​றும் பாஜக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சுமத்​தி​யுள்​ளன. கண்​டரரு ராஜீவருவை கைது செய்​தது தொடர்​பாக கேரள அரசு விளக்​கம் அளிக்க வேண்​டும்​ என்​றும்​ அக்​கட்​சிகள்​ போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளன.  https://www.hindutamil.in/news/india/sabarimala-temple-gold-theft-case

No comments:

Post a Comment

நாசிக் டாடா கம்பெனியில் முஸ்லிம் மதவெறி கார்ப்பரேட் ஜிஹாத், மஜ்லிஸ் முன்னாள் எம்பி குற்றத்தில் தொடர்பு

நாசிக் டாடா கம்பெனியில் முஸ்லிம் மதவெறி கார்ப்பரேட் ஜிஹாத், கடவுள் நம்பிய இந்து பெண்களை மதம் மாற்ற பாலியல் தொல்லை வழக்கில் மஜ்லிஸ் முன்னாள் ...