தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட் -செயி.கிறிஸ்டோபர் கல்லூரி தூய்மைப் பணியாளர் நியமன விவகாரம்:
சென்னை வேப்பேரி செயி.கிறிஸ்டோபர் (அரசு உதவி பெறும்) கல்லூரியில் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவரின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி கல்லூரி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அந்த தூய்மைப் பணியாளரின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தமிழக அரசு ஒப்புதல் அளித்து சம்மதம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து தமிழக அரசு தேவையின்றி இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். ஏற்கெனவே தீர்வு காணப்பட்ட ஒரு விவகாரத்தில் மீண்டும் தமிழக அரசு மேல் முறையீடு செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
சென்னை வேப்பேரி செயி.கிறிஸ்டோபர் (அரசு உதவி பெறும்) கல்லூரியில் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவரின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி கல்லூரி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அந்த தூய்மைப் பணியாளரின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தமிழக அரசு ஒப்புதல் அளித்து சம்மதம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து தமிழக அரசு தேவையின்றி இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். ஏற்கெனவே தீர்வு காணப்பட்ட ஒரு விவகாரத்தில் மீண்டும் தமிழக அரசு மேல் முறையீடு செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment