Monday, May 11, 2026

தவெக ஜோசப் விஜய் வெற்றி - சர்ச் கொத்தடிமை தலித்தியவாதி, திமுக பூமர் புலம்பல்

 தமிழக அரசியல் என்றால் என்ன?

https://www.facebook.com/story.php?story_fbid=10226460191689608&id=1788829289&_rdr

வெற்றி, தவெகவிற்கு மிக எளிதாக சாத்தியப்பட்டிருக்கிறது. கவனித்துப் பார்த்தால், கேளிக்கை அரசியலே அதன் பிரதான ஆயுதமாக இருந்திருக்கிறது. அதற்கான சூழலை, மரபான அரசியலில் பழகிப் போன பிற எதிர்க் கட்சிகளே உருவாக்கித் தந்தன.
வெளிப்பார்வையிலும் பேச்சிலும் இது அறிவிற்கும் தற்குறித்தனத்திற்குமான போட்டியாகவே தோன்றினாலும், அப்போட்டியும் கூட ஒருதலைப்பட்சமானதாகவே இருந்தது. சமூக ஊடகங்களாலும், இணையத்தாலும் வடிவமைக்கப்பட்ட இளையவர்கள் ‘தற்குறி’ அடையாளத்தை சுவீகரித்த அளவிற்கு, திராவிடக் கட்சியினர் ‘அறிவானவர்கள்’ என்ற சொல்லுக்குப் பொருத்தமாக வெளிப்படவில்லை.
இதனால், அறிவாளி - தற்குறி மோதல் ‘தகவல் அறிந்தவர்கள் - அறியாதவர்கள்’ என்ற தளத்திலேயே முடங்கி விட்டது.
தவெகவினருக்கு அரசியல் பற்றிய அடிப்படை தகவல்கள் தெரிந்திருக்கவில்லை என்பதைக் கடந்து எதிர்க்கட்சியினர் எதையும் நிரூபித்திருக்கவில்லை. அப்படியானத் தகவல்களை இன்றைக்கு யாரும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, தேவைப்படும் போது அவற்றை இணையத்திலிருந்து எடுத்துக் கொள்ள முடியும் என்றும் தவெகவினர் சொன்ன பதிலை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். நிஜமாகவே தவெகவிற்கும் பிற கட்சியினருக்குமான மோதல், ‘எது அறிவு?’ என்று வரையறுப்பதில் தான் அடங்கியிருந்தது. அதே போல், எது அரசியல், எது போராட்டம், எது விடுதலை, எது முன்னேற்றம் என்பதிலும் தவெகவினர் கொண்டிருக்கும் முன்முடிவுகள் ஆச்சரியமானவை, அச்சுறுத்தக் கூடியவை.
இது பண்பாட்டுத் திரட்சிக்கான காலம் என்பதை தவெகவில் யார் முன்னுணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு நூற்றாண்டாக நம்பியிருந்த கருத்தியல் அரசியல் தோற்றுப்போயிற்று என்ற அறிவிப்போடு இது வெளிப்பட்டிருக்கிறது.
பாஜகவின் அரசியலைப் போல, தமிழகத்திலும் மதக் காழ்ப்புகளும், மோதல்களுமே வலதுசாரி அரசியலாக இருக்கும் என்று திராவிடக் கூட்டணியினரும் பாஜவினரும் எதிர்பார்த்து தோற்றார்கள் என்றே நான் சொல்வேன். தமிழகத்தில், மத மோதல்கள் நடைபெறுவதற்கான சூழலை வரலாறு தொடர்ந்து மறுத்தே வந்திருக்கிறது. ஆனால், அதற்கு மாற்றாக, இங்கே மதம் நீங்கிய பண்பாட்டு அரசியலின் தாக்கம் மிக அதிகம். அதன் மைய உருவகம் ‘ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு’ என்பதையே எனது ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
எந்தவொரு அதிகார அமைப்பும் ‘ஜல்லிக்கட்டுக் காளை’யின் குணநலன்களோடே தமிழகத்தில் உருவாகி வந்திருக்கிறது. அப்படி உருவாகும் அதிகாரங்கள், ஆரம்பத்தில் காலிக்குறிப்பானாக விளங்கி, நாளடைவில் ஏதாவதொரு வலுவான கருத்தியலின் கதையாடலால் விழுங்கப்பட்டிருக்கின்றன. இன்றைக்கு, தவெக அதிகாரத்தைக் கைப்பற்றிய நிகழ்வு, அப்படியொரு காலிக்குறிப்பானின் வருகையின் போதே ஆரம்பித்து விட்டது. அந்த வருகையையே நான் 2017 ‘தைப் புரட்சி’ என்று சொல்கிறேன். திராவிடக் கருத்தியலின் மீதான அவநம்பிக்கையின் வெளிப்பாடே அந்தப் போராட்டம். அந்த அவநம்பிக்கை திராவிடர்களுக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே பேரதிர்ச்சி தான். அதனால் தான், அன்றைய தினம் லட்சக்கணக்கான மக்கள் சாரிசாரியாய் திரண்டு வந்தனர்.
தமிழகத்தில் இந்துத்துவ அரசியலுக்கு இடமில்லை என்பது, திராவிடக் கூட்டணிக்கட்சிகளின் கோஷம் மட்டுமல்ல; அது தமிழகத்தின் பண்பாட்டு விழுமியமும் கூட. ஆனால், அதே நேரம், தமிழகத்தில் வலதுசாரி சிந்தனைகளே ஆதிக்கம் செலுத்தின என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. திராவிட அரசியலுக்கு முன்பு வரை தமிழகத்தில் வலதுசாரி அரசியலே செயல்பட்டு வந்தது. அது, பாஜகவின் மதவெறியாட்டம் போன்றதல்ல. அதற்குப் பெயர் ‘தமிழ்ப் பண்பாட்டு வெறியாட்டம்’. பல்வேறு பனுவல்களிலும் விதந்து சொல்லப்படும் பண்பாட்டு விழுமியங்களுக்காக (தாய்மாமன் முதற்கொண்டு விருந்தோம்பல் வரைக்கும்) இங்கே கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன; அடிமைப்படுத்தல்கள் நடந்திருக்கின்றன; உடலரசியல் வன்முறையோடு செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டுக் காளை அப்படியொரு பண்பாட்டு வெறித்தனத்தின் சமூக வழிபாடு.
திராவிட அரசியலில் இத்தகையக் கூருணர்வுகளுக்கு இடமில்லை என்பது தான் யதார்த்தம். விடுதலையையும், பகுத்தறிவையும், சமூக நீதியையும் திராவிடக் கட்சிகள் எவ்வாறு நீர்க்கச் செய்தனவோ அதே போல், பண்பாட்டு அறிவையும், வரலாற்று அறிவையும் மலினப்படுத்தவே செய்தன. சங்ககாலம் பற்றியும், சிந்துவெளி நாகரீகம் பற்றியும் தொன்மங்களை உருவாக்குவதே திராவிடத்தின் வரலாற்றுவரைவியலாக இருந்தது. அல்லது, கீழடி, ஆதிச்சநல்லூர் பற்றிய சுயப் பெருமிதங்கள் மட்டுமே இங்கு பண்பாட்டுப் பிரக்ஞையாக வரையறுக்கப்பட்டது.
இதையெல்லாம் கடந்ததே பண்பாடு என்பதை தவெகவின் வெற்றி நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. இதையும் கூட, பழைய சினிமா கவர்ச்சி (பிம்பச்சிறை) என்ற ஒற்றை விளக்கத்துடன் நிறுத்திக் கொள்கிறவர்கள் குறித்து நாம் பெரிதாய் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. எனது கவலையெல்லாம் பண்பாட்டு வெறியிலிருந்து தமிழகம் எப்போது வெளியேறும் என்பது தான். அதற்கான சிறு நம்பிக்கைக் கீற்று கூடத் தெரியவில்லை.

https://www.facebook.com/erode.vadivel.raman.2025/posts/pfbid02XQk5rZjF1C3Q7xKp3AcWRgS86VdB8ar7i83iwPAmNMTg3mHV8duNsC1hw9q5PG5Nl?__tn__=%2CO*F

திமுக தோல்வி அருந்ததியர்கள் புறக்கணிப்பு...?

கொங்கு மண்டலத்தில் அருந்ததியர் இயக்க தலைவர்களுக்கு திமுக கூட்டணியில் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை ஏன்...?
இதற்கு மிக முக்கிய காரணம்...!!!

சமூக நீதி மக்கள் கட்சி - மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல்ராமன் அறிக்கை

கொங்கு மண்டலத்தை சார்ந்த திமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி,
முத்தூர் சாமிநாதன் ஈரோடு எம்பி பிரகாஷ், ஆகியோர்
PEN நிறுவனம் மூலம் திமுக தலைமைக்கு தவறான தகவல்களை அளித்து திமுக தலைமையை ஏமாற்றி உள்ளனர்..... திமுக தலைமையும் இவர்களை நம்பி மோசம் போய் விட்டது....

கீழ்க்கண்ட சம்பவங்கள் மிக முக்கியமானவை...

1.சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு பாஜகவை சார்ந்த ஒரு கொங்கு அமைப்பு கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்..... இதனால் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும்... அருந்ததியர் இயக்க தலைவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் எதிர்ப்புகள் அதிக அளவில் இருக்கும்.......
எனவும் அருந்ததியர் சமுதாய மக்களின் வாக்குகளை பணம் கொடுத்து வாங்கி விடலாம் என ஒரு திட்டத்தை செயல்படுத்தினார்கள்.....
இவர்கள்.... PEN நிறுவனம் - தொகுதி தலைமை பார்வையாளர்களை கவனித்து சரிபடுத்தி விட்டனர்.....

2.குறிப்பாக மாவீரன் பொல்லான் மணிமண்டபம் திறப்பு விழாவில் முதலமைச்சருடன் மேடையில் அருந்ததியர் சமூகத்தின் மிக முக்கிய தலைவர்களை அமர வைக்காமல் திட்டமிட்டு புறக்கணிப்பு செய்தனர்.... இந்நிகழ்வு அன்றைக்கு அருந்ததியர் சமூக மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.... குறிப்பாக இளைஞர்களிடையே மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது... முதலமைச்சருடன் மேடையில் அமர வைக்காதவர்கள் சட்டமன்றத்தில் நமக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என நம்பியது எங்களின் தவறு

3.கொங்கு மண்டலத்தில் உள்ள திமுகவின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மக்களிடம் நேரடி தொடர்பில் இல்லை.... வேலைவாய்ப்பு பணி மாறுதல் போன்றவை கூட பணம் வசூல் செய்தார்கள் குறிப்பாக திமுக நிர்வாகிகளிடமே பணம் வசூல் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

4.குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அருந்ததியர், முதலியார், வேட்டுவ கவுண்டர், நாடார், போன்ற சமூக மக்களுக்கு தேர்தலில் போட்டியிட உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை ஆனால் ஓட்டு மட்டும் அனைத்து சமுதாய ஓட்டுகளையும் பெற திட்டம் வகுத்தனர் இது நியாயமா...??

5.திமுக தலைமை சமூக நீதி செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்டாலும் கீழ் மட்டத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது..... ஒன்றிய செயலாளர்கள் முதல் பேரூர் செயலாளர்கள் வரை ஜமீன்தாரர்களாகவும் எஜமானவர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.... இவர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர்..... இதன் வெளிப்பாடுதான் வெளியில் சொல்ல முடியாமல் """விசில்"""" அடித்து விட்டனர்....

6.திமுக கூட்டணியை ஆதரித்து அருந்ததியர் சமுதாய தலைவர்கள் பிரச்சாரம் செய்தது மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு எதிர்வினை ஆற்றி இருக்கிறது....

7....2021 சட்டமன்ற தேர்தலில் 68% அருந்ததியர் சமூக மக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர்.... பல ஆண்டுகாலம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த அருந்ததியர் மக்கள்.......... டாக்டர் கலைஞர் அவர்கள் உள் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி கடனாக திமுகவை ஆதரித்து வாக்களித்தது வரலாற்றுச் செய்தியாக மாறியது...... ஆனால் இன்றைக்கு அருந்ததிய சமுதாய மக்கள் இளைஞர்களும் பெண்களும் அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.... எனவே இச்சமூகத்திற்கு அங்கீகாரம் வேண்டும் உரிய சுயமரியாதை திமுக வழங்கவில்லை....

8.திமுக மாநில துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் அவர்களுக்கு அவிநாசி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க தலைமை முடிவு செய்தபோது அதனை தடுத்து டம்மி வேட்பாளர்கள் குறிப்பாக அப்பாவி பெண் வேட்பாளர்களை அவிநாசி தாராபுரத்தில் நிறுத்தினார்கள் இச்செயல் அருந்ததியர் சமுதாய தலைவர்களை அவமானப்படுத்தியது

9.திமுக கட்சியில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த மிகச்சிறந்த அடிமைகளை தேர்ந்தெடுத்து டம்மியாக பதவிகளை வழங்கி அதை பெருமையாக பேசுவதை தவிர்க்க வேண்டும்

10.மேற்கண்ட நிகழ்வுகள் திராவிட மாடல் சமூக நீதிக்கு குரல் கொடுக்கும் தளபதி மு க ஸ்டாலின் அவர்களை திட்டமிட்டு நம்பிக்கை மோசடி செய்த நிர்வாகிகளை உடனடியாக களை எடுக்க வேண்டும்....

ஈரோடு வடிவேல்ராமன் ,
நிறுவனத் தலைவர்,
சமூக நீதி மக்கள் கட்சி ,
மாவீரன் பொல்லான் பேரவை ,
தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு

https://www.facebook.com/thaamiraa/posts/pfbid02VfwdXW7G7mevrW77quWjcvP1SMFxd1DaoTxGVvEsKL6Q3beBg34AwudnPHn1q7C6l?__tn__=%2CO*F

திமுக பூமர்களுக்காக, ஒரு சக பூமரின் கரண்ட் சினாரியோ அறிக்கை

1. நீங்கள் அப்படியே என்னவோ கோட்டையே சரிந்துபோனது போலவும், அவமானப்பட்டது போலவும் நினைத்துக்கொள்ள இதில் ஒன்றுமேயில்லை. திமுக போன்ற கட்சிக்கு ஜெயலலிதாவிடம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தோற்றுக் கொண்டிருந்ததை விட அவமானம் வேறொன்று இருக்கவே முடியாது. ஓவரா பர்பாமன்ஸ் பண்ணாதீங்க, அது நமக்கு செட் ஆகாது.

2. உலகத்துலயே இல்லாத ஆட்சியெல்லாம் நாம் பண்ணிவிட்டதாகக் கருத வேண்டாம். காங்கிரஸ், பிசேபி போன்ற வல்லாதிக்க சக்திகளுக்கு உட்பட்டு, நம்மாலியன்ற அளவில் இந்தியாவின் பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு கல்வி, உட்கட்டமைப்பு, பிற துறைகளில் சிறந்து விளங்குகிறோம். குறிப்பாக சமூகநீதியில் சற்று மேம்பட்டு நிற்கிறோம். அவ்வளவுதான். நாம ஜேம்ஸ்பாண்டுதான், ஜேம்ஸ்பாண்டுதான். அதுக்காக துப்பாக்கியை நீட்டி பிடிச்சமானிக்கே நிக்கத்தேவையில்லை.

3. இணையற்ற தலைவன், முன்களப்போராளி, வழிகாட்டி நமக்குக் கிடைத்திருக்கிறான். வேறு யாருக்கும் கிடைக்காத காலம் தந்த பொன். கலைஞரை எப்படி அவர் தகுதிக்கு ஈடாகாத ஜெயலலிதாவோடு போராட காலம் நிர்ப்பந்தித்ததோ, அப்படியே தளபதி ஸ்டாலினை, விஜய்க்கு முன்னால் நிறுத்தியிருக்கிறது. போர்க்களத்தில் எதிரிகளின் உயரத்தை அளந்துகொண்டிருக்க முடியாது. அங்கே வீரத்துக்கு மட்டும்தான் வேலை. ஆயுதங்கள் மட்டும்தான் பேசும். பாருங்க, தளபதி அதை ஏற்றுக்கொண்டு முதல் நாளே கடமையில் இறங்கிவிட்டார். முதல்வரின் பதவியேற்புக்கு வாழ்த்து தெரிவித்த கண்ணியம். அந்தப் பேச்சிலிருந்த தவறுகளுக்கு கண்டனம். கத்துக்குங்கடா!

4. நமக்கு புதிய எதிரி, கூடுதல் எதிரியெல்லாம் வந்துவிடவில்லை. அதிமுகவின் கதை முடிந்துவிட்டது. இனி தமிழக அரசியலில் இருந்து அதிமுக வெளியேறும். வெளியேற்றப்படுவார்கள். இப்போது மறுதேர்தல் நடந்தால் நம் வாக்கு சதவீதம் இம்மியளவும் குறையாது. அதிகரிக்கக்கூட செய்யலாம். ஆனால், வெற்றிபெறவே முடியாது. இருதலைக் கொள்ளியாய் குழப்பத்தில் அதிமுகவுக்கு போன வாக்குகள் அனைத்தும் சிந்தாமல், சிதறாமல் தவெகவுக்கு வந்துவிடும். 200 சீட்டுகளுக்கு குறையாமல் வெல்வார் விஜய். இனியும் நமக்கு ஒரே எதிரிதான், எதிரியின் முகம் மாறியிருக்கிறது, அவ்வளவுதான். பிறகேன் அவருக்கே நம் அனுமதியுடன் கூட்டணிக்கட்சிகள் ஆதரவளித்து முதல்வராக்க வேண்டும்? முக்கியமாக இரண்டு காரணங்கள். ஒன்று, இன்னொரு தேர்தல் தவெகவை இன்னும் பெரியளவில் பலப்படுத்திவிடும். இரண்டு, அவரை பிசேபியின் கைகளுக்குத் தாரை வார்ப்பது, நம் மக்களைக் காக்க கடைசியாய் ஒரு வழியிருந்தும் அதைச்செய்யாத அறம் தவறியவர்களாகி விடுவோம். எதிரி எந்த ஆயுதத்தோடும் போராடலாம். அவர்களின் நோக்கம் வேறு. நாம் மக்களுக்கானவர்கள், அறத்தை இழந்து நம்மால் சண்டையிட முடியாது.

5. அப்படியானால் பிசேபியின் அடுத்த நகர்வு? இனி அவர்கள் அதிமுகவை நம்பிப் பயனில்லை. மெல்ல சிட்டியை டிஸ்மாண்ட்லிங் செய்து காயலான் கடையில் போட்டுவிடுவார்கள். போதுமான காலம் பொறுத்திருந்து சாம தான பேத தண்டங்களைப் பயன்படுத்தி தவெகவை தங்கள் வசப்படுத்துவார்கள். அதுவரை நாம் அவரைக்காத்து அரசியல் கற்றுத்தருவோம். அதன் பின்னர், மீண்டும் களம் இரண்டாகும். அது நடக்கவில்லை என்றால் கூட, ஒன்றும் பாதகமில்லை. சனாதனத்துக்கு அடங்காத சக்திகளாக இருக்க நாம் மட்டும்தான் ஒட்டுமொத்த குத்தகை எடுத்திருக்கோமா என்ன? தமிழகத்திலிருந்து ஒன்றுக்கு இரண்டாய் சக்திகள் ஒன்றியத்தை எதிர்த்து போராடட்டுமே? நல்லதுதானே? அப்படியானால் தமிழக ஆட்சி யாருக்கு? ஆட்சித்திறம் சார்ந்து மக்கள் அதை முடிவு செய்யட்டும்.

6. இறுதியாக தவெகவின் ஆயுதங்கள். எல்லாமே அநியாயமாகத் தெரிகின்றன, எல்லாம் சினிமா பில்டப்பாக இருக்கிறது, உலகெங்கும் சோதனை நிலையில் இருக்கும் டிஜிடல் வார்ஃபேரை கையிலெடுத்திருக்கிறார்கள். நம் கையில் கத்தி இருக்கையில் துப்பாக்கியை எதிரி கொண்டுவந்தது சரியா? போர்களில் விதிகளுக்கு இடமில்லை! நமக்கும் ஒரு காலத்தில் (50s 60s) சினிமா பில்டப் இருந்தது. நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டுமென்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான். டிஜிடல் வார்ஃபேரை நாமும் எடுத்துக்கொண்டாக வேண்டும். அவர்கள் பஞ்சத்துக்கு வைப் செய்பவர்கள். ஆனால், OG Vibe கிரியேட்டர்களே நாம்தான். அதை டிஜிட்டலுக்கு மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. கருவி பழகுக!

7. விஜயிடம் நேர்மை இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லையே? இனியாவது தெரிகிறதா பார்ப்போம். தெரிந்தால் மகிழ்ச்சி. ஒருவேளை நம் சந்தேகம் சரிதான் என்றால், அது மக்களின் பிரச்சினை. நாம் மக்களின் வாரியர்ஸ் மட்டுமே! மன்னனைத் தேர்வது மக்களின் கடன்!

8. வெற்றியிலும், தோல்வியிலும் ஃபன் பண்ணிக்கொண்டிருப்பவன்தான் ஒரிஜினல் திமுககாரன் என்று என் அனுபவத்துக்கு கேள்விப்பட்டிருக்கிறேன். அதைத்தான் சற்று இழந்திருக்கிறோமோ என்று தோன்றுகிறது. ஃபன் பண்ணுங்கடா பக்கிகளா!

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் முருகன் மலைக் கோவில் தல விருட்சத்தில் அரேபிய மத பிறைக் கொடி ஏற்றிட- எதிர் போராடிய தமிழர் பக்தர்கள் மீதான திமுக வழக்கை ஹைகோர்ட் ரத்து

  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான மலை உச்சியில் உள்ள ஸ்தல விருட்சமான கல்லத்தி மரம் , சந்தனக்கூடு திருவிழாவின்போது...