Tuesday, June 9, 2026

ஆயிரம் ஆண்டு சோழர்- ஹோய்சாளர் கால கோவில் சிலைகள் சென்னை முயூசியம் சீரமைப்பு போது பாதிப்பு அடைகிறது



சென்னை எக்மோர் மியூசியத்தில் செப்பனிடும் பணிகள் நடப்பதால் அங்கே ஒரு செக்சனில் உள்ள சிலைகளை எல்லாம் வெளியே எடுத்துப் போட்டு வைத்திருக்கிறார்கள். பணிக்கு வைத்திருக்கும் கட்டிட சாமான்களின் இடையே சோழர், ஹொய்சாலர் காலத்து சிலைகள் வெயிலில் கிடக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை 1000, 1500 ஆண்டுப் பழையவை. விலைமதிப்பு இல்லாதவை.
கூடுதல் சிறப்பு என்னவெனில் இந்த சிலைகளில் பலவும் வெளிநாடுகளில் பல மியூசியங்களுக்கும் செல்வந்தர்களுக்கும் விற்கப்பட்டிருந்தவை. நமது சிறப்பு சிலை மீட்புக் காவல் படையினால் பெரும் ராஜரீக முயற்சியும் செலவும் செய்யப்பட்டு மீட்டுக் கொண்டு வரப்பட்டவை.
விலை மதிப்பின்றி, பெரும் முயற்சியுடன் மீட்கப்பட்ட இந்த சிலைகள் தற்போது கம்பி, கட்டைகளுடன் கோடை வெயிலில் வாடிக் கொண்டிருக்கின்றன.

 

No comments:

Post a Comment