இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, ஸ்டாலின் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து சைதை துரைசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 6 ஆண்டுகளாக நடந்தது. அதன்பிறகு ஸ்டாலின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து சைதை துரைசாமி டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஸ்டாலின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் கூடுதல் காலஅவகாசம் கேட்டார்.
அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் 2026 ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
No comments:
Post a Comment