Wednesday, January 21, 2026

ஈவெராமசாமியார் - தலித்களுக்கு ஒன்றும் செய்யவில்லை -அறிவாயுதன்

ஈவெராமசாமியார் -   தலித்களுக்கு ஒன்றும் செய்யவில்லை -அறிவாயுதன் அறிவாயுதன் 

பொதுவாக, கி.வீரமணி உட்பட எல்லா திராவிட பெரும்புள்ளிகளிடமும், பேட்டி என்று வந்துவிட்டால் - கேட்பதற்கென்று சில கேள்விகள் உள்ளன. அவை "இந்து மதத்தை மட்டும் தான் விமர்சிக்கிறிர்கள், பிற மதங்களை விமர்சிப்பதில்லை, ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு ஈவெராமசாமி எதையும் செய்யவில்லை, இடைநிலை சாதிக்காக தான் உழைத்தார் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை பற்றி பேச சொன்னால் தொடை நடுங்குகிறிர்கள், சாமானியனின் இறை நம்பிக்கையை கேலி பேசும் தி.க.காரன், திராவிட பிரபலங்களின் இறை நம்பிக்கையை விமர்சிப்பதில்லை - இந்த கேவலமான முரண்பாடு ஏன் என்பது மாதிரியான கேள்விகள். இம்மாதிரி கேட்கப்படும் கேள்விகளுக்கு கி.வீரமணியிலிருந்து வேறு எவரும், இதுவரை நேர்மையாக பதிலளித்ததில்லை.

அமெரிக்காவில் மனிதநேய சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற கி.வீரமணி, அமெரிக்கத் தமிழ் வானொலிக்கு பேட்டி கொடுத்தார். 11.11.2019 நாள் விடுதலையில், "அமெரிக்கத் தமிழ் வானொலிக்குத் தமிழர் தலைவர் பேட்டி" என்கிற தலைப்பில் வந்த செய்தியில், நாம் தி.க.வினரிடம் கேட்பதற்கென்றே இருக்கிற கேள்வி என குறிப்பிட்ட கேள்வியிலிருந்து, இந்திரா தங்கசாமி என்பவர் ஒரு கேள்வி கேட்டார், "நீங்கள் பெரியாரோடு பயணித்தவர் தொடர்ந்து. பெரியாரைப்பற்றி ஒரு விமர்சனம், அது உங்களுக்கு தெரிந்திருக்கும். பெரியார் மேல்ஜாதியிடமிருந்து வாங்கி, இடைநிலை ஜாதியினரிடம் கொடுத்துவிட்டார். அதற்குக் கீழே உள்ள தலித் போன்றவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று ஒரு விமர்சனம் இருக்கிறதே?


கி.வீரமணியின் பதில், "அது அடிப்படை அற்ற விமர்சனம் என்பதற்கு ஒன்றை சொல்கிறேன். கலைஞர் தொலைக்காட்சியில் தலைமை செய்தி யாசிரியராக இருக்கக்கூடிய நண்பர் திருமாவேலன் அவர்கள், ‘‘ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமா பெரியார்?'' என்று ஒரு அரிய புத்தகம் எழுதியிருக்கிறார். 300 பக்கங்கள் உள்ளது அந்த புத்தகம். இந்த இயக்கத்திற்குப் பெயரே என்னவென்றால், நான் ஜாதியை சொல்லக்கூடாது. கீழ்ஜாதிக்காரன் பெயரை சொல்லித்தான், திராவிட இயக்கத்தை சொல்வார்கள். நான் அந்த சொல்லைப் பயன்படுத்த விரும்பவில்லை. வலதுசாரி ‘மாயமான்'களைப்பற்றி சொன்னேன் அல்லவா, அந்த மாயமான்களில் இதுவும் ஒரு ‘மாயமான்.' ஆகவேதான், அதனை எச்சரிக்கையோடு பார்த்தாலே, அது தெளிவாகத் தெரிந்துவிடும்.

அவர்களுடைய ஏவுகணைகள்தான் இவைகள். அந்த ஏவுகணைகள் பயன்படாது. திருமாவேலன் அவர்களுடைய புத்தகத்தில், ஆதார பூர்வமாக எழுதியிருக்கிறார். ‘குடிஅரசு' இதழ், ‘விடுதலை' இதழிலிருந்து ஆதாரங்களை எடுத்து எழுதியிருக்கிறார்." என கி.வீரமணி கூறுகிறார். "ஈவெராமசாமி, மேல்ஜாதியிடமிருந்து வாங்கி, இடைநிலை ஜாதியினரிடம் கொடுத்துவிட்டார்." என கூறப்படுவது வலதுசாரிகளின் பொய்யுரை, மாயமான் என்கிறார். அதற்கு திருமாவேலன் புத்தகத்தை குறிப்பிட்டு, ‘குடிஅரசு' இதழ், ‘விடுதலை' இதழிலிருந்து ஆதாரங்களை எடுத்து எழுதியிருக்கிறார் என குறிப்பிடுகிறார். அதே விடுதலை, குடிஅரசு இதழிலிருந்தே ஈவெராமசாமியின் சில பேச்சுக்களை தருகிறோம். அந்த பேச்சுக்களை வைத்தே, ஈவெராமசாமியின் யோக்கியதை என்னவென கூறி, "தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அந்த ஈவெராமசாமி உழைத்திருப்பாரா அல்லது நாயக்க, நாயுடு சமூகத்திற்காக உழைத்திருப்பாரா என்கிற கேள்வியை எழுப்புகிறோம்.

"திராவிடமே! தமிழ்நாடே!" என்கிற தலைப்பில் ஈவெராமசாமி கூறியது.

08.03.1947 குடிஅரசிலிருந்து.... "நீ எந்தப் பெயரையோ வைத்துத் தொலைத்துக் கொள். இன்று நீ அனாதியாய், அழுவாரற்ற பிணமாய் இருக்கின்றாய். உன்னை ஏன் என்று கேட்க ஆளில்லை. இந்தத் திராவிட நாட்டில் 10இல் ஒரு பங்குகூட இல்லாத முஸ்லிம்களின் நிலை எவ்வளவு உயர்ந்துவிட்டது. அவர்கள் எவருடைய தயவும் வேண்டாத உயர்நிலை அடைந்து விட்டார்கள். அதுபோலவே திராவிடநாட்டில் 6இல் ஒரு பங்கு கொண்ட தீண்டப்படாத மக்களாயிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை திடீரென்று எவ்வளவு உயர்ந்துவிட்டது தெரி யுமா? இந்தியாவைவிட்டுப் பிரிட்டிஷார் விலகிக் கொள்ளும் ஒப்பந்தத்தில் இந்தத் தீண்டப்படாத மக்கள் என்பவர்களின் விஷயம் ஒரு நிபந்தனை ஆக்கப்பட்டு அதற்கேற்றாற் போல் வேலையும் நடந்து வருகிறது.

அவர்கள் இனிமேல் தீண்டப்படாத மக்களும் அல்ல, தாழ்த்தப்பட்ட மக்களும் அல்ல என்கின்ற நிலைமையை அடைந்துவிட்டார்கள். அவர் களுக்கு இனி உத்தியோகங்கள் ஓடி ஓடி வரும்; பதவிகள் தேடித்தேடி வந்து கட்டி அணையும். இத்திராவிடநாட்டில் 30இல் ஒரு பங்கு வீதம் எண்ணிக்கைக் கொண்ட பார்ப்பனர்கள் நிலையை நீயே பார். அவர்கள் இல்லாத இடம் எது? இந்திய ராஷ்டிரபதி, இந்திய முதல் மந்திரி, திராவிட முதல்மந்திரி மற்றும் என்ன என்ன எல்லாவற்றிலும் பார்ப்பனர்கள், சர்வம் பார்ப்பன மயம். இவர்கள் தவிர கிறிஸ்தவர் களைப் பார்! அவர்கள் திராவிடத்தில் 40இல் ஒரு பங்கு (இருக்கலாம்) உள்ளவர்கள் அவர் களுக்கு என்ன குறை என்று யாராவது சொல்ல முடியுமா? பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியில் நல்ல செல்வாக்குடனும் உயர்தர வாழ்க்கையோடும் இருக்கிறார்கள். மற்றும் இந்தத் திராவிட நாட்டுக்குப் பிழைக்கவந்த யாதும் ஊரே என்கின்ற வடநாட்டு மக்கள் கூட்டத்தின் தன்மையைப் பார்.

அவன் உண்டு கழித்தது (மீதி) தான் உனக்கு மிச்சம் என்கின்ற தன் மையில் இருக்கிறது. இந்த நிலையில் நீ, தமிழனா? தெலுங்கனா? கன்னடியனா? மலையாளியா? யார்? யாராய் இருந்தாலும் சரி. சென்னை மாகாணத்தவனான திராவிடனான அல்லது தமிழனே ஆன நீ என்ன நிலையில் இருக்கிறாய்? நீ மற்றவரிலும் தாழ் நிலையில் இருப்பதற்குக் காரணம் என்ன?" ஈவெராமசாமி கூறியதில் எத்தனை பொய்யும், பித்தலாட்டமும் உள்ளது என பார்ப்போம். "ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்வு பெற்றுவிட்டார்கள் - திராவிட தெலுங்கர், கன்னடர்களை காட்டிலும்" என்கிறார். அதுவும் எப்போது? 1947ல். உண்மை நிலை அவ்வாறாகவா உள்ளது. மூத்தக்குடியான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை ஈவெராமசாமி தமிழர்கள் என்ற கணக்கிலேயே எடுத்து கொள்ளவில்லை.

ஈவெராமசாமி, "திராவிட கணக்கில் எம்மக்களை சேர்க்க வேண்டாம். அது எங்களுக்கு தேவையில்லை. தமிழரல்லாதவர்களாக காட்ட முயல்வது அயோக்கியதனமில்லையா? ஈவெராமசாமி குறிப்பிட்ட முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்ப்பனர்கள், வடநாட்டவர் அளவுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்வு பெற்றுவிட்டார்களாம். ஈவெராமசாமி 'பகல் கனவு' கண்டுவிட்டு தலையங்கம் எழுத உட்கார்ந்துவிட்டார் போலும். "உத்தியோகங்கள் ஓடி ஓடி வருமாம்; பதவிகள் தேடித்தேடி வந்து கட்டி அணைக்குமாம்". இப்படி வயிற்றெரிச்சல் படும் ஈவெராமசாமி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்திருப்பாரா என்கிற கேள்வி ஒருவன் மனதில் எழுவது நியாயம் தானே. ஈவெராமசாமியின் நாயக்க சமூகமும், அவர் குறிப்பிடும் இதர சமூகமும் தான் இழிந்த நிலையில் உள்ளதாம்.

இப்படி சொல்ல ஈவெராமசாமிக்கு மனசாட்சி என்பதே இல்லாமல் போயிருக்க வேண்டும். பார்ப்பனர்கள் பற்றி ஈவெராமசாமி சொல்வதில் இருக்கிற அதே உண்மை, கிறிஸ்தவர்கள் பற்றி, முஸ்லிம்கள் பற்றி கூறுவதிலும் உள்ளது. பார்ப்பனர் அளவுக்கு பதவிகளில் இல்லையென்றாலும் கிறிஸ்தவன் என்றால், முஸ்லிம் என்றால் ஆட்சியாளன் அஞ்சுகிறானே. சிறுபான்மை சமூக அந்தஸ்த்தில் தாங்கள் நினைத்ததை சாதித்து கொள்கிறார்களே.

ஒடுக்கப்பட்ட சமூகத்தால் அது இயலுமா? தனி தொகுதிகளை விட்டால், அவர்களுக்கு தொகுதி இல்லையே? ஈவெராமசாமியால் இழிந்த, நலிந்த நிலையில் இருப்பதாக குறிப்பிடப்படும் திராவிடன் நிலை அப்படியா உள்ளது. அதனால் பிறர் விஷயத்தில் ஈவெராமசாமி கூறும்போது இருக்கிற உண்மை, ஒடுக்கப்பட்டோர் விஷயத்தில் இல்லை. இந்த விஷயத்தில் ஈவெராமசாமி 'பொய்யன்' ஆகிறார்.

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பது போல், ஒடுக்கப்பட்டோரின் சமூகநிலை, "திராவிட நாட்டில் 6இல் ஒரு பங்கு கொண்ட தீண்டப்படாத மக்களாயிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை திடீரென்று எவ்வளவு உயர்ந்துவிட்டது தெரியுமா?" என்று ஈவெராமசாமி வியக்கிற அளவா உள்ளது. கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டதால் எரிக்கப்பட்டு கொல்லப் பட்டது, "நாயக்க சமூகமா... ஒடுக்கப்பட்ட தலித் சமூகமா...' ஏன் இங்கே ஒடுக்கப்பட்ட சமூகத்தாரோடு ஈவெராமசாமியின் நாயக்க சமூகத்தை மட்டும் இணைத்து பேசுகிறோம் என்றால், சாதியை ஒழிக்க கிளம்பிய ஈவெராமசாமியானாலும், தம் சொந்த சாதியான "நாயக்கமார்கள்' நாமஞ்சாத்தப்பட்டதற்கு தானே ஒப்பாரி வைத்தார். இதோ ஈவெராமசாமி 'நாயக்கர்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள்' என்பதற்காக பொங்கி எழுந்த காட்சி.

"கோயமுத்தூர் ஜில்லாவில் கொங்கு வேளாளர்களுக்கு அடுத்த சமூகம் ஜனப் பெருக்கத்திலும் விவசாயத்திலும் இரண்டாவதாக விளங்கக்க்கூடியவர்கள் ஆந்திர நாயக்கர்மார் அதாவது கம்மநாயக்கர்மார் சமூகமாகும். இவர்கள் செல்வத்திலும் வியாபாரத்திலும் வேளாளர்களைவிட சிறிது குறைந்தவர்கள் அல்ல என்றே சொல்லலாம். பொள்ளாச்சி, உடுமல்பேட்டை, திருப்பூர், அவனாசி ஆகிய தாலூக்காக்களில் இவர்கள் குறிப்பிடத்தகுந்த ஜன சமூகமுள்ளவர்கள். இவ்வளவோடு மாத்திரமல்லாமல் காங்கிரஸ் கூப்பாட்டிலும் கதர் வேஷத்திலும் ஜெயிலுக்கு போனதிலும் அடிபட்டதிலும் பிழைப்பு இருப்பு முதலியவைகளை லக்ஷியம் செய்யாமல் காங்கிரஸ் காங்கிரஸ் என்று அலைந்ததிலும் இவர்கள் மற்ற எந்த சமூகத்தாரையும் விட குறைந்தவர்கள் அல்ல என்பது மாத்திரமல்லாமல் வேறு பல சமூகங்களை யெல்லாம் விட மேம்பட்டவர்கள் என்றும் சொல்லலாம்.

அப்படிப்பட்ட சமூகத்தார் இன்று காங்கிரஸ் பார்லிமெண்டரி கமிட்டியாரால் நாமம் சாத்தப்பட்டு விட்டார்கள். இன்று பெரிய நூல் மில் வைத்து நடத்துபவர்களில் சுமார் 10 மில்லுகள் வரை நாயக்கர்மார்கள் நடத்துகிறார்கள். அவனாசி கோயமுத்தூர் தாலூக்காக்களின் ஸ்தானத்தை ஏன் நாயக்கர்மார்களுக்கு விட்டுவிடக்கூடாது என்று கேட்கின்றோம். தோழர் வி.சி. பழனிச்சாமிக் கவுண்டர் அவர்களுக்கு ஜில்லாபோர்டு பிரசிடெண்டு ஒன்றுபோதாதா? அவர் தமையனார் கனம் வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்கள் அப்பர் சேம்பர் பார்ப்பதுகொண்டே தோழர் பழனிச் சாமிக் கவுண்டர் திருப்தி அடையக்கூடாதா என்று மறுபடியும் கேட்கின்றோம். ஆனால் நாயக்கர்மார்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான். இனியாவது புத்தி வந்துஉடனே ஒரு மகாநாடு கூட்டி காங்கிரஸ் கொடுமையை கண்டித்து கிளர்ச்சி செய்து தாங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்று நினைக்கின்றோம். - குடி அரசு துணைத் தலையங்கம், 15.11.1936.

இந்த ஈவெராமசாமி, இழிந்த, நலிந்த திராவிடன் என்கிற போர்வையில் யாருக்காக உழைத்திருப்பார் என சொல்லவும் வேண்டுமோ. கோவையில் நாயக்கமார்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள் என்றால், இன்னொரு சாதிக்கு நாமஞ்சாத்திவிட்டு ஈவெராமசாமி சாதிக்காரன் மேலெழும்பி வர போகிறான். அப்போது அந்த இன்னொரு சாதிக்காக ஈவெராமசாமி, இவ்வளவு அப்பட்டமாக வக்காலத்து வாங்கினாரா? இந்த ஈவெராமசாமி தாழ்த்தப்பட்டோருக்காக உழைத்ததாக சொல்வது பெயர் சம்பாதிக்க தானே இருக்குமே தவிர, ஒடுக்கப்பட்டோர் உயர்வு பெற வேண்டும் என்கிற நோக்கத்திற்காக இருந்திருக்காது. இருந்திருந்தால், "திராவிட நாட்டில் 6இல் ஒரு பங்கு கொண்ட தீண்டப்படாத மக்களாயிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை திடீரென்று எவ்வளவு உயர்ந்துவிட்டது தெரியுமா?" என்று கூற வாய் வந்திருக்காது. தீண்டப்படாத மக்கள் வளர்ந்ததற்கு மகிழ்ச்சி அல்லவா அடைந்திருப்பார் ஈவெராமசாமி.

ஆனால் மகிழ்ச்சி அடைந்த மாதிரி இல்லையே. பட்டம், பதவிகளில் திராவிட சாதிக்காரன் பிடி நழுவுகிறதே என்கிற கேவல் தானே உள்ளது. 2000 ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டிருந்த ஒரு சமூகம், இதோ இப்போது தான் கொஞ்ச கொஞ்சமாய் மேலேற துவங்கி உள்ளார்கள். அதிலும் சாண் ஏறினால் முழம் வலுக்குகிறது. இந்த கண்ணுக்கு தெரியாத வளர்ச்சியை கூட பொறுக்க முடியாத ஈவெராமசாமி அரற்றுகிறார், "திராவிடநாட்டில் 6இல் ஒரு பங்கு கொண்ட தீண்டப்படாத மக்களாயிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை திடீரென்று எவ்வளவு உயர்ந்துவிட்டது தெரியுமா?" என. எதுய்யா திராவிட நாடு. சமூகநீதி பேசுவதாக சொல்லும் ஈவெராமசாமிக்கே தீண்டப்படாத மக்களின் சின்னஞ்சிறிய வளர்ச்சியே உறுத்தலாக உள்ளபோது, ஆண்ட ஆதிக்க சாதியின் புத்தி எப்படி இருக்கும்.

நாயக்க மன்னர்களோடு இடம் பெயராந்து வந்த ஆந்திர மக்கள், இங்கே நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாய் இருக்கிறார்கள்... எத்தனை எத்தனை தொழிற்சாலை நாயுடுகளுக்கு. மண்ணின் மைந்தர்களாம் தமிழர்கள் கூலிகளாய். இதெப்படி சாத்தியமானது என ஈவெராமசாமியின் மூளை என்றேனும் சிந்தித்திருக்குமா? 'மண்ணின் மைந்தர்களாம் ஒடுக்கப்பட்ட பட்டியல் இன சமூகத்தை சேர்ந்தவர்களில் எத்தனை மிராசுதார்கள் இருக்கிறார்கள்... எத்தனை தொழிலதிபர்கள் இருக்கிறார்கள்" என. 350 வருச காலத்திற்குள் ஈவெராமசாமியின் உறவுகாரர்கள் மட்டும் எப்படி ஆயிரமாயிரம் ஏக்கருக்கு அதிபதியானார்கள். பட்டியல் இன சமூகத்தில் ஏன் எந்த சொத்து, பத்தும் இல்லை. ஈவெராமசாமி கூறுவார், தம் நாயக்க கூட்டாளிக்கு ஆதரவாக, "கடுமையாக உழைத்தோம். நிலக்கிழார் ஆனோம்" என்று. ஒடுக்கப்பட்ட மக்கள் உழைக்காத உழைப்பையா நீ உழைத்துவிட்டாய்.

நீ கடுமையா உழைக்கவில்லை. கடுமையாக சுரண்டினாய் தமிழகத்து மண்ணின் மைந்தர்களை. அதனால் தான் இத்தனை விவசாய நிலங்களும், இவ்வளவு தொழிற்சாலைகளும் உங்களுக்கு கிடைத்தது. இவ்வளவு வசதி இருந்தும், "திராவிட நாட்டில் 6இல் ஒரு பங்கு கொண்ட தீண்டப்படாத மக்களாயிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை திடீரென்று எவ்வளவு உயர்ந்துவிட்டது தெரியுமா?" என அடுத்தவன் நிலையை பார்த்து வெம்புகிறாய். நீ சமூகநீதிக்காரனா... சமூக அநீதிகாரனா... ஈவெராமசாமியின், "நாயக்கர்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள்" எனும் தலையங்கத்தையும், "திராவிடமே... தமிழ்நாடே...." கட்டுரையையும் வாசிக்கிற ஒருவனின் மனதில் இயல்பாக என்ன தோன்றும், ஈவெராமசாமி, "மேல்ஜாதியிடமிருந்து வாங்கி, இடைநிலை ஜாதியினரிடம் கொடுத்துவிட்டார். அதற்குக் கீழே உள்ள தலித் போன்றவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என தானே நினைப்பான். அது தானே உண்மையாகவும் இருக்க முடியும்.

அண்ணல் அம்பத்கரே, ஈவெராமசாமியை அவ்விதம் கூறவில்லையாயினும் நீதிக்கட்சி கோஷ்டிகளை அவ்விதம் தானே சாடினார், "செகண்ட் கிளாஸ் பார்ப்பனர்கள் என்று. ஈவெராமசாமி "சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு" என பல முகமூடி போட்்டு கொண்டு, தம் சாதிக்காரனுக்காக உழைத்தார் என்பதே பல கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது. அதை தான் கி.வீரமணியிடம் வானொலி பேட்டியில் கேட்டிருக்கிறார்கள்.

 ஈ.வே.ராமசாமியும் சாதி ஒழிப்பும் --------------------

வேலைக்கு சேர்க்கும் முன் சாதியைக் கேட்பார் ஈ.வே.ரா?

”1949-இல் அண்ணா ஆலோசனையின் பேரில் விடுதலையில் சேர மீரான்சாகிப் தெருவில் இருந்த விடுதலை அலுவலகத்தில் பெரியாரைச் சந்தித்தேன். 

அவர் கேட்ட முதல் கேள்வியே, ”நீ என்ன சாதி...?” என்று கேட்டார். ( 'அண்ணாவின் வார்த்தை ஜாலம்'

-ஜே வி கண்ணன்)த சன்டே இந்தியன் 21.09.2010 )

--------------------


பட்டியல் சாதி மக்களையும் எதிரிகளாக எண்ணினார் ஈ.வே.ரா


"1.பார்ப்பனர்கள்

2.நம்மில் கீழ்த்தர மக்கள்

3.முஸ்லீம்கள்

4.கிறித்துவர்கள்

ஆக இன்று நமக்கு சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள் இருக்கின்றன"

_ ஈ.வே.ரா (தமது 85 வது பிறந்தநாள் விழா மலரில்)


இங்கே 'நம்மில்' 'நமக்கு' என்பது பிராமணல்லாத (ஆதிக்க) சாதிகள், 'கீழ்த்தர மக்கள்' என்பது பட்டியல் சாதிகள்.

-----------------

தனது இனமான தெலுங்கு நாயக்கர் சாதிக்கென வெளிப்படையாக குரல்கொடுத்துள்ளார் ஈ.வே.ரா

"ஜனத்தொகையும், பிரபலமும், செல்வாக்கும், அரசியலில் ஞானமும் ஊக்கமும் உடையவர்கள் ஆந்திர நாயக்கமார்கள்"

"கோயமுத்தூர் ஜில்லாவில் அசம்பளிக்கு உள்ள 8 ஸ்தானங்களிலும் ஒன்றுக்குக்கூட நாயக்கர்களில் யாரையும் நியமிக்காமல் காங்கிரஸ்காரர்கள் பட்டை நாமம் சாத்திவிட்டார்கள்"

" நாயக்கர்மார்கள் தலைஎழுத்து இவ்வளவுதானா என்று கேட்கின்றோம். அவனாசி கோயமுத்தூர் தாலூக்காக்களின் ஸ்தானத்தை ஏன் நாயக்கர்மார்களுக்கு விட்டுவிடக்கூடாது என்று கேட்கின்றோம். தோழர் வி.சி. பழனிச்சாமிக் கவுண்டர் அவர்களுக்கு ஜில்லாபோர்டு பிரசிடெண்டு ஒன்றுபோதாதா?"

_ ஈ.வே.ரா (குடியரசு 15.11.1936)

------------


புலையர் பெண்கள் ரவிக்கை போடுவதை தாங்க முடியாத ஈ.வே.ரா 

"புலைச்சியெல்லாம் ஐம்பர் போட ஆரம்பிச்சிட்டா அதனாலேதான் துணிவிலை உயர்ந்துவிட்டது"

_ ஈ.வே.ரா 1962 ஜனவரியில் மேடைப்பேச்சு 

(இது 1962 முரசொலி பொங்கல் மலரில் கோட்டோவியமாக அதாவது கார்ட்டூனாக வந்தது)

----------------

தனது சாதித்திமிரால் பறையரை மிக மோசமாக வெறுத்தார் ஈ.வே.ரா

"பள்ளு பறையனுங்க படிக்க ஆரம்பிச்சிட்டானுக அதனாலதான் வேலை இல்லா திண்டாட்டம்"

_ ஈ.வே.ரா 1962 சனவரி  மேடைப்பேச்சு 

(மேலது சான்று)


”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பது தானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப் படவில்லையானால், அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது" (நூல்: வைக்கம்போராட்ட வரலாறு– வீரமணி)

------------------------

ஈ.வே.ரா தீண்டாமைக்கு எதிராக போராடியதில்லை

"தீண்டாமை விலக்கு விசயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால் அது எங்கள் நலத்திற்காகச் செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கென்று செய்ததாக மாட்டாது." _ ஈ.வே.ரா (குடியரசு 16.6.1926.)

இதில் 'எங்கள்' என்பது பிராமணரல்லா ஆதிக்க சாதிகள் 'உங்கள்' என்பது தீண்டாமைக்கு ஆளாவோர்

-----------------------

ஆதி திராவிடர் அதாவது தமிழக பட்டியல் சாதியாருக்காக அவர் போராடியதில்லை


"ஆதி திராவிடர் நன்மை கருதிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும்,

'ஆதி திராவிடரல்லாத மக்களில்' 'பார்ப்பனரல்லாத எல்லோருடைய' நன்மைக்கும் என்பதாக உணருங்கள்"

(குடியரசு 11.10.1931)

-------------------

வைக்கம் போராட்டத்தில் ஈ.வே.ரா பங்கு கடுகளவு

ஈழவர், புலையர் இணைந்து டி.கே.மாதவன் தலைமையில் கேரளாவில் வைக்கம் கோயிலில் நுழைவதற்கான தடையைநீக்க முன்னெடுத்த போராட்டம் 30.03.1924 அன்று ஆரம்பித்தது.


17.11.1925 வரை ஒன்றரை ஆண்டு நடந்த வைக்கம் போராட்டத்தில், நடுவில் மூன்றுமாதம் கூட முழுமையாகக் கலந்துகொள்ளாத ஈ.வே ராவை 'வைக்கம் வீரர்' என்பது வேடிக்கையானது.


1925 ஏப்ரல்14 அன்று வைக்கம் சென்ற ஈ.வே.ரா இரண்டு வாரங்கள் அங்கே மேடையில் பேசினார்.

ஏப்ரல் 28ஆம் தேதி பேசிய பேச்சுக்காக ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

ஒருமாதம் கழித்து விடுதலையாகி மறுநாள் ஜூன் 28ம் தேதியிலிருந்து மீண்டும் பத்து நாட்கள் பேசினார்.

கைதாகும் சூழ்நிலை வந்ததும் ஜூலை 5ல் வைக்கம் போராட்டக்களத்தை விட்டு காலி செய்தார்.

ஆயினும் இந்த வழக்கில், அவர் ஜூலை 28 கைது செய்யப்பட்டு, பின் செப்டம்பர்1ல் விடுதலை ஆனார். அதன்பிறகும் ஒரு ஆண்டு நடந்த அந்த போராட்டம் பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை.

ஆக ஈ.வே.ரா வின் பங்கு வைக்கம் போராட்டத்தில், 24 நாட்கள் பிரச்சாரமும்  இருமாத சிறையும் மட்டுமே. (1927 வரை அவர் தன்னை 'ராமசாமி நாயக்கர்' என்றுதான் கூறிக்கொள்வார்)

-----------

கீழ்வெண்மணி படுகொலையாளிக்கு ஆதரவாக இருந்தார் ஈ.வே.ரா


கோபாலகிருஷ்ண நாயுடு என்ற பண்ணையார் அப்பகுதி பள்ளர், பறையர் மீது ஆதிக்கம் செலுத்திவந்தார்.

அதை அம்மக்கள் எதிர்த்ததன் விளைவாக பண்ணையாரின் அடியாட்கள்  44 பேரை (பெரும்பாலும் பள்ளர்) எரித்துக்கொன்றனர்.

கீழ்வெண்மணி படுகொலை ஒரு சாதியப் படுகொலை ஆகும்.


கம்யூனிஸ்ட் கட்சி கூலி உயர்வு கேட்க  தூண்டியதால் படுகொலை நடந்ததாக கூலித்தொழிலாளருக்கு ஆதரவாக இருந்த கம்யூனிஸ்ட்டுகள் மீது பழியைப் போட்டார் ஈ.வே.ரா.


"நாகை தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர்" _ஈ.வே.ரா (28.12.1968 அறிக்கை)


எந்த இடத்திலும் தன் இனமான தெலுங்கு வந்தேறி கோபால கிருஷ்ண நாயுடுவைக் குறிப்பிடவோ கண்டித்ததோ கிடையாது.

---------------------

இடவொதுக்கீடு ஈ.வே.ரா வின் கொள்கை கிடையாது.

இடவொதுக்கீடு சாதிவாரியாக வாய்ப்பு வழங்குவது.

ஈ.வே.ரா முதலிலிருந்தே போராடியது 'வகுப்புவாரி பிரதிநிதித்துவம்' அதாவது பிராமணர் ஒரு வகுப்பு பிராமணரல்லாதார் ஒரு வகுப்பு.

பிராமணர் 3% ஆக எல்லாவற்றிலும் 3% வாய்ப்புதான் வழங்கப்படவேண்டும்.

இதை இடவொதுக்கீட்டுடன் குழப்பி ஏதோ இடவொதுக்கீடே ஈ.வே.ரா போராடியதால் கிடைத்ததாகக் கூறுகின்றனர்.

இடவொதுக்கீடு அம்பேத்கர் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்து அதன் பலனாக 1943லேயே மக்களுக்குப் பெற்றுத்தந்துவிட்டார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்களது வேலைக்காக படிப்புக்காக எந்த போராட்டமும் செய்யாத ஈ.வே.ரா. "குழாய் தனித் தனியாக போட்டுவிட்டீர்கள் தொட்டியில் தண்ணீரே இல்லையே" என்று நக்கல் செய்த ஈ.வே.ரா.

1950ல் பிராமணர்கள் வழக்கு தொடுத்து சாதிவாரி இட ஒதுக்கீடு நீக்கம் செய்யப்பட்டபோது தெருவுக்கு வந்து போராடினார். அதாவது பிராமண வெறுப்பினால்.ஈ.வே.ரா 'வகுப்புரிமை நாள்' என்றுதான் அறிவித்து போராடினார். பலரும் போராடினர்.

அவர் செய்த ஒரே ஒரு போராட்டத்தால் இடவொதுக்கீடு கிடைக்கவில்லை என்பது உறுதி.

------------

பலரும் ஈ.வே.ரா சாதி ஒழிப்பு போராளி என்று கூறுகிறார்கள்.

உண்மையில் அவர் பார்ப்பனரை கீழே இறக்கி ஆதிக்க சாதிகள் (அதிலும் வந்தேறிகள்) முதலிடம் பெற போராடிய சாதிவெறியரே ஆவார்.

அவர் எதிர்த்தது பார்ப்பனரையே பிராமணரை இல்லை.

  “உங்களுக்கு உறுதியாக இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன்.

மறந்தும் உங்கள் வாயில் பிராமணன் என்று வரக் கூடாது.

பார்ப்பான் என்று கூறுங்கள். கண்டிப்பாக பிராமணன் என்று கூறக் கூடாது. கண்ணீர்த் துளிகள் (தி.மு.க.) பிராமணன் என்பதைத் தவிர வேறு வார்த்தையை உபயோகிக்க மாட்டார்கள்”

(விடுதலை 30.06.1957)

பார்ப்பனர் என்பார் தமிழ் பேசும் பூசாரகர் சாதியார் ஆவர்.

ஆக அவரது ஒட்டுமொத்த போராட்டமும் தமிழர்களை எதிர்த்தே அமைந்திருந்தது.

பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

 

தாழ்த்தப்பட்டவர்கள் – மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட காலத்தில் – ஊமைகளாக இருந்த அவர்களுக்கு பாடுபட்ட தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான். ஈ.வே.ராமசாமி நாயக்கர் இல்லையேல் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறி இருக்கமுடியாது. தாழ்த்தப்ட்டவர்களையும் ஈ.வே.ராமசாமி நாயக்கரையும் பிரித்துப்பேசமுடியாது என்றெல்லாம் பகுத்தறிவுவாதிகள் பிதற்றிக் கொண்டுவருகிறார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களைப் பிரித்தே பார்த்திருக்கிறார். சாதி இந்துக்களைவிட தாழ்ந்தவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் வரமுடியாது, வரவும் கூடாது என்பதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்து.

காந்திஜி, ”கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்லமுடியுமோ அந்த அளவுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்” என்று சொன்னபோது அதன் மீது ஆத்திரப்பட்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியது என்ன தெரியுமா?

”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)

தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று சொல்லுகின்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், பறையர்களை சூத்திரர்களோடு ஒன்றிணைக்கக்கூடாது என்று சொல்கின்றார். காரணம் சூத்திரர்களோடு சேர்த்தால் நடுசாதியாக இருந்த சூத்திரர் கீழ்ச்சாதியாக ஆக்கப்பட்டுவிடுவார்களாம். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

தாழ்த்தப்பட்டவர்களை சூத்திரர்களோடு சேர்த்ததை அனுமதிக்கக்கூடாது என்று ஆத்திரத்தோடு சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தானா தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது சாதி இந்துக்கள்தான். பிராமணர்கள் அல்ல என்று தாழ்த்தப்பட்டவர்களே சொல்லுகின்றனர். ஆனால் இந்த உண்மையை மறைத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரி பிராமணர்கள்தான் என்று அடையாளம் காட்டியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

ஏனென்றால் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது தெரியக்கூடாது. தாழ்த்தப்பட்டவர்கள் சாதி இந்துக்களுக்கு எதிராகக் கிளம்பிவிடக்கூடாது. அதனால்தான் பிராமணர்களை எதிரியாகக் காட்டினார்.

எஸ்.வி. ராஜதுரை கூறுகிறார்:-

s-v-rajaduraiபார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்க விஷயத்தில் அம்பேத்கர் ஏமாந்து போய்விட்டார் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்றும் ஒரு மனத் தாங்கல் பெரியாரிடம் கடைசிவரை இருந்தது.

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்து தந்ததில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு அக்கறையில்லை. மாறாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்ற கவலை மட்டும் இருந்தது இருக்கிறது என்ற சொன்னால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய எண்ணம் சாதி இந்துக்கள் நலனில் மட்டுமே குறியாய் இருந்திருக்கிறது என்று தலித் எழுத்தாளர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

சிலர் கூறுவார்கள், சாதி ஓழிய வேண்டுமானால் ஒவ்வொருவரும் தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது! அது தப்பு! நம்மில் சாதி இல்லை. பார்ப்பான் ஒரு சாதி! மற்ற நாம் எல்லோரும் ஒரு சாதி! இந்த இரண்டுக்குள் நடப்பதுதான் கலப்பு மணம் எனலாம்.
(விடுதலை 06-04-1959)

 

நாமெல்லாம் ஒரே சாதி. நம்மில் சாதி இல்லை என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், தாழ்த்தப்பட்டவர்களை சாதி இந்துக்களோடு சூத்திரர்களோடு சேர்க்கக்கூடாது என்று கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு தெரியுமா?

‘தாழ்த்தப்பட்டவர்கள் – சாதி இந்துக்கள்’ என்று வரும்போது தன்னோடு தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளமாட்டார். ‘சாதி இந்துக்கள் – பிராணர்கள்‘ என்று வரும்போது போராட்டம் சூடுபிடிக்க தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்துக்கொள்வார். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தந்திரம்.

சாதி இந்துக்களோடு தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்தால் அது கலப்பு மணம் இல்லையா? இது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்? தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது. வேறு வேறு சாதியில் திருமணம் செய்யச் சொன்னால் அது தப்பாம் – இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

48வயது வரை ‘நாயக்கர்’ என்ற சாதிப்பெயரை விடாமல், தன்னுடைய நாயக்க சாதிப்பற்றை காண்பித்தவர்தான் இந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

நாம் இப்படிச் சொன்னால் உடனே பகுத்தறிவுவாதிகள் 1924ல் நடந்த வைக்கம் போராட்டத்தைச் சொல்லுவார்கள்.

இந்த வைக்கம் போராட்டம் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட முயற்சியால் – சுயமரியாதை இயக்கத்தால் நடத்தப்பட்டப் போராட்டம் அல்ல. அந்தப் போராட்டம் நடத்த ஏற்பட்ட செலவும், ஈ.வே.ராமசாமி நாயக்கரோ அல்லது அவருடைய இயக்கமோ கொடுத்தது அல்ல. அப்போது அவருடைய இயக்கமே தோன்றவில்லை. அந்தப் போராட்டம் தேசிய காங்கிரஸ் சபை வழிகாட்டுதலினால் கேரள காங்கிரஸால் நடத்தப்பட்ட போராட்டம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஈ.வே.ராமசாமி நாயக்கரும் காங்கிரஸில் இருக்கும்போதுதான் காங்கிரஸ் சார்பாக அங்கு சென்று போராடினார். அதனால் வைக்கம்போராட்ட வெற்றிக்கு ஈ.வே.ராமசாமி நாயக்கரை மட்டும் உரித்தாக்குவது மிகையாகும்.

ஆனால் இங்கு ஒரு கேள்வி தாழ்த்தப்பட்டவர்களிடையே எழுகிறது. அதாவது வைக்கம் போராட்டம் போல் தமிழ் நாட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தலைமையேற்று ஏன் நடத்தவில்லை?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி நிறைய பேசினார். நிறைய எழுதினார். மாநாடுகளில் தீர்மானங்களை இயற்றினார். ஆனால் செயலில் காட்டவில்லையே ஏன்?

தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டங்கள் நடத்தத் தயார் என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்னென்ன போராட்டங்களை நடத்தினார்?

பட்டியலிடத் தயாரா?

keezhavenmaniமுதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுமை ஏற்பட்டபோது அதை எதிர்த்து ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சம்பவங்களில் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பங்கு என்ன என்பதைத் தெளிவுபடுத்துவார்களா பகுத்தறிவுவாதிகள்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களைக் கண்டித்து, எதிராக, எதுவுமே செய்யவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது பற்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் களஞ்சிய முன்னாள் பதிப்பாசிரியர் டாக்டர் சாமி. சண்முகம் கூறுகிறார்:-

தமிழகத்தில் சீர்திருத்தவாதி என்று கூறிக்கொண்ட, வாழ்ந்து வந்த ஈ.வே.ரா அவர்கள், தீண்டாமையை ஒழிப்பேன் என்று கூறிக்கொண்டு பிராமணர்களைத் திட்டியே தன் பொதுவாழ்வை சிறப்பாகக் கழித்தவர். தீண்டாமை எங்கு தலைவிரித்தாடியதோ அங்கு தன் பிரச்சாரத்தைச் செய்யாமல் மிரட்டினால் அஞ்சி ஓடும் பிராமணர்களைத் தாக்கியே வாழ்ந்தார். இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் அரிஜனங்களை ஆலயத்தில் நுழையவும், வழிபடவும் செய்தவர் ஏன் தீண்டாமை தலைவிரித்தாடிய, இன்னும் விரித்தாடும் பரமக்குடி, முதுகுளத்தூர், மானாமதுரை பகுதிகளில் ஆலய பிரவேசம் செய்யவில்லை? வைக்கத்தில் நம்பூதிரி பிராமணர்களை எதிர்த்து நுழைந்தார். இங்கே முக்குலத்தோரை எதிர்க்கவேண்டும். இங்கே முயன்று இருந்தால் ரத்த ஆறு ஓடும். அங்கே நம்பூதிரிகள் அஞ்சி ஓடுவர் இதுதான் உண்மை.

ஈ.வே.ரா அவர்கள் 1967வரை தீண்டாமை ஓழிப்பதாக தீவிரமாக பேசிவந்தார். திருவரங்கத்தில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது. பூணூல் போடுவது பிராமணர்களுக்கு மட்டும் உரிய பழக்கம் இல்லை. செட்டியார், கம்மா, பலிஜா, வள்ளுவர், தச்சர், கொல்லர், ரெட்டியார் ஆகிய பிரிவினரிடையே இன்றும் சிறப்பாக விழாவைத்து நூல் அணிவிக்கப்பட்டுவரும் ஒரு சம்பிரதாயமாகும். மற்றவர்களைத் தொடாமல் பயந்தோடும் பிராணமர்களை மட்டும் அச்சுறுத்தி வந்தார். 1967-ல் அவருடைய கொள்கையில், ஊறிப்போய், பிரிந்து ஆட்சி அமைத்த தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் தீண்டாமை ஓழிப்பை தீவிரப்படுத்தியிருந்தால் அன்றைய தி.மு.க. அரசு ஓரளவுக்காவது தீண்டாமையை ஓழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும். ஈ.வே.ரா. இதை ஏன் செய்யவில்லை என்பது ஒரு மர்மமான செயலாகும்.

ஈ.வே.ரா.வின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பயன்படவில்லை என்பது உண்மை.

(நூல்:- தலித்துகள்)

டாக்டர் சாமி. சண்முகம் ஆர்.எஸ்.எஸ்.காரோ, இந்து முன்னணிகாரரோ, விசுவ ஹிந்து பரிஷத் காரரோ அல்ல. தன்னுடைய பல ஆண்டு கால அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். பலரின் அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் முடிவும் இதுதான்.

தாழ்த்தப்பட்டவர்களைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!

தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்ன போராடினார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கேவலமாக பேசினார் தெரியுமா?

வட ஆற்காடு பசுமந்தூரில் 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திராவிடர் கழக கூட்டமொன்றில் பெரியார் பேசிய போது, கூட்டத்திலிருந்து ஒருவர் ஆதிதிராவிடர் திராவிடர் கழகத்தில் சேருவதால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன நன்மை? எனக்கேட்ட கேள்விக்கு, ஆதிதிராவிடர்கள் திராவிடர்கழகத்தில் சேருவதால் திராவிடர் கழகத்துக்குத்தான் என்ன நன்மை? என்று எதிர்க் கேள்வி கேட்டார் பெரியார். அதாவது ஆதிதிராவிடரால் ஒரு நன்மையும் இல்லை என்று இலைமறையாகச் சொல்லிவிட்டார். இதை எதிர்த்து அன்றைய சென்னை மாகாணத்தின் சட்டசபை எம்.எல்.ஏ அவர்களின் ”உரிமை’‘ இதழின் ஜூலை 1949 பதிப்பில் பெரியாரின் கூற்றை தலைப்பாக வெளியிட்டு சேரிமக்கள் ஆதரவால் பெரியாரான ஈ.வே.ரா. ஆதிதிராவிடனை தனித்து ஓதுக்கிவிட்டதால் இனி அவன் தன் சுயபலத்தால் நின்றாலன்றி வாழ்வில்லை என்பதை விளக்கி, தலையங்கம் எழுதினார்.
(நூல்: கோலார் தங்கவயல் வரலாறு, கே.எஸ்.சீதாராமன்)

அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர். இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை.

ஆனால் இது உண்மைதான் என்று ஓர் ஆதாரம் கூறுகிறது. சென்னையில் சில அம்பேத்கர்வாதிகளால் நடத்தப்பட்டு வந்த ‘அம்பேத்கர்‘ இதழின் ‘சூட்டுக்கோல்‘ என்ற பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.

”ஓரு முறை ஈ.வே.ரா. துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று கூறினார். அதற்கு அன்று மறுப்புக் கூறினோம்”.

(அம்பேத்கர் மாத இதழ் – நவம்பர் – டிசம்பர் – 1963)

இதிலிருந்து தெரிவதென்ன?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா! தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையே கேவலமாகப் பேசியிருக்கிறார்.

No comments:

Post a Comment

தொல்காப்பிய பூங்கா வெகு சில பணக்கார கார்ப்பரேட் தனி முதலாளிகள் வாக்கிங் செல்வதற்காக பயன்படுகிறதா?

  தொல்காப்பிய பூங்கா வெகு சில தனியார் வாக்கிங் செல்வதற்காக பயன்படுகிறதா? https://www.facebook.com/photo/?fbid=1477557741043321&set=a.445...