Tuesday, February 10, 2026

திமுக அரசு -தஞ்சாவூர் தூய்மைப் பணியாளர்கள் தரமாக இல்லாத காலை உணவு -திருப்பி அனுப்பினர்

திமுக அரசு -தூய்மைப் பணியாளர்கள் தரமாக இல்லாத காலை உணவு -தஞ்சாவூர் திருப்பி அனுப்பினர்  11 Feb 2026

தஞ்சாவூர்: தஞ்சை மாநக​ராட்​சி​யில் பணி​யாற்​றும் ஒப்​பந்த தூய்​மைப் பணியாளர்கள் 16 பேர் நேற்று காலை தங்​களுக்கு வழங்​கப்​பட்ட உணவு தரமாக இல்லை என்று கூறி, ஒப்​பந்​த​தா​ரரிடமே திருப்பி வழங்​கி​விட்​டனர்.

தஞ்​சாவூர் மாநக​ராட்​சி​யில் பணி​யாற்​றும் தூய்​மைப் பணியாளர்கள், ஓட்​டுநர்​கள் என மொத்​தம் 757 பேருக்கு காலை உணவு வழங்​கும் திட்​டம் நேற்று முன்​தினம் தொடங்​கப்​பட்​டது.

தொடர்ந்​து, 2-வது நாளான நேற்று காலை 14-வது கோட்​டத்​தில் உணவு வழங்​கப்​பட்​ட​போது, உணவு தரமாக இல்லை என்​றும், ஒவ்​வாமை ஏற்​படு​வ​தாக​வும் கூறி அந்த உணவை தூய்​மைப் பணியாளர்கள் உண்ண மறுத்​து, அவற்றை ஒப்​பந்​த​தா​ரரிடமே வழங்​கி​விட்​டனர். மேலும், இதற்​கான காரணத்தை விளக்​கி, மாநக​ராட்​சி​யில் கடிதத்​தை​யும் வழங்​கினர்.

இதுகுறித்து தமிழ்​நாடு உள்​ளாட்​சித் துறை பணி​யாளர் சங்க மாவட்ட துணைத் தலை​வர் ஆனந்​த​ராஜ் கூறிய​தாவது: தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு காலை உணவு வழங்​கும் திட்​டத்​தின் கீழ் தஞ்​சாவூர் மாநக​ராட்​சி​யின் 5, 7, 8 ஆகிய கோட்​டங்​களில் ஒரு மாதம் பரீட்​சார்த்த முறை​யில் தின​மும் ரவா உப்​பு​மா, ரவா கிச்​சடி, சேமியா கிச்​சடி, வெண் பொங்​கல், இட்லி ஆகிய​வற்​றில் ஏதாவது ஒன்று வழங்​கப்​பட்​டது.

ஆனால், அந்த உணவு தரமாக இல்​லாத​தால் பல நாட்​கள் நாங்​கள் சாப்​பிட​வில்​லை. மேலும் இதுகுறித்து மாநக​ராட்சி அலு​வலர்​களிடம் தெரி​வித்​து, தரமாக உணவு வழங்க வேண்​டும் என கேட்​டுக் கொண்​டோம்.

இத்​திட்​டம் தொடங்​கப்​பட்ட பின் தரமான உணவு வழங்​கப்​படும் என்று அலு​வலர்​கள் உறுதி அளித்​தனர். ஆனால், தமிழகம் முழு​வதும் நேற்று (பிப். 9 இந்த திட்​டம் தொடங்​கப்​பட்ட பிறகு, இன்று காலை​யும் தரமில்​லாத ரவா கிச்​சடியையே வழங்​கி​னார்.

எனவே, 14-வது கோட்​டத்​தில் பணி​யாற்​றும் ஒப்​பந்​தத் தொழிலா​ளர்​கள் 16 பேரும், உணவை அவர்​களிடமே திருப்பி வழங்​கி​விட்​டோம். தரமான உணவு தந்​தால்​தான் ஏற்​றுக் கொள்​வோம்.

இல்​லை​யெனில், எங்​களுக்கு இந்த உணவு வேண்​டாம். இவ்​வாறு அவர் கூறி​னார். இதுகுறித்து மாநகர நகர் நல அலு​வலர் நமச்​சி​வா​யத்​திடம் கேட்​ட​போது, “14-வது கோட்​டத்​தில் தூய்​மைப் பணியாளர்கள் காலை உணவைத் திருப்பி அனுப்​பிய தகவல் இது​வரை எனக்கு வரவில்​லை, விசா​ரித்து உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​றார்.


 

No comments:

Post a Comment

பண்டைத் தமிழ் கல்வெட்டு, செப்பேடு, பானை ஓடுகள் உணர்த்துவது தமிழ் எழுத்துக்களின் மூத்த சகோதரி சமஸ்கிருதம்

 சங்க கால இறுதி முதல் உள்ள அனைத்து செப்பேடு, கல்வெட்டுகளில் அரசர் பெருமை கூறும் ஆரம்ப மெய்கீர்த்தி வாசகங்கள் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது.  த...