Tuesday, March 10, 2026

தென்காசி கோவில் கோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்று 4மாதமே ஆன நிலையில் உடைந்து விழுந்தது

நெல்லை:  சமீபத்தில் அறநிலையத்துறையினரால் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த  தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்தில் இருந்த  சிமெண்ட் கலசம் உடைந்து விழுந்தது பக்தர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

தென்காசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்திலிருந்த சிமெண்ட் கலசம் பெயர்ந்து விழுந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் முறையாகப் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாத நிலையில்  அவசரம் அவசரமாக இந்து அறநிலையத்துறையினரால் கும்பாபிஷேக விழா   நடத்தப்பட்டது.

வடக்கே காசி தெற்கே தென்காசி என்று அழைக்கப்படும் சிவதலங்களில் ஒன்றாக உள்ள தென்காசி மாவட்ட நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்றதும் பழமை வாய்ந்த திருத்தலமான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு  மகா கும்பாபிஷேகம் ஏப்ரல் 07 அன்று  காலை 9 மணி முதல் 10 மணிக்குள் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சில மாதங்களாக  கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், புனரமைப்பு பணிகள்  முறையாக நடைபெறவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அமைச்சர் சேகர்பாபு அதை மறுத்து வந்ததுடன், அவசரம் அவசரமாக கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக ஏப்ரல்  த 3ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான ஏப்ரல் 7ந்தேதி அன்று  அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 5 மணிக்கு விநாயகர், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

7 மணிக்கு மகா பூர்ணாகுதி, திரவ்யாகுதி நடைபெற்றது. 9 மணிக்கு மேல் உலகம்மாள் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்து 4 மாதங்களே ஆன நிலையில், புனரமைக்கப்பட்ட கோபுரத்தில் இருந்து சிமென்ட் கலசம் ஒன்று உடைந்து கீழே விழுந்த சம்பவம் பக்தர்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கோபுரம் கீழே விழுந்த நேரத்தில் அந்த பகுதியில் பக்தர்கள் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிக்கப்பட்டது.

கோவிலில் முறையாக பராமரிப்பு பணி செய்யாமல் கும்பாபிஷேகம் நடத்தியதுடன் கோவிலின் பல பகுதிகளில் இன்னும் பாழடைந்தே காணப்படுவதாக, பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் பலமுறை சொல்லியும், அதை காதில்போட்டுக்கொள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வருவது இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள பக்தர்கள்,   கோவிலில் முறையாகப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததே இது போன்ற நிகழ்வுக்குக் காரணம் எனவும் ,  இதுபோல மேலும் பல சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால், அரசு  உடனே கோவிலில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள், முறைகேடு குற்றச்சாட்டுகள் மற்றும் புனரமைப்பு பாதுகாப்பற்றதாக இருந்ததால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. குறிப்பாக, IIT நிபுணர்களின் ஆய்வு மற்றும் பழுதுபார்ப்பு சரிபார்ப்பிற்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த வழக்குகளால் தற்காலிக தடை விதிக்கப்பட்டு, பின்னர் தடைகள் நீக்கப்பட்டு, ஏப்ரல் 7, 2025 அன்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. 

கும்பாபிஷேக சிக்கல்கள் மற்றும் வழக்குகள்:
  • வழக்குகள் (April 2025): தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் தாக்கல் செய்த மனுவில், கோயில் புனரமைப்புப் பணிகள் அவசரமாகவும், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமலும் செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
  • முறைகேடு குற்றச்சாட்டுகள்: கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மண் அள்ளப்பட்டதால், கட்டமைப்பு பாதுகாப்பு கேள்விக்குறியானதாகக் கூறப்படுகிறது.
  • தடை மற்றும் உத்தரவு: வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஆரம்பத்தில் கும்பாபிஷேகத்திற்கு தற்காலிகத் தடை விதித்தது.
  • IIT ஆய்வு: IIT நிபுணர்கள் மற்றும் தொல்லியல் நிபுணர்கள் குழுவின் ஆய்வுக்குப் பிறகு, பழுதுபார்ப்புகள் சரிபார்க்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.
  • தடை நீக்கம்: பின்னர், நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க பழுதுபார்ப்புகள் சரிபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தடைகள் நீக்கப்பட்டு கும்பாபிஷேகம் ஏப்ரல் 7, 2025 அன்று நடைபெற்றது.
19 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர், மற்றும் பாதுகாப்பிற்காக 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பணியமர்த்தப்பட்டனர்.


தென்காசி: காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு இடைக்கால தடை! என்ன நடந்தது?க.பாலசுப்பிரமணியன்


தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published:04 Apr 2025 8 AM
Updated:04 Apr 2025 8 AM
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
Google Preference
3
Comments
Share
தென்காசியில் காசி விஸ்வநாதர் உடனுறை உலக அம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கோயில் பாண்டிய மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு குலசேகர பாண்டியனால் திருப்பணிகள் முடித்து வைக்கப்பட்டது.

இந்த கோயில் ராஜகோபுரம் 175 அடி உயரமும் ஒன்பது நிலைகளை உடையதுமாக அமைக்கப்பட்டுள்ளது. மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகிய நாள்கள் இத்திருத்தலத்தின் சிறப்பு விழா நாள்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Mobile

4.7 / 5 Rating

3.5M+ Downloads

Audio Magazines

Instant News Summary

Free 500+ Audio Books

Low Data Usage
App Store
Play Store
INSTALL APP & GET 30 DAYS FREE TRIAL
INSTALL APP
கோயில்
கோயில்
கடந்த 2024-ல் சட்டசபை‌ கூட்டத்தின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிேஷகத்திற்கு ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் 15 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. கூடுதலாக ரூ.1.60 கோடி செலவில் ராஜகோபுர பணியும் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்று அறிவித்தார்.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பதை பக்தர்கள், பொதுமக்கள் வரவேற்றனர்.

இந்தநிலையில் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா வருகிற ஏப்ரல் 7-ந்தேதி நடப்பதாக தேதி குறிக்கப்பட்டது. தொடர்ந்து, கும்பாபிஷேக பணிகளுக்காக கோவில் கலசங்கள் புதுப்பிக்கும் பணிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மீது தொடர் மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தது.

கொடிமரம் புதுப்பிப்பு, சுற்று மண்டபம், பிரசாத ஸ்டால்கள், பூச்சு பணிகள், கலச புதுப்பிப்பு, பெயிண்டிங் பணிகள் என ஒவ்வொன்றிலும் கோவில் பணம் கொள்ளையடிக்கப்படுவதாக இந்து சமய அறநிலைய துறைக்கு புகார்கள் பறந்தன.

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
இதன் எதிரொலியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி, தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது நிர்வாக செயல் அலுவலர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த கோப்புகள், ஆவணங்கள், மற்றும் கும்பாபிஷேகம் தொடர்பான வரவு செலவுகள் உள்ளிட்டவை தணிக்கை செய்யப்பட்டது.

Also Read
தென்காசி காசிவிஸ்வநாதர்‌ கோயிலில் முறைகேடு; கூடுதல் ஆணையர் நடத்திய ஆய்வால் பரபரப்பு; பின்னணி என்ன?
தென்காசி காசிவிஸ்வநாதர்‌ கோயிலில் முறைகேடு; கூடுதல் ஆணையர் நடத்திய ஆய்வால் பரபரப்பு; பின்னணி என்ன?
இதில் கோவில் பணத்தில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய செயல் அலுவலர் முருகன், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி
இதற்கிடையில் தென்காசி கோயிலில் திடீர் ஆய்வு நடத்திய புதிய தமிழகம் கட்சித்தவைவர் கிருஷ்ணசாமி, தென்காசி கோயில் கும்பாபிஷேகத்தை 6 மாதங்களுக்கு தள்ளிவைக்கவேண்டும், கோவில் திருப்பணிகள் ஒவ்வொன்றிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிகிறது. ஆகவே தீர விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, கோவில் கும்பாபிஷேக பணிகள் தென்காசி கோயிலில் நடைபெற்று வந்தது. கும்பாபிஷேக ஏற்பாடுகளையும், பாதுகாப்பு பணிகளையும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துவந்தனர்.

Also Read
`தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை 6 மாதம் தள்ளி வைக்கவேண்டும்’ - கிருஷ்ணசாமி
`தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை 6 மாதம் தள்ளி வைக்கவேண்டும்’ - கிருஷ்ணசாமி
தொடர்ச்சியாக, காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ஏப்ரல் 7-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்தும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டிருந்தார்.

கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் நடந்துவந்த நிலையில், கோயில் பணம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தவும், கும்பாபிஷேக பணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கவும் வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் சமுக ஆர்வலர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.


ஆட்சியர்
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், கோவில் கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்கக்கோரி, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது திமுக கட்சியின் கொடி கட்டிய காரில்

  மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது https://www.facebook.com/photo/?fbid=1409974871165984&set=a.385...