Wednesday, March 11, 2026

மானாமதுரை ஆகாஷ் டெல்சன் காலை உடைத்த போலீஸார்: உயிரிழப்புக்கு முன்பு நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம்

 மானாமதுரை இளைஞரின் காலை உடைத்த போலீஸார்: உயிரிழப்புக்கு முன்பு நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் 


உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த அறிக்கையில் தகவல்

மதுரை: ​காலில் ஈரசாக்கை போட்டு இரும்​புக் கம்​பி​யால் போலீ​ஸார் அடித்து காலை உடைத்​தனர் என மானாமதுரை இளைஞர், நீதிப​தி​யிடம் அளித்த வாக்​குமூலம் உயர்நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த வழக்​கில் எஸ்​சி, எஸ்டி வன்​கொடுமை தடுப்​புப் பிரிவைச் சேர்க்க நீதிபதி உத்​தர​விட்​டார். சிவகங்கை மாவட்​டம் மானாமதுரையில் போலீஸ் காவலில் உயி​ரிழந்​த​தாக கூறப்​படும் ஆகாஷ் டெல்சனின் தந்தை ராஜேஷ்கண்ணன், இழப்​பீடு உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளு​டன் உயர் நீதிமன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனு நீதிபதி எல்​.விக்​டோரியா கௌரி முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசுத் தரப்​பில் கூறும்​போது, நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் போராட்டம் கைவிடப்​பட​வில்லை. இதனால் பொது​மக்கள் 80 கிலோ மீட்​டர் சுற்​றிச் செல்​கின்​றனர்.

மாணவர்​கள் உள்​ளிட்டோர் சிரமத்துக்கு ஆளாகி​யுள்​ளனர். போராட்​டக்​காரர்​களை கலைந்து செல்ல வேண்​டாம் என கிருஷ்ண​சாமி, ஜான்​பாண்​டியன் கட்​சி​யினர் அறி​வுறுத்​தி​ய​தாகக் கூறப்​பட்​டது என்றனர்.தொடர்ந்து நீதிப​தி, பொது​மக்​களுக்கு சிரமம் ஏற்​படும் வகை​யில் நடந்து கொள்​ளக் கூடாது.

இதை ஏற்க முடி​யாது என்​றார். மனு​தா​ரர் தரப்​பில், நீதித்​துறை நடு​வரின் ரிமாண்ட் அறிக்​கை​யில் ஆகாஷ் அளித்த வாக்​குமூலத்தை தாக்​கல் செய்​தனர். அதில் கூறியிருப்​ப​தாவது: சீருடை​யில் இல்லாத காவலர்​கள் என்​னையும், குணாவை​யும் பிடித்​தனர்.

என் கண்​களைக் கட்டி வேறு இடத்​துக்கு அழைத்​துச்​சென்று எனது காலை கற்​களுக்கு இடையில்வைத்​து, ஈரச்சாக்​கைப் போட்டு கம்​பி​யால் அடித்து உடைத்தனர். பின்​னர் மானா மதுரை மருத்​து​வ​மனைக்கு அழைத்துச் சென்​றனர். பாலத்​திலிருந்து தவறி விழுந்​த​தாகக் கூறு​மாறு காவல்​துறை​யினர் மிரட்​டினர்.

கண்​களைக் கட்​டியதால் யார் அடித்​தது என எனக்​குத் தெரிய​வில்​லை. இவ்வாறு அதில்கூறப்​பட்​டுள்​ளது. இதிலிருந்து போலீ​ஸார் தாக்​கிய​தால்​தான் ஆகாஷ் உயி​ரிழந்​தது உறு​தி​யாகிறது. இருப்​பினும் சரி​யான பிரிவு​களில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட​வில்லை என மனுதாரர்தரப்பில் கூறப்​பட்​டது.

அரசுத் தரப்​பில், ஆகாஷ் நீதித் துறை நடுவரிடம் கூறியது உண்​ையா எனத் தெரியாது. சரி​யான சான்று கிடைத்தவுடன் வழக்​கின் பிரிவு​கள் மாற்​றப்​படும் தேசிய நெடுஞ்​சாலை​யில் நடக்கும் மறியலைக் கைவிட வேண்​டும் எனக் கூறப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி, ஆகாஷ் இறப்​புக்​கான காரணம் குறித்து கேட்​ட​போது, ரசாயனப் பரிசோதனை முடிவு​கள் வந்த பிறகே இறப்​புக்​கான காரணம் தெரிய​வரும். முடிவு வர 10 நாட்களாகும் என அரசு தரப்​பில் கூறப்பட்​டது.

நீதிப​தி, காவல் மரணங்​கள் இரும்​புக் கரம் கொண்டு தடுக்​கப் பட வேண்​டும். அழுத்தம் கொடுத்​து, அனைத்து கோரிக்கைகளை​யும் நிறைவேற்ற நினைப்பது சரி​யானது அல்ல.

சாலை மறிய​லால் மக்​கள் பாதிக்​கப்​படு​கிறார்​கள் என்​றால் பிரதமர், முதல்​வர் வரு​கை​யின்​போது போக்​கு​வரத்து மாற்​றம் செய்​வது ​போல் ​மக்​களுக்​காகப் போக்​கு​வரத்தை மாற்​றம் செய்​ய​லாமே என நீதிபதி கேட்டார்.

பின்​னர் நீதிபதி கூறும்​போது, உயி​ரிழந்த ஆகாஷ் பட்​டியல் சமூகத்​தைச் சேர்ந்​தவர் என்​ப​தற்​கான சான்று சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்ள​தால் வழக்​கில் எஸ்​சி, எஸ்டி பிரிவை​யும் சேர்த்து முதல் தகவல் அறிக்​கை​யில் சிபிசிஐடி போலீ​ஸார் மாற்​றம் செய்ய வேண்டும்.

வழக்​கறிஞர்​கள் சாமிதுரை, மயில்​வாகன ராஜேந்​திரன், ராமலிங்​கம் ஆகியோர் பேச்​சு நடத்தி நெடுஞ்​சாலையில் நடக்​கும் போராட்​டத்​தைக் கைவிடச் செய்ய வேண்டும். மறுத்தால் அவர்​களை அங்கிருந்து அப்​புறப்படுத்த உத்​தர​விட வேண்​டி வரும். விசா​ரணை வியாழக்​கிழமைக்கு (இன்று) தள்ளிவைக்கப்படுகிறது என உத்​தர​விட்​டார்.

“இரும்புக் கம்பியால் அடித்து கால் எலும்பை முறித்தனர்” என்று சிவகங்கையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ் அளித்த வாக்குமூலம், மானாமதுரை நீதிமன்ற ரிமாண்ட் அறிக்கையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயம் என்று சொல்லச் சொல்லி போலீசார் மிரட்டியதாக நீதிபதியிடம் ஆகாஷ் தெரிவித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த வழக்கில் தாக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக ரிமாண்ட் அறிக்கையில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மானாமதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம். அஃப்சல் பாத்திமா மார்ச் 7-ம் தேதி பதிவு செய்த ரிமாண்ட் அறிக்கை நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. அதில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷை நேரில் சந்தித்து நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

அப்போது ஆகாஷின் வலது காலில் தொடை முதல் பாதம் வரை பெரிய அளவில் மாவுக்கட்டு (POP Bandage) போடப்பட்டிருந்ததாகவும், அவர் அளித்த வாக்குமூலத்தில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகாஷ் அளித்த வாக்குமூலத்தில், 06.03.2026 அன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் கிளங்காட்டூரில் தனது நண்பர் குணாவுடன் இருந்தபோது சீருடையில் இல்லாத காவல்துறையினர் தன்னை பிடித்து அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார்.


பின்னர் மாலை நேரத்தில் தனது கண்ணை கட்டி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், தனது காலை இரண்டு கற்களுக்கிடையில் வைத்து, அதன் மேல் ஈரச் சாக்கைப் போட்டு இரும்புக் கம்பியால் பலமாக அடித்ததாகவும், இதனால் தனது வலது கால் எலும்பு முறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதற்குப் பிறகு தன்னை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், “பாலத்தில் இருந்து கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டது” என்று கூற வேண்டும் என மிரட்டியதாகவும், அதனால் அவ்வாறு கூறியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தாக்கியவர்கள் யார் என்பது தமக்குத் தெரியவில்லை என்றும், அந்த நேரத்தில் தனது கண்கள் கட்டப் பட்டிருந்ததாகவும் ஆகாஷ் தெரிவித்ததாக ரிமாண்ட் அறிக்கையில் பதிவாகியுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

No comments:

Post a Comment

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது திமுக கட்சியின் கொடி கட்டிய காரில்

  மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது https://www.facebook.com/photo/?fbid=1409974871165984&set=a.385...