வடநாட்டில் இருந்து வந்த சமணம்; உலகைப் கடவுள் படைத்தார் - கடவுள் வழிபாடு இல்லாத மதம். தனிமையில் தவம் செய்ய மலை உச்சிகளில் குகைகளில் தங்கினர். தமக்கு அதற்கு உதவியவர் பெயரை எழுத வடமொழிக்காய் உருவாக்கப்பட்ட பிராமியில் இருந்து தமிழ் பிராமி உருவாக்கினர்.
வரலாற்றின் வலிமையை நாம் இரண்டு விதமாகப் பார்க்க வேண்டும் என்கிறீர்கள்
சட்ட ரீதியாக (Wills - தமிழில் திரித்து Uyil): ஒரு உயிலைப் பொறுத்தவரை, காலத்தால் பிந்தையது (எது கடைசியாக எழுதப்பட்டதோ) எதுவோ அதுவே செல்லுபடியாகும். அப்போ சிக்கந்தர் மலை தான் செல்லுபடி .. ரைட்டா?
இலக்கிய/வரலாற்று ரீதியாக: ஆனால் இலக்கியத்தைப் பொறுத்தவரை, காலத்தால் முந்தையது (எது முதலில் எழுதப்பட்டதோ) எதுவோ அதுவே மூலமாகும்.
அப்படி எல்லாம் பார்த்தால் "திராவிட/பார்ப்பனர்-அல்லாதோர்' கூற்று என்னவாகும்? வேள்விக்குடி செப்பேட்டில் என் பூட்ட்ட்ட்டான் பெயர் தானே பதிவு ஆகி இருக்கு?? மாடல மறையோன் கெட்டவன் என்றாலும் தொன்மை அவனுக்கு தானே??
இப்போது சொல்லுங்கள், தொன்மை என்பது யாருக்குச் சொந்தம்? பதிலுக்கு நீங்க 'ஆதன்' என்று வரலாம்.. சரி. ரைட்..
'இணைப்பு' என்னும் தர்க்க பொறி (kafka trap)
முருகன் மற்றும் கார்த்திகேயன் உருவங்கள் இணைந்துவிட்டன என்பதை நீங்கள் 'அழகு' என்கிறீர்கள். 'அழகிய இணைப்பு என்று தானே சொல்கிறோம், எதற்கு கதறுறேள் ??'.
இது ஒரு "motte-and-bailey' நுட்பம். இதை நான் கோட்டை-கழனி என்று தமிழாக்கம் செய்து உள்ளேன். அப்புறோம் வருவோம்..
ஒரு கூற்று எந்த சூழலில் சொல்ல படுகிறது என்பது முக்கியம். நான் அதைத் தவறு என்று சொல்லவில்லை, ஆனால் உங்கள் நோக்கத்தைத்தான் கேள்வி கேட்கிறேன். நான் உங்கள் எதிரியும் அல்லன் --- யூடுயூப் வரும் முன்பே..ஒரு காலத்தில் சுகி சிவம் CD/VCD எல்லாம் வாங்கி கேட்டவங்க .. அது ஒரு இருண்ட காலம். இப்போது அந்த மருள் நீங்கி, நாலும் புரிஞ்சு...
'கருத்தாக்கம் ஆராய்ச்சி' (Discourse Analysis) : இதுவே திராவிட களத்தில் நமக்கு தேவை. ஒரு கூற்று 'A' ஏற்றுக்கொண்டால் .. அடுத்து "A+1" என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.. இடத்தைக் கொடுத்தால் " வகை..
இன்று நீங்கள் 'இணைப்பு' என்று மென்மையாகச் சொல்வீர்கள். நாளை அதையே 'கலப்பு' என்பீர்கள், பிறகு 'நஞ்சு' என்பீர்கள், இறுதியில் 'ஆரிய புகுதல்' கொள்கையில் இணைத்து "பாப்பான் முருகனை சிதைச்சிட்டான்' என்று பழியில் உட்கார வைப்பீர்கள். நீங்களே வேறு சந்தர்பத்திலோ மேடையிலோ - அல்லது வேறு யாரோ .
நேற்று நீங்களே சொன்ன 'இணைப்பு' என்ற வார்த்தையை நாளை நீங்களே நிராகரிக்கக்கூடும்.. இது திராவிடக் கொள்கையைச் சிறுகச் சிறுகத் திணிக்கும் ஒரு யுக்தி என்பதை நாங்கள் அறிவோம்.
இணைப்பு முற்றி கலப்படம். (thesis vs antithesis => synthesis) . Mixing vs Contamination எனினும்.. மீட்சி என்றால் தூய்மைப்படுத்த வேண்டும் தானே??
சைவர்களின் பொறுப்பு 'முருகன் மீட்சி'.
சைவர்கள் என்று ஏன் பிரித்துப் பேசவேண்டும்? ஏனெனில் - ஆளும் கொள்கையான திராவிடத்தின் பார்வையில் சைவர்கள் = பங்காளிகள். பார்ப்பனர்கள் (நான்) => பகையாளிகள்..
சுப்ரமணியர், தண்டாயுதபாணி, கந்தபுராணம், திருப்புகழ் என அனைத்தையும் துறக்கச் சொல்லிவிட்டு, அதற்கு மாற்றாக வேறு எதையோ அமர்த்தப் பார்க்கிறீர்கள். உங்கள் தரப்பு (சைவர்கள்) இதற்குத் துணிந்து பதில் சொல்லுமா? முருகன் மீட்சி என்றால் நீங்கள் உங்கள் "சொந்த குழுவினர்கள்" -- திருப்புகழ்/கந்தபுராணம் என அனைத்தையும் நிராகரிக்க தயாரா? இல்லை எனில் -- கலப்படத்தில உங்களுக்கு தான் முதற் பங்கு. பார்ப்பனர்கள் இன்று தமிழகத்தில் ஒரு பொருட்டே அல்ல..
பழமையும் வேண்டும், அதே சமயம் அதன் அடையாளங்களைச் சிதைக்கவும் செய்வோம் என்றால் அது எப்படிச் சாத்தியம் அய்யா?" பாலுக்கும் காவல்.. பூனைக்கும் தோழன்..

No comments:
Post a Comment