Saturday, May 16, 2026

நெதர்லாந்தில் உள்ள லெய்டன் (ஆனைமங்கலம் செப்பேடுகள்) பிரதமர் மோடியிடம் தரப்பட்டது





ஆனை மங்கலச் செப்பேடுகளும் கல்கியின் பொன்னியின் செல்வனும் :
The Leiden Plates எனப்படும் 'ஆனைமங்கலச் செப்பேடுகள்" நேற்று நெதர்லாந்து நாட்டில் நமது பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அவை 1862ம் ஆண்டிலிருந்து அங்கே வைக்கப்பட்டிருந்தன. பல முயற்சிகளுக்குப் பிறகு இப்போது தான் தாயகம் திரும்புகின்றன என்பதில் மிகவும் மகிழ்ச்சி.
https://www.facebook.com/venkatadri.suresh/posts/pfbid02dk28GnP1z4iRdT7N6TvkSxUkNi3UBxcKBQSQBpLTdYzfP6ZLMYf11wd3A6LsCvfxl?__cft__[0]=AZbgN36PhMuu_HUT_o922UdPqhJorgwwUPpEssQZjnZeexYl7qki5J5iudqAMuy5W6nPrVm4hLvwivPVDn7WYdV5wc0qV5Q3DcoA8hrurdwVa2b45UrKjy-JAxObRLQY5BLP5unhk_p-OAtxlMz0Fv83psA8tL81UQ5P6DGSXAanHwShilA_U62CfGhwjLXOetHvH4ZlqTuCPtdXxyVdzVCV&__tn__=%2CO%2CP-R

இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளைப் பற்றி என்னைப்போலவே பொன்னியின் செல்வன் நாவலைப் படித்த அனைவரும் அறிந்திருப்பார்கள்.
இச்செப்பேட்டின் தகவல்களை வைத்து கல்கி இரண்டு கற்பனைச் சம்பவங்களை தனது நாவலில் சேர்த்திருப்பார்.
ராஜராஜன் ஏன் நாகை சூடாமணி விஹாரைக்கு அவ்வளவு நிவந்தங்களை வழங்கினான் என்பதற்கு கல்கி தனது நாவலில் செய்திருக்கும் கற்பனை இதுதான்.
இலங்கையிலிருந்து தமிழகம் திரும்பும் அருள்மொழி வர்மன் புயலில் சிக்கிப் பிழைத்து கடற்கரை சேர்கையில், குளிர் ஜுரத்தால் பீடிக்கப்படுகிறான். அப்போது பூங்குழலியும்,வந்தியத்தேவனும் அவனைக் காப்பாற்றி, நாகை சூடாமணி விகாரையில் தான் ஒப்படைக்கிறாரக்ள்.அங்கு இருக்கும் பிட்சுக்கள் அவனுக்கு முழு சிகிச்சை அளித்து பிழைக்க வைக்கிறார்கள். அந்த நன்றிக் கடனுக்காகவே பிற்காலத்தில் தான் மன்னனான வந்தபின் நாகையில் விகாரைக்கு அவ்வளவு நிவந்தங்கள் அளிக்கிறான் என்ற அழகான கற்பனையை சேர்த்து நாவலைப் படைக்கிறார் கல்கி.
பின் அந்த ஆனைமங்கலம் எனும் கிராமம்.அது நாவலில் இப்படி இடம்பெறுகிறது. நாகை விகாரையில் பிட்சுக்களின் சிகிச்சையால்,உயிர் பிழைக்கும் அருள்மொழி வர்மன், அவ்விகாரை புயலால் தாக்கப்பட்டு அழியும் நேரத்தில் அங்கிருந்து வெளியேறி,யாரும் அறியாமல் தஞ்சைக்கு செல்லும் வழியில்,இந்தக் கிராமத்தின் அருகே தான் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுக்கு உதவி செய்யும் பெண்ணால், (பூங்குழலியின் அண்ணி) அடையாளம் காணப்பட்டு மக்களுக்கும் தெரிந்து விடுகிறது.இதனால், அவ்னது பயணம் தடை படுகிறது,தாமதமாகிறது.ஆபத்தும் அதிகமாகிறது. இந்த இடத்தில் தான் மக்கள் அவனை ஒரு யானை மீது ஏற்றி அவனைத்தொடர்ந்துபெரிய ஊர்வலமாகவே வருகிறார்கள். ஆனால் யானையின் பாஷையுமறிந்த அருள் மொழி அதன் காதில் வேகமாக ஓடும்படி ஆணையிட்டு அதன் ஓட்டத்தால்,மிகவும் விரைவாக முன்னேறி அந்த இடத்திலிருந்து அகன்று விடுகிறான். அந்த இடம்தான் ஆனை மங்கலம் என்றும், பின்னர் அவன் மன்னன் ஆனதும் அந்தக் கிராமத்தையே நாகை சூடாமணி விகாரைக்குத் தானமாகத் தருகிறான் என்றும் புனைந்திருக்கிறார் கல்கி.
வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையில் புனைவுகளை உருவாக்குவதில் கல்கி ஒரு மாஸ்டர் என்பதற்கு உதாரணமானவை நாவலில் வரும் இந்த சம்பவங்கள்..


 

No comments:

Post a Comment