Father of 13-year-old sexual assault victim seeks change of court trying six juvenile offenders
8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 13-வயது சிறுமியை 12-ற்க்கும் அதிகமான நபர்கள் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளது. இந்த குற்றவாளிகளில் 6 பேர் 16 முதல் 17 வயதான இளம் சிறார்கள். இவர்கள் அனைவரும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டவர்கள். மற்ற ஒன்பது குற்றவாளிகளில் ஒருவர் தனியார் கல்லூரியில் ஃபேஷன் டிசைனிங் படிப்பவர். இவர்களின் செயலால் அந்த 13 வயது சிறுமி ஒரு ஆண் குழந்தையை 2025-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி பெற்றெடுத்தது. அந்த குழந்தை மே 18-ம் தேதி இறந்து விட்டது.
தற்போது அந்த ஆறு சிறார்களுக்கு எதிராக செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையை சென்னைக்கு மாற்ற அச்சிறுமியின் தந்தை #சென்னை_உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் பயமில்லாமல் சாட்சி சொல்லும் வகையில் கட்டமைப்பு இல்லை என்பதாலும், தன் மகள் தற்போது சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் படிப்பதாலும், விசாரணை நீதிமன்றத்தை மாற்றுமாறு அவர் கோரியுள்ளார்.

No comments:
Post a Comment