Tuesday, June 16, 2026

தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தை மீதும் கடன் - தவெக அரசு வெள்ளை அறிக்கை

தமிழ்நாட்டின் உண்மையான கடன் ரூ13.18 லட்சம் கோடி: மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கைNIEWebDesk 16 Jun 2026 



தமிழகத்தில் த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.


தமிழகத்தின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதில், கடந்த 2021 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 வரையிலான 5 ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் நிலுவையில் உள்ள கடன் பொறுப்புகள் ரூ.5.13 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால் மொத்த நிதிச்சுமை வரலாறு காணாத வகையில் ரூ.13.18 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ.1,28,934 கடன் சுமை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த வெள்ளை அறிக்கையின்படி, கரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய மீட்புக் காலத்தில் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தங்களின் நிதி நிலையைச் சீரமைத்துள்ள நிலையில், தமிழகத்தின் வளர்ச்சி குறியீடுகள் எதிர் திசையிலேயே நகர்ந்துள்ளன. தமிழகத்தில் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நுகர்வுச் செலவுகளை ஈடுகட்டவே மாநில அரசு கடன் பெற்றுள்ளதை இது காட்டுவதாகவும், மொத்த வருவாய் வரவுகளில் சுமார் 22.8 சதவீதமும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 34.8 சதவீதத்துக்கு மேலும் வட்டி செலுத்துவதற்கே செல்வதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜிஎஸ்டி, பெட்ரோலிய வரி மற்றும் மதுபான வரி போன்றவற்றில் முறையான மேலாண்மை இல்லாததால் ஆண்டுக்கு ரூ.51,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், புதிய திட்டங்களுக்கான மூலதனச் செலவு வெறும் 11.8 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மின்துறை நிறுவனங்களின் கடன் ரூ.2.47 லட்சம் கோடியாகவும், போக்குவரத்துத் துறையில் ரூ.72,667 கோடி இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிதி நெருக்கடிச் சூழலில் இருந்து தமிழகம் மீள வேண்டுமானால், வருவாய் திரட்டுவதை அதிகரித்தல், செலவினங்களை முறைப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களில் சீர்திருத்தம் மற்றும் ஊழலற்ற நிர்வாகம் அமைப்பது அவசியம் என்று இந்த வெள்ளை அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

 வெள்ளை அறிக்கை வெளியிட்டபின் இந்த அறிக்கை தொடர்பான 21 பக்கங்கள் கொண்ட விளக்க படத்தை காட்டி அதற்கான விளக்கத்தை அமைச்சர் மரிய வில்சன் வழங்கினார்.

பின்னர் நிதியமைச்சர் பேசுகையில், "2021 - 2022 முதல் 2025-2026 வரையிலான காலத்தை கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட ஒத்த தொழில்துறை அமைப்பையும் பொருளாதார அளவும் கொண்ட மாநிலங்களுடன் நியாயமான ஒப்பீடு செய்யும் காலப்பகுதியை எடுத்துக்கொண்டோம்" என்று நிதித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், "இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு அந்த மாநிலங்களின் மீட்சி காலத்தை பயன்படுத்தி தங்களின் மீதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தி குறைத்தது தான். ஆனால் தமிழ்நாடு அதற்கு நேர் முரணாக செயல்பட்டது.

ஒவ்வொரு அடிப்படை சுட்டிக்காட்டிலும் கட்டமைப்பு ரீதியான பின்னடைவை சந்தித்தது" என்றார்.

திருக்குறள் 478-ஐ சுட்டிக்காட்டி பேசிய அவர், "வருவாய் குறைவாக இருப்பதால் தீமை இல்லை, ஆனால் செலவுகள் அளவுக்கு மீறாமல் இருந்தால் போதும்" என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் ஒருவருக்கான கடன் பொறுப்பு இரட்டிப்பாகி ரூபாய் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 934 ஆக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தை மீதும் கடன்: அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல் Written byD. Elayaraja 16 Jun 2026

கடந்த 2021-2026 ஆண்டு காலக்கட்டத்தில் ரூ4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது. மாநிலம் தனது முதல் 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட, இந்த 5 ஆண்டுகாலங்களில் வாங்கிய கடன் அதிகம்.

தமிழக அரசின் கடன்கள், கையிருப்புகள் குறித்து த.வெ.க அரசு நிதிநிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு குடிமகனின் பெயரிலும் 1.28 லட்சம் கடன் இருப்பதாக சுட்டிக்காட்டிய நிதியமமைச்சர் மரிய வில்சன், பிறக்கும் குழந்தையின் பெயரில் எவ்வளவு கடன் என்பதை குறிப்பீட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதிய கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் தனி பெரும் கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க போதிய பெருமபான்மை இல்லாததால், காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் கடந்த 59 ஆண்டுகளாக இருந்த திராவிட கட்சிகள் ஆட்சி இல்லாமல் புதிய கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்த அரசு பொறுப்பேற்று ஒரு மாத காலம் நிறைவு பெற்றுள்ளது. 

இதனிடையே வரும் ஜூன் 18-ந் தேதி இந்த அரசின் முதல் சட்டசபை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்று (ஜூன் 16) தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, இதில் கடந்த 2021-2026 ஆண்டு காலக்கட்டத்தில் ரூ4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது. மாநிலம் தனது முதல் 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட, இந்த 5 ஆண்டுகாலங்களில் வாங்கிய கடன் அதிகம். 

மூலதன செலவினங்களின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி, விகிதம் 8.3 சதவீதமாக உள்ள நிலையில், கடன் வளர்ச்சி விகிதம் 14.3 சதவீதமாக உள்ளது, முதலீடு செய்வதற்காக அல்லாமல், அன்றாட செலவுகளுக்காக கடன் பெறுவதை இது குறிக்கிறது என வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார். மேலும், கடன் கூட்டு ஆண்டு வளர்ச்சி, விகிதம் 14.3 சதவீதமாகவும், மூலதன செலவின கூட்டு ஆண்டு வளர்ச்சி 8.3 சதவீதமாகவும், உள்ளது. ஒவ்வொரு 1 ரூபாய் புதிய மூலதன செலவிற்கும் 2.26 ரூபாய் கடன் பெறப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ1,28,934 லட்சம் கடன் இருப்பதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர் மரிய வில்சன், பிறக்கும் குழந்தைகளின் பெயரில் இருக்கும் கடன் குறித்து தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தமிழக பொருளாதாரத்திற்கு 1 ரூபாய் பங்களிக்கும் முன்பே இந்த கடன் பொறுப்புடன் பிறக்கிறது என்று தெரிவித்துள்ளார். 


 

No comments:

Post a Comment