புதுக்கோட்டை அலங்காப்பட்டி அரசு இடம்- மும்மத மக்களுக்கும் முக்கிய இடத்தில் சட்டவிரோதமாக நடக்கும் கந்தூரி விழா.. அமைச்சர் முகமது பர்வேஸ் ஆதரவு??இந்துக்களை தடுத்து, இழுத்து செல்லும் காவல் ஆய்வாளர் திரு. அலாவுதீன்..
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியம், அலங்காபட்டியில், இந்துக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சமணர் படுக்கை சுமார் 20 ஏக்கர் நிலத்தில், அந்த ஊரில் வசிக்காத இசுலாமியர்கள், அங்கு கந்தூரி போட வேண்டும் என பிரச்சனையை உருவாக்குகிறார்கள்...
இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சமாதான பேச்சு வார்த்தையில் யாரும் அங்கு உரிமை கொண்டாட கூடாது என்ற உத்தரவு இருக்கும் பட்சத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு அக்கிராமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இசுலாமியர்கள் இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து கந்தூரி நடத்த ஏற்பாடு செய்தனர்.
தகவல் அறிந்து இந்துக்கள் அதனை தடுத்தனர். நேற்று நடந்த கீரனூர் தாசில்தார் தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் இந்துக்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என கையொப்பமிடாமல் இந்துக்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில், இன்று இசுலாமியர்கள் கந்தூரி நடத்த வருகை தரும்போது, அந்த சரகத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் திரு. அலாவுதீன் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார். தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் ஆதரவுடன் கந்தூரி விழா நடப்பதாக கூறி, அமைச்சர் இங்கு தற்போது கந்தூரி நடத்த வர உள்ளார் என்று காவல்துறையினர் இந்துக்களை மிரட்டியிருக்கிறார்.
இதனை கண்டித்து தற்போது இந்து முன்னணி பொறுப்பாளர்கள், ஆலங்கபட்டி ஊர் பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அண்டக்குளம் MS மண்டபத்தில் வைத்துள்ளனர்...

No comments:
Post a Comment