மனிதக் கற்பனைக் கட்டுக்கதைகளே இஸ்ரேலின் பைபிள் கதைகளும் அரேபியக் குர்ஆன் கதைகளும் என தொல்லியல் தெளிவாக நிரூபித்து விட்டது.
தினமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெளியேறுகிறார்கள்
வரலாற்றில் பைபிள் முழுவதும் கட்டுக் கதை, கர்த்தர் என்பது மனிதன் உருவாகிய சிறு தெய்வமே எனத் தொல்லியல் சிறிதும் சந்தேகமின்றி நிருபித்து விட்டது.
இயேசு கிறுஸ்த்துவும் கிறுத்தவமும் ஒன்றல்ல கிறுத்தவம் அன்பால் உருவான மதமல்ல இரு நூற்றாண்டுகளுக்கு முன்புவரை வாளால் ஒன்று சேர்க்கபட்ட மதம்..........

பதினொன்றாம் நூற்ற்ண்டில் நடந்த முதல் சிலுவைப் போரின் காலகட்டத்தில் ரைன்லாந்து பகுதிகளில் யூத சமூகங்கள் மீது கிறிஸ்தவக் கூட்டங்களால் வன்முறை நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டதாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. புனித நிலத்தை மீட்பதற்காக போப்பின் அழைப்பில் தொடங்கிய முதல் சிலுவைப் போர் நான்காண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்றது. ஜெருசலேமை சிலுவைப் போராளிகள் கைப்பற்றியபோது அங்கிருந்த முஸ்லிம்கள், யூதர்கள் மற்றும் பிற மக்களில் ஏராளமானோர் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
இதற்குப் பிறகு பண்ணிரண்டாவது நூற்றாண்டில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சிலுவைப் போரும் நடைபெற்றது இவை அனைத்தும் புனித நிலத்தைச் சுற்றியிருந்த கிறிஸ்தவ–முஸ்லிம் மோதல்களின் தொடர்ச்சியாக இருந்தாலும், ஐரோப்பிய அரசர்களின் அரசியல் மற்றும் அதிகாரப் போட்டிகளும் இதில் முக்கிய பங்கு வகித்தன ஆனால் மதமே மூலம்.......
பதின்மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில் தெற்கு பிரான்சில் கேதரிஸம் எனப்பட்ட கிறிஸ்தவ மதப்பிரிவினருக்கு எதிராக அல்பிஜென்ஸியன் படுகொலைகள் நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபை கேதராஸம் பின்பற்றியவர்களை மதத்துரோகிகளாகக் கருதியது. இந்த போரின் முடிவில் பெஸெ நகரம் கைப்பற்றப்பட்டபோது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவர்களுக்குள்ளேயே, ஒருவர் மற்றொருவரை உண்மையான கிறிஸ்தவர் அல்ல என்று கருதி நடத்தப்பட்ட வன்முறைக்கு இது முக்கியமான உதாரணம்...........
அதே சமகாலத்தில் வடக்கு ஐரோப்பாவிலும் கிறிஸ்தவமற்ற மக்களுக்கு எதிராக சிலுவைப் போர்கள் நடத்தப்பட்டன. இவற்றில் போரும் நிலப்பரப்பு கைப்பற்றுதலும் மதமாற்றமும் ஒன்றோடொன்று இணைந்திருந்தன. ட்யுட்டோனிக் ஆடர் போன்ற கிறிஸ்தவ இராணுவ அமைப்புகள் பால்டிக் பகுதிகளில் கிறிஸ்தவமற்ற மக்களுக்கு எதிராக நீண்ட காலப் போர்களை நடத்தின......
பதின்மூன்று முதல் பதினைந்தாம் நூற்றாண்டுகளுக்குள் கத்தோலிக்க திருச்சபையின் கொடும் விசாரணை அமைப்புகள் மதத்துரோகம் என்று கருதப்பட்ட நம்பிக்கைகளை விசாரித்து மக்களை கடுமையாக தண்டிக்கும் பணியில் ஈடுபட்டன. சிறை, சித்திரவதை மற்றும் சில சந்தர்ப்பங்களில் மரண தண்டனையும் வழங்கப்பட்டது.......
பதினான்காம் நூற்றாண்டில் வரை ப்ளேக் நோய் ஐரோப்பாவைத் தாக்கியபோது, இந்தப் பேரழிவிற்கு யூதர்களே காரணம் என்ற பொய்யான குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டன. இதன் விளைவாக பல ஐரோப்பிய நகரங்களில் யூத சமூகங்கள் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
பதினைந்தாம் நூற்றாண்டில் பொஹிமியா பகுதியில் ஹுசைட் போர் நடைபெற்றது. ஜான் ஹுஸ் எனும் மத சீர்த்திருத்தவாதியின் கருத்துகளைப் பின்பற்றியவர்களுக்கும் கத்தோலிக்க ஆதரவு பெற்ற சக்திகளுக்கும் இடையே நடந்த இந்தப் போர், கிறிஸ்தவர்களுக்கிடையேயான மத வேறுபாடு எவ்வாறு இராணுவ மோதலாக மாறியது என்பதற்கான சான்று.....
பதினைந்தாம் நுற்றாண்டில் ஸ்பெயினில் ஸ்பானிய கொடும் விசாரனை குழு செயல்படத் தொடங்கியது. கத்தோலிக்க மத ஒருமைப்பாட்டை உறுதி செய்வது அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. யூத மதத்திலிருந்தும் இஸ்லாமிலிருந்தும் கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களும், அவர்கள் உண்மையாக மதம் மாறவில்லை என்று சந்தேகிக்கப்பட்டவர்களும் விசாரணைக்கும் கடும் தண்டனைக்கும் உட்படுத்தப்பட்டனர்........
பதினைந்தாம் நூற்றாண்டு இறுதியில் அமெரிக்கக் கண்டங்களில் ஐரோப்பிய காலனித்துவம் விரிவடைந்தபோது கிறிஸ்தவ மதமாற்றமும் காலனித்துவ ஆட்சியும் பல இடங்களில் ஒன்றோடொன்று இணைந்தன. பூர்வகுடி மக்களிடம் மதமாற்றம் மேற்கொள்ளப்பட்டது;நிலம், வளம் மற்றும் அரசியல் அதிகாரத்திற்கான காலனித்துவப் போட்டிகளும் நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட பூர்வகுடி மக்களின் மிகப்பெரிய உயிரிழப்புகளில் மதம் முக்கிய பங்கு வகித்தது......
பதினாறாம் நூற்றாண்டில் நடைபெற்ற வரை நடந்த ஜெர்மன் புரட்சியிலும் கிறிஸ்தவ மதக் கருத்துகள் முக்கிய பங்கு வகித்தன. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டனர்.இதிலும் மதம் மூலக்காரணி....
பதினாறாம் நூற்றாண்டு பிற்பகுதியில் பிரான்சில் கத்தோலிக்கர்கள் மற்றும் ப்ரட்டஸ்டாண்ட்கள் இடையே மதப்போர்கள் பெரிய அளவில் நடைபெற்றது. மத வேறுபாட்டுடன் அரச குடும்பங்களின் அதிகாரப் போட்டியும் இதில் முக்கிய பங்கு வகித்தது. 1572 ஆம் ஆண்டு நடந்த புனித நத்தானியேல் தின படுகொலையின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவத்தின் இரண்டு பிரிவுகளுக்கிடையே நடந்த மிகக் கொடூரமான படுகொலைகளில் இதுவும் ஒன்று.
பதினேழாம் நூற்றாண்டில் நடந்த முப்பது வருட போரும்ஆரம்பத்தில் கத்தோலிக்கர்களுக்கும ப்ரட்டஸ்டான்டுளுக்கும் இடையேயான மத மோதலாக தொடங்கி, பின்னர் அது ஐரோப்பிய அரசுகளின் மிகப்பெரிய அரசியல் மற்றும் அதிகாரப் போட்டியாக மாறியது. இந்தப் போரில் போர், பஞ்சம் மற்றும் நோய் ஆகியவற்றால் பலலட்ச கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
பதினேழாம் நூற்றாண்டில் தற்பொதய இத்தாலியின் ப்யுடமண்ட் பகுதியில் வால்டேன்சியன் ப்ரட்டஸ்டண்ட் மக்கள் மீது கத்தோலிக்க ஆட்சியின் படைகளால் கடுமையான வன்முறை நடத்தப்பட்டு பலர் கொல்லபட்டனர்.......
பதணெட்டாம் நூற்றாண்டு இறுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் காலத்தில் நடந்த வெண்டீ கத்தோலிக்க மதம் முக்கியமான காரணியாக இருந்தது. கத்தோலிக்க மதத்தையும் முடியாட்சியையும் ஆதரித்த மக்களுக்கும் குடியரசுப் படைகளுக்கும் இடையே நடந்த இந்த மோதலில் மிகப்பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதில் அரசியல் அதிகாரம், முடியாட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சியின் சமூக மாற்றங்கள் ஆகியவையும் முக்கியமான காரணிகளாக இருந்தாலும் மதத்திற்கு முக்கிய பங்கு இருந்தது.......
வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், கிறிஸ்தவத்தின் பெயரில் நடைபெற்ற வன்முறைகள் என்பது வெறும் கிறிஸ்தவர்கள் மற்ற மதத்தினருக்கு எதிராக நடத்திய போர்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களுக்குள்ளேயே Catholic–Protestant, Catholic–Cathar, Catholic–Hussite என பல்வேறு பிரிவுகளுக்கிடையிலும் கடுமையான வன்முறைகள் நடந்திருக்கின்றன....
மத நம்பிக்கைகள், திருச்சபை அதிகாரம், மதமாற்றம் அல்லது உண்மையான மதத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் வரலாற்றில் போர்களும் படுகொலைகளும் நடந்திருக்கின்றன என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை.ஆக வாள் கொண்டு வளர்ந்த மதம் பிற்கால ஆங்கில காலனியவாதத்தின் பிற்கால வணிக நோக்குகளை வைத்து அமைதி கொண்டது.
மரியவில்சன் சொல்லும் இரக்கத்தின் மொழி அன்பின் மொழி அமைதியின் மொழியை அவரே அவரது சொந்த சகோதரன் வீட்டிற்குள் நடத்தி காட்டிய காணொளிகள் இனையம் எங்கும் பரவி கிடக்கிறது...........
மீண்டும் சொல்கிறேன் கிறுத்துவும் கிறுத்தவமும் ஒன்றல்ல ஆங்கிலம் கிறுத்தவத்தின் மொழியல்ல்.......










No comments:
Post a Comment