Friday, September 11, 2026

துருக்கியின் GOBEKLI TEBE - 12,000 ஆண்டு முன் -உலகின் முதல் கோயில் - மனித நாகரீக வளர்ச்சியில் கடவுள் நம்பிக்கையே அடிப்படை

 மனித நாகரீக வளர்ச்சியில் கடவுள் நம்பிக்கையே அடிப்படை மதம் முந்தியதா விவசாயம் முந்தியதா!?!

மதம் முந்தியதா விவசாயம் முந்தியதா எனும் கேள்விக்கு வரலாற்றாளர்கள் இதுவரை சொல்லி வந்த பதில முற்றிலும் தவறானது என்பது இப்போது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
மனிதனுக்கு முதல் தேவை உணவுதான் அதற்காக அவன் முதலில் உணவு உற்பத்தியில் இறங்கினான். உணவின் தேவை தீர்ந்தபின் அவனுடைய கவனம் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியது. பிறகுதான் மனிதன் தன்னுடைய நம்பிக்கைகளின் அடிப்படையில் கடவுளையும் பிறகு மதத்தையும் உருவாக்கினான் என்பது வரலாற்றாளர்களின் கூற்று.
ஆனால், துருக்கியின் கோபெக்லி தெபெ-(GOBEKLI TEBE) எனும் இடத்தில் நடந்த தொல்லியல் ஆய்வு வரலாற்றாளர்களின் அந்தக் கருத்தை பொய் என்று நிரூபித்து இருக்கிறது.
அங்கு உலகின் முதல் கோயில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதே வேளையில் சுமார் பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த கோவில் கட்டப்பட்ட காலகட்டத்தில் வேளான்மை நடந்ததாகவோ தானிய உற்பத்தி செய்யப்பட்டாதாகவோ எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை.

இதன் பொருள் என்ன?
மனிதன் தனக்கான உணவை உற்பத்தி செய்வதற்கு முன்பே கோவிலைக் கட்டினான் என்பதுதான்.
அதாவது, காட்டில் வாழும் விலங்குகல் எப்ப்டி தனக்ளுக்கான உனவுகளை இயற்கையிடம் இருந்து பெறுகின்றனவோ அதே போலத்தான் மனிதனும் தனது சுற்றுப்புறங்களில் இருந்தே தனக்கான உணவுகளை இயற்கையாகப் பெற்று வாழ்ந்திருக்கிறான். அவ்வாறு விலனிஉகலுஇஅப்போல வாழ்ந்தபோதே அவன் கடவூலுக்காக ஒரு கோவிலையும் எழுப்பி இருக்கிறான். அப்போதே மதம் தோன்றி விட்டது!
வரலாற்றாளர் V.GORDEN CHILDE விவசாயம்தான் முந்தியது என்கிறார்.NEOLITHIC REVOLUTION எனும் கருத்தை நிலைநாட்டிய ஆஸ்திரேலிய வரலாற்று நிபுணரான இவருடைய கருத்துப்படி விவசாயம்தான் முந்தையது. மதம் பிந்தையது.
JARED DIAMOND JILL E. FULLER,BURKE D.GRANDJEAN போன்ற வலரலாற்று நிபுணர்களும் CHILDEன் கருத்துக்கு வலு சேர்ப்பவர்களே. அதாவது விவசாயம்தன் முந்தி வந்தது!
விவசாயம்தான் முந்தியது என்று முடிவுக்கு வந்த வரலாற்றாளர்கள் எங்கே தவறினார்கள்?
வரலாற்றாளர்கள் தாங்கள் எழுப்பிக்கொண்ட அந்த கேள்வியில்தான் சறுக்கினார்கள்.
அவர்கள், விவசாயம் முந்தியதா மதம் முந்தியதா என்று கேட்டுக்கொண்டதற்குப் பதிலாக,
நம்பிக்கை முந்தியதா தொழிற்நுட்பம் முந்தியதா என்று கேட்டுக்கொண்டிருக்க வெண்டும்!
அச்சம்தான் மனிதனுக்குள் தோன்றிய முதல் அறிவு என்று சொல்லலாம். உயிர் அச்சம், உடல் அச்சம், தனிமை அச்சம், குளிர் அச்சம், வெய்யில் அச்சம், விலங்கு அச்சம், பிரபஞ்ச அச்சம் பேரிடர் அச்சம்… என மனிதனுக்கு உலகம் முதலில் கொடுத்தது அச்சத்தைத்தான். அந்த அச்சத்தை போக்கிக்கொள்ள அவன் ஏதோ ஒன்றின் மேல் நமபிக்கை வைத்தான். அதுதான் கடவுள்.
முதலில் உயிர் வாழ வேண்டும். அதற்கு கடவுளின் கருணை வேண்டும். கடவுளின் அருளை பெறும் நடவடிக்கைகள் முடிந்தவுடன்தான் மனிதனுடைய கவனம் உணவு உற்பத்தியின் பக்கம் சாய்கிறது.
ஆக, மானுட அறிவியலில் முதல் தோற்றம் கடவுளுக்குத்தான். அதாவது மதம்தான் முந்தையது. மதத்திற்குப் பிந்தயதுதான் விவசாயம். என்பதை ‘கோபெக்ளி தெபெ’ ஆய்வுகள் நிரூபிக்கின்றன!

No comments:

Post a Comment

Nun attack Bharatha Nattiyam as it preaches God and Dead man Jesus worship

Nun is yet another face of “secular Keralam.” She advises parents to be cautious about sending their children to dance classes, arguing that...