https://www.facebook.com/reel/2546044389152835
மூத்த பத்திரிகையாளர்:ஏம்மா எஸ்தர், என்னம்மா இது? கருவாட்டுக் கடையில நின்னுக்கிட்டு, “எல்லோரும் இயேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள், ஒரே வாரத்துல பணக்காரர் ஆகிடுவீங்க”னு பைபிளை கையில கொடுத்து கூவிக்கிட்டிருக்கீங்க! , உங்க அம்மா அப்பா என்ன பண்ணுகிறார்கள்?
இளம் பெண்: எங்க அம்மை எசக்கி கோயில்ல சாமி ஆடுவாங்க. எங்க அப்பா சொல்லமாட சாமி கோயில்ல சாமி ஆடுவாரு. கிடா ரத்தத்தைக் பச்சையா குடிப்பாரு, ராத்திரி 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போயி, முட்டங்கால் எலும்பை முறுக்கு போல கடிப்பார், கடவைகால் எலும்பை கரும்பு போல் கடிப்பார், பின்னங்கால் எலும்ப பிஸ்கட் போல கடிப்பார், அந்த அளவுக்கு பெரிய சாமி ஆடி! எங்க அண்ணன் வேற, எப்ப பார்த்தாலும் திருப்பதி, திருச்செந்தூர், திருத்தணி என்று கோவில் கோவிலா சுத்திக்கிட்டே இருப்பான்.
ஆனா எங்க வீட்டுல தொடர்ந்து மரண சம்பவங்கள் நடந்துகிட்டே இருந்துச்சு. போன வருடம் எங்க பாட்டி 86 வயசுல இறந்துட்டாங்க. மூணு மாசத்துக்குள்ள எங்க தாத்தாவும் இறந்துட்டாரு. இப்படி தொடர்ந்து மரணத்தை பார்த்ததால எனக்கு மனசு உடைஞ்சிடுச்சு. அப்போதான் நான் மனம் திரும்பி இயேசுவை ஏற்றுக்கிட்டேன். இப்போ மனசுல சமாதானம் இருக்கு, நிம்மதியா இருக்கேன், நான் இயேசுவை ஏற்று சமாதானமான கடந்த ஆறு மாசமா எங்கள் வீட்டில் ஒரு இறப்பு கூட சம்பவிக்கவில்லை, அதனால நீங்களும் இயேசுவை ஏற்றுக்கிட்டு சமாதானமா வாழுங்கன்னு சொல்றேன்.
மூத்த பத்திரிகையாளர்: எம்மா, உனக்கு மனசுக்கு நிம்மதி கிடைச்சிருப்பதை நான் குறை சொல்லல. யாருடைய நம்பிக்கையையும் நான் கேலி செய்ய விரும்பல. ஆனா ஒரு விஷயத்தை மட்டும் கொஞ்சம் யோசிச்சுப் பாரும்மா.
மரணம் என்பது ஒரு மதத்துக்கு மட்டும் சொந்தமான பிரச்சனை இல்ல. உலகத்துல பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஒருநாள் மரணம் என்பது இயற்கையின் விதி. உங்க வீட்டுல மரணம் நடந்ததற்காக நீ மதம் மாறினாய் என்றால், இனிமேல் உங்க வீட்டுல யாருமே இறக்க மாட்டாங்கன்னு நீ நம்புறியா? ஒரு வாரத்துல பணக்காரனாகலாம் என்றால், உலகத்துல ஏழைகள் எல்லாரும் ஒரு வாரத்துக்கு மட்டும் அந்த மதத்தை ஏற்றுக்கிட்டு அடுத்த வாரம் கோடீஸ்வரர்களாகி இருக்கணுமே! அப்படி நடந்திருந்தா உலக பொருளாதாரமே வேற மாதிரி இருந்திருக்கும்!
இயற்கையை வழிபட்டு கொண்டு வந்த ஆப்பிரிக்க பழங்குடி மக்களை நிறைய ஆப்பிரிக்க தேசங்களில் ஐரோப்பிய மிஷனரிகள் கிறிஸ்தவர்களாக மதமாற்றி வைத்திருக்கிறார்கள்.
உலகத்திலேயே அங்கேயும் வறுமை, பசி, நோய், வேலைவாய்ப்பின்மை, உள்நாட்டு மோதல்கள் போன்ற பிரச்சனைகள் அதிகம் இருக்கின்றன.
ஐரோப்பிய மிஷனரிகள் எத்தியோபியா என்னும் தேசத்தை முழுக்க முழுக்க கிறிஸ்தவ தேசமாக மாற்றி வைத்திருக்கிறார்கள் , ஆனால் அந்த மக்கள் குடிக்க கஞ்சி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் எந்த மண்ணில் அல்லது எந்த தேசத்தில் அல்லது எந்த பகுதியில் பிறந்தோமோ, அந்த மண்ணோட ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்த பாரம்பரியம், பண்பாடு, மொழி, பழக்கவழக்கம், உணவு முறை, திருவிழாக்கள், வழிபாட்டு மரபுகள், நாட்டுப்புற நம்பிக்கைகள் என ஒரு மிகப்பெரிய வாழ்க்கை முறையோட வளர்ந்திருக்கிறோம்.
அதைப் பற்றி கேள்வி கேட்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் தங்கள் நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது. ஆனால் வறுமையைப் பயன்படுத்தி, நோயை பயன்படுத்தி, மரண பயத்தை பயன்படுத்தி, “இந்த மதத்துக்கு வந்தால் பணக்காரராகலாம், பிரச்சனைகள் தீரும்” என்று ஒருவரை நம்ப வைப்பது மட்டும் நியாயமா என்பதைத்தான் நாம் கேட்க வேண்டும்.
இளம் பெண்: அப்படின்னா நம்பிக்கை வைக்கக்கூடாதா?
மூத்த பத்திரிகையாளர்: நம்பிக்கை வைக்கக்கூடாது என்று யார் சொன்னது? நம்பிக்கை உனக்கு இருக்கட்டும். ஆனால் அந்த நம்பிக்கையை வியாபாரமாக்கக் கூடாது.
“இயேசுவை ஏற்றுக்கொண்டால் பணக்காரர் ஆகலாம்” என்று சொல்வதற்குப் பதிலாக, “இயேசுவின் போதனைகளில் உனக்கு பிடித்திருந்தால் அதை ஏற்றுக்கொள்” என்று சொல். அதுதான் நேர்மையான அணுகுமுறை.
ஒரு மனிதன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டிலும், அவன் நல்ல மனிதனா, நேர்மையானவனா, பிறரை மதிக்கிறானா, ஏழைக்கு உதவுகிறானா, தன்னுடைய குடும்பத்தையும் சமூகத்தையும் நேசிக்கிறானா என்பதுதான் முக்கியம்.
இளம் பெண்: அப்படின்னா மதம் மாறுவது தவறுன்னு சொல்றீங்களா?
மூத்த பத்திரிகையாளர்: ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கையை நான் தீர்மானிக்க முடியாது. மதம் என்பது தனிநபரின் மனசாட்சியோடு சம்பந்தப்பட்ட விஷயம்.
ஆனால் பயத்தாலும், ஆசையாலும், பணத்தாலும், நோயாலும், வறுமையாலும் ஒருவரை மதம் மாற்ற முயற்சிப்பதை கேள்வி கேட்பது மட்டும் அவசியம்.
நம்முடைய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பாதுகாப்பது என்றால், மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை வெறுப்பது என்று அர்த்தமில்லை. அதேபோல, வேறு மதத்தைச் சேர்ந்தவரை மதிப்பது என்றால் நம்முடைய சொந்த பண்பாட்டை மறந்துவிட வேண்டும் என்றும் அர்த்தமில்லை.
மதம் மனிதனுக்கு நம்பிக்கையை கொடுக்கலாம், மன அமைதியை கொடுக்கலாம். ஆனால் எந்த மதமும் “ஒரே வாரத்தில் பணக்காரன்”, “இனி மரணமே இல்லை”, “வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது” என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது.
வறுமைக்கு தீர்வு மதமாற்றம் அல்ல; கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, நல்ல நிர்வாகம் மற்றும் சமூக முன்னேற்றம்தான். மரணத்துக்கு தீர்வு மதமாற்றம் அல்ல; மரணம் என்பது வாழ்க்கையின் இயற்கையான முடிவு.
நம்முடைய பாரம்பரியத்தை நேசிப்போம்; மற்றவர்களின் நம்பிக்கையையும் மதிப்போம்; ஆனால் எந்த நம்பிக்கையையும் விற்பனைப் பொருளாக மாற்றாமல், மனிதனை மனிதனாக மதிக்கும் சமூகத்தை உருவாக்குவோம்.
மதமாற்றம் ஒரு தேசிய அவமானம். மிஷனரிகள் இந்த நாட்டை பிடித்த பீடை
.png)
No comments:
Post a Comment