Wednesday, September 2, 2026

மரகத முருகன் சிலை (அச்​சிறுப்​பாக்​கம் கனக மலை ‘நடு​பழநி’ ) - பல கோடி மதிப்பு TN HRCE துறை கோவிலிலில் இருந்து திருட்டு.

பெருக்கரணை நடுபழநி கோயிலில் மரகத சிலை மாயம்


மதுராந்தகம்: செங்​கல்​பட்டு மாவட்​டம், அச்​சிறுப்​பாக்​கம் அடுத்த பெருக்​கரணை கிராமத்​தில் கனக மலை என்ற சிறிய மலை​யில் கோயில் அமைந்​துள்​ளது.

சென்​னை​யில் உள்ள வடபழனி முரு​கன் கோயில் மற்​றும் திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி முரு​கன் கோயில் ஆகிய​வற்​றுக்கு நடு​வில் இருப்​ப​தால், இக்​கோ​யிலை பக்​தர்​கள் ‘நடு​பழநி’ என அழைக்​கின்​றனர். இக்​கோ​யிலுக்கு நாள்​தோறும் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் வந்து செல்​கின்​றனர். விசேஷ நாட்​களில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் வரு​வது வழக்​கம். 

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு வழக்​கம்​போல் கோயில் பூசா​ரி​கள் கோயி​லின் நடையை சாத்​தி​விட்​டுச் சென்​றனர். நேற்று காலை பூஜைக்​காக கோயில் நடை திறக்​கப்​பட்​ட​போது கோயி​லின் கரு​வறை​யில் இருந்த விலைம​திக்க முடி​யாத மரகதக் கல்​லால் ஆன தண்​ட​பாணி சிலையை காணவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோயில் பூசாரி நிர்​வாகத்​துக்கு தகவல் தெரி​வித்​தார். அதன் பின்​னர் கோயில் நிர்​வாகத்​தினர் சித்​தாமூர் காவல்போலீஸில் புகார் அளித்​தனர்.

இதன்பேரில் போலீ​ஸார் வழக்​குப் பதிவுசெய்து தீவிர விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர். மேலும் மாவட்ட எஸ்பி அய்​மன் ஜமால் தலை​மையி​லான போலீ​ஸார் தனிப்​படை அமைத்து மரகத சிலையை திருடிச் சென்​றவர்​களை தேடி வரு​கின்​றனர்.

No comments:

Post a Comment

சுவிசேஷ கதைகள் ஏசு மரணதண்டனையால் இறந்த மனிதனல தெய்வீகர் ஆக்கும் கட்டுக் கதைகள்

 **கிறிஸ்தவ நற்செய்திகள்: ரோமானிய சிலுவையில் அறையப்பட்ட மனிதனைத் தெய்வீகப்படுத்துவதற்கான இலக்கியக் கட்டுமானம் – ஒரு விமர்சன வரலாற்றுப் பார்வ...