Wednesday, December 17, 2025

தென்பரங்குன்றம் உமையாண்டார் குடைவரை - உடைந்த இறை சிலைகள்!

 தென்பரங்குன்றம் உமையாண்டார் குடைவரை!

மதுரைக்கு தென்மேற்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானது ஆகும். திருப்பரங்குன்ற மலையில கிரிவலம் வரும் வழியில், அதாவது மலையின் நேர் பின் பக்கத்தில் தென்பரங்குன்றம் அமைந்துள்ளது. தென்பரங்குன்ற மலையில் சமணர் குடைவரை கோவில் உள்ளது. இம்மலை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பராமரிக்கப்படுகிறது!

வரலாறு:❤️
2300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலையில் சமண துறவிகள் வாழ்ந்தமைக்கான அடையாளமாக கற்படுக்கைகளும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் உள்ளன. தென்பரங்குன்ற மலையில் கி.பி ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த சமணர் தீர்த்தங்கரர் சிற்பங்களும், அரத்தநாரீஸ்வரருடைய குடை வரை கோவிலும், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுடைய மெய்கீர்த்தி கல்வெட்டுகளும் காணப்படுகிறது!
சமண மற்றும் சைவ மத சிற்பங்கள்:❤️
இங்கு தியான நிலையில், அமர்ந்த கோலத்தில் சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் காணப்படுகிறது. குடைவரைக் கோவிலின் வலப்பக்கம், நடராஜனும், சிவகாமியும் நடனம் ஆடியபடி சிற்பங்கள் காணப்படுகிறது. இவ்விரண்டு சிற்பங்களும் சேதமடைந்துள்ளன. நடராஜனின் உருவச் சிலைக்கு மேலே விநாயகர், சுப்பிரமணியர் சிற்பங்கள் எழிலுற விளங்குகின்றன.
மேலும் சைவ சமயத்தை சேர்ந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மற்றும் சுந்தரர் சிற்பங்களும் காணக் கிடைக்கிறது. இடப்பக்கமாக, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரின் புடைப்புச் சிற்பம் விளங்குகிறது.
குடை வரை கோவில்:❤️🥳
தொடக்க காலத்தில் இது சமணக் குடைவரையாகத் திகழ்ந்துள்ளது. கி.பி.8-9 ஆம் நூற்றாண்டளவில் மதுரையில் சமணம் தழைத்தோங்கிய காலத்தில் இக்குடைவரை அகழப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் புகழ் பெற்றவனான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216-1239) ஆட்சிக்காலத்தில், கி.பி.1223 ஆம் ஆண்டளவில், இது சிவனுக்கான குடைவரைக் கோவிலாக மற்றம் கண்டுள்ளது. இக்குடைவரை கோவிலில் மூன்று பெரிய தூண்கள் உள்ளன. இக்கோவில் உள்ளே இடப்புறம் அமைந்துள்ள தனிச் சந்நதியில் அழகான கோலத்தில்
அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. தெற்கு திசையைப் பார்த்த வண்ணம், மூலவரான தில்லைக் கூத்தனின் திருவுருவச் சிலை பாதி சிதைந்த நிலையில் காணப்படுகின்றது. கல்வெட்டுச் செய்திகளின்படி, இது உமையாண்டாள் கோவில் என அழைக்கப்படுகிறது.
மெய்கீர்த்தி கல்வெட்டுகள்:✨
இங்கு இரு கல்வெட்டுகள் காணப்படுகிறது.அவற்றில் ஒன்று கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டில் மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழநாட்டின் மீது படையெடுத்து, அந்நாட்டை வென்று பாண்டிய நாட்டு ஆட்சி எல்லையை விரிவுபடுத்தியதைக் குறிக்கும் விதமாக, அந்த மெய்க்கீர்த்தி கல்வெட்டு அமைந்துள்ளது
மேலும் பாண்டியர்கள் தங்கள் முதலாம் பாண்டியப் பேரரசின் போது முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி இருந்தனர். அத்துடன் மகேந்திர பல்லவனும் மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ஆவான். தமிழகத்தில் பாண்டியர், பல்லவர், முத்தரையர், அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் பல்லாவரம், திருச்சி, சித்தன்னவாசல், திருமெய்யம் போன்ற ஊர்களில் உள்ள குகைக் கோயில்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை ஆகும்!
திருப்பரங்குன்றம், வடபரங்குன்றம்!
இது ஒரு குடைவரைக் கோயிலாகும். இங்குள்ள குடைவரைக் கோயில்கள் 8 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் காலத்தவை
என கணக்கிடப்படுகின்றன.
இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், சுப்ரமணியரின் திருமணம் இந்திரன் மகளான தேவயானையுடன் இங்கே நிகழ்ந்தது. ❤️👩‍❤️‍👨
பழம்பெருமை வாய்ந்த இந்த கோயில், பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.
இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்!❤️🫂
குடைவரைகள் 30, 31 ,32❤️

No comments:

Post a Comment

கள்ள நோட்டு = 'பொருளாதார ஜிஹாத்' -துரந்தர்' (Dhurandhar) படத்தில் சொல்லப்படாத கதை

 துரந்தரின் படத்தில்சொல்லப்படாத கதை | ப.சிதம்பரம்–மாயாராம்: திரைப்படம் தவறவிட்ட வில்லன்கள்  பாலக் ஷா டிசம்பர் 13, 2025 திரைப்படத்தில் இந்திய...