முதுகுளத்துார் தாலுகா, அரப்போது ஊராட்சிக்கு உட்பட்ட மருதகம், கீழப்பனையூர், எஸ்.ஆர்.என்.பழங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊர்வலமாக சென்று, கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
பின், அவர்கள் கூறியதாவது:
மருதகம், கீழப்பனையூர், எஸ்.ஆர்.என்.பழங்குளம் கிராமங்களில் ஹிந்து மதத்தை சேர்ந்த 800க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். மருதகத்திலுள்ள வேம்பாருடைய அய்யனார் சுவாமியை குலதெய்வமாக வழிபடுகிறோம்.
இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் உதவியுடன் கோவில்கள் உள்ள பகுதியில் சர்ச், பிரார்த்தனை கூடம் கட்ட, முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரைபடம், கட்டட அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
அப்பகுதியில் கிறிஸ்துவர்கள் வசிக்காத போது, இச்செயலானது ஹிந்து மக்களிடம் கிறிஸ்துவ மதத்தை பரப்பும் நோக்கத்துடன் நடக்கிறது. சர்ச் கட்டினால் மதம் சார்ந்த சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சர்ச் கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்க கூடாது. ஆரம்ப கட்ட நிலையிலேயே தடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறினர்.



No comments:
Post a Comment