தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களில் அடுத்து அடுத்துப் பாலியல் புகார்கள்! Tamil Oodagam News Desk June 17, 2026
தமிழ் ஊடகம் – பருந்தார் தகவல்கள் கதவு தட்டும் ஓசை. திறந்து பாரத்தால் நம்ம பருந்தார். வாங்க வாங்க என்று வரவேற்றோம்.

வழக்கம்போல சுடு தண்ணீரைக் காலில் ஊற்றியது போலப் பர பரவெனப் பேசினார் பருந்தார்.“உங்க ஊடகத்துறையின் பெயர்தான் அதிக அளவில் அதிகாரிகளிடமும், மக்களிடமும் கெட்ட பெயர் எடுத்திருக்கிறது” என்று எடுத்தவுடன் நம் தலையிலேயே கை வைத்தார் பருந்தார். அதனால என்ன சொல்லுங்க பருந்தாரே என்றோம்… வேறு வழி !?
கடந்த 2021 – 26 மு.க. ஸ்டாலினின் முதல் ஐந்தாண்டு ஆட்சியின் போது தொடக்கத்திலேயே உமது தமிழ் ஊடகம் செய்தி ஆசிரியர் “பத்திரிகை ஊடகங்கள் அளவு கடந்து ஐஸ் வைக்கின்றன, இதனால் மு.க.ஸ்டாலின் அரசுக்கு ஆபத்துதான்” என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.
ஓ…அதுகூட உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று வியப்புடன் கேட்டோம்.
எனக்கு மட்டுமல்ல, இன்னமும் பலருக்கு அது நினைவிருக்கிறது என்று கூறிவிட்டுத் தொடர்ந்து பேசினார்.
அதிகாரிகள் அதனை உணர்ந்து கொண்டாலும் ஆட்சியாளர்கள் அது குறித்து கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை. இறுதிவரை மு.க.ஸ்டாலினைச் சுற்றி இருந்த பத்திரிகை ஊடகர்கள் கூறும் “பொய்ப் புகழ்ச்சிகளிலும், ஐஸ் வைப்புகளிலும் குளிர்ந்து போய் மெய் சிலிர்த்தே இருந்தார் மு.க.ஸ்டாலின்.”
ஓ… தமிழ்நாட்டின் கள நிலவரம் திமுகவுக்கு எதிராக இருப்பது தெரிந்தே சில செய்தி ஆசிரிய வசூல் ராஜாக்கள் மு.க.ஸ்டாலினிடம் கூசாமல் “மீண்டும் உங்கள் ஆட்சிதான்” என்று பொய் பேசியிருக்கிறார்கள். அப்படிப் புகழ்ந்து புகழ்ந்து அவரைக் குஷிப்படுத்தி குஷிப்படுத்தியே பல சிபாரிசுக் கடிதங்களில் அவர் மகிழ்ச்சி குறைவதற்கு முன்னரே கையெழுத்து வாங்கி வந்துள்ளனர்.
இப்படி பல சிபாரிசுக் கடிதங்களில் வாங்கிய கையெழுத்தை வைத்தே தலைமைச் செயலகத்தில், காவல்துறையில், பத்திரப்பதிவுத்துறையில் என பல இடங்களில் பலகோடி ரூபாய் திரட்டி விட்டார்களாம்.
அதில் இரண்டு செய்தியாசிரியர்களின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தலா 350 கோடிகளைத் தாண்டிவிட்டதாம்.
அடேங்கப்பா…. இரும்…இதற்கே வாயைப் பிளந்தால் என்ன செய்வது…. மு.க.ஸ்டாலினோடு நிற்கவில்லையாம் அப்படியே எடப்பாடி தரப்புக்கும் இதே ஐஸ் வைத்து ஒருமுறை 50 லகரம் வசூல் நடந்ததாம்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சர், அவரிடம் ஐஸ் வைப்பது சரி…..எடப்பாடியிடம் எப்படி என்று இழுத்தோம்…
மங்குனி பத்திரிகையாளரே… நீரெல்லாம் ஏன் பணத்துக்குத் திண்டாடுகிறீர் என்று இப்போது புரிகிறது என்று செல்லமாகக் கடிந்து கொண்ட பருந்தார்…
“அடுத்த முதலமைச்சர் மேற்கு மண்டலம்தான்” என்று ஐஸ் வைத்திருக்கிறார்கள். முதல்முறை, “வந்து தொலைத்து விட்டார்கள் கொடுத்துத் தொலையுங்கள்” என்கிற ரீதியில் கொடுத்தவர்கள் இரண்டாம் ரவுண்டு வந்த போது உஷாராகிவிட்டார்களாம்.
அடக் கடவுளே…
கிரீம்ஸ் ரோட்டில் இரவு நேரத்தில் அமைச்சர்களின் வீடுகள் பக்கம் சுற்றி சுற்றி வசூல், சிபாரிசு, பஞ்சாயத்து செய்து “சம்பாதித்த” உள்ளங்கைகள் ஆட்சி மாறிய பிறகும் அரிக்கிறதாம்.
ருசி கண்ட பூனைகளாச்சே….ம் அப்புறம்
அப்படியே பனையூரு வகையறாக்களுக்கு வலை வீசுகிறார்களாம் இந்தத் திமுக ஆதரவு என்று வெளியில் காட்டிக்கொள்கிறவர்கள்.
ச்ச்சை…அப்புறம்.
அப்புறம் என்ன விழுப்புரம்தான். இதெல்லாம் ஒரு பக்கமிருக்க மறுபுறம் பெண் செய்தி வாசிப்பாளர்கள், தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண்கள், அரசியல் பெண் பிரமுகர்கள் என்று ஒரு செய்தி ஆசிரியரின் ஆண் அடிவருடிகள் பூந்து விளையாடி இருக்கிறார்கள்.
ஓ…
இன்னொரு தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியரே பூந்து விளையாடியிருக்கிறார்.
அது சரி…அப்படிப்போடு.
அதில் ஒரு தொலைக்காட்சியில் இரண்டு மூன்று பேரின் மன்மத லீலைகள் வெளிப்படையாக நிர்வாகம் வரை தெரிந்தும், அவர்களைக் காப்பாற்றி தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டாராம் அந்த செய்தி ஆசிரியர்.
இது என்ன கொடும பருந்தாரே….
இரும் அவசரப்படவேண்டாம்…மூன்று பேர் மட்டுமல்ல ஒரு தொலைக்காட்சியில் மொத்தம் ஆறு பேர் கொத்தாக மாட்டியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் குறித்து நிர்வாகத்தின் பெண் தலைவர் வரை விசயம் சென்றதால் அவரைக் “காப்பாற்ற” முடியாமல் தவித்து இருக்கிறார் அந்தச் செய்தி ஆசிரியர். ஆனாலும், அந்த “மன்மதனை” வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
ஆஹான்….
மீதமுள்ள ஐந்து பேரைக் காப்பாற்றி தம் வட்டத்துக்குகள் வைத்துப் “பாதுகாக்கிறாராம்” அவர்.
அவர் செய்தி ஆசிரியரா இல்லை “பாலியல் குற்றவாளிகளின் ஆசிரியரா?” என்று கேட்டோம்.
இதே கேள்வி அந்த நிறுவனம் முழுதும் எதிரொலிக்கிறது. மேல் மட்டப் பெண் தலைவரின் காதுகளுக்கு இதெல்லாம் சென்றுவிடாமல் கண்களுக்குள் விளக்கெண்ணை விட்டுப் “பலமாகப்” பாதுகாக்கப்டுகிறாராம் அந்த செய்தி ஆசிரியர்.
ஓ… அவருக்கும் மேலே ஒரு பாலியல் “ஆசிரியர்” இருப்பார் போல ? என்றோம்.
அவர் ஆசிரியர் அல்ல, அவர் தலைமைகளில் ஒரு சிலருக்கு வேண்டப்பட்ட கரு”மை” நிர்வாகி என்கிறார்கள். அவர்தான் பெண் தலைவருக்குத் தகவல் செல்லாமல் தடுத்து இவரைக் காப்பாற்றுகிறாராம்.
ஒரு பாசமா இருக்குமோ…..
மண்ணாங்கட்டி பாசம்… அதைப் பாதிக்கப்பட்ட பெண்களிடம் ஒரு தந்தையைப் போல, அண்ணனைப் போல காட்டியிருந்தால் பாராட்டலாம். இது பாசமல்ல வேசம் என்றார் பருந்தார்.
ஆமாம் ஆமாம், நீங்கள் சொல்வது உண்மைதான் என்றோம்.
பறப்பதற்கு ஆயத்தமான பருந்தார் போகிற போக்கில் “இதில் என்ன கொடுமை என்றால்… இந்த மன்மத லீலைகளுக்குத் துணை போகிற, அல்லது ஈடுபடுகிற பல செய்தி ஆளுமைகள் பெரியார் இராமசாமி பெயரில் பெண்ணியம் பேசுபவர்கள்” என்றார்.
அதெல்லாம் நாலு சுவத்துக்கு வெளில பேசுறதுதானே உள்ள இல்லையே, என்று நாம் சொல்லச் சொல்ல வானத்தில் சிறு புள்ளியாகி கண்களை விட்டு மறைந்து போயிருந்தார் பருந்தார்.
பெண் பணியாளர்களைப் பாதுகாக்க இந்த “விசாகா” கமிட்டியெல்லாம் இல்லையா, என்று கேட்கலாம் என்று இருந்தோம் அதற்குள் பறந்து விட்டார் பருந்தார். அடுத்த முறை வரும்போது கேட்கனும்.
No comments:
Post a Comment