கன்னட நடிகை ருக்மணி வசந்தின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மார்பிங் செய்து ஆபாசமாக பரப்பிய 3 பேரை பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.[1, 2]
- ரவிகுமார் (வயது 24): பாகல்கோட்.
- சந்திரகாந்த் (வயது 33): ஷிவமொக்கா.
- ரஞ்சித் (ஆர் - வயது 25): பெங்களூரு. [1]
- 'காந்தாரா: சாப்டர் 1', 'சப்த சாகராதாச்சே எல்லே' போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்தவர் ருக்மணி வசந்த். [1, 2]
- இவரது புகைப்படங்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தவறாகப் பயன்படுத்தி, பிகினி உடை அணிந்தது போன்ற மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. [1, 2]
- இது குறித்து நடிகை ருக்மணி வசந்த் பெங்களூரு சைபர் கிரைம் போலீசாரிடம் நேரில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. [1, 2, 3, 4]
விஜய் சேதுதியின் ஏஸ், சிவகார்த்திகேயனின் மதராஸி ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ருக்மணி வசந்த். ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் மூலம் பான் இந்தியா நடிகையாக பிரபலமானார். இப்போது ‘டாக்ஸிக்’, ‘டிராகன்’ படங்களில் நடித்துள்ளார்.
இவர், பிகினி உடையில் காணப்படும் நீச்சல் குள புகைப்படங்கள் கடந்த மாதம் இணையத்தில் வேகமாகப் பரவின. அவை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப் பட்டவை என்றும் அதைப் பகிர வேண்டாம் என்றும் ருக்மணி வசந்த் கேட்டுக்கொண்டார். “ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அப்புகைப்படங்கள் முற்றிலும் போலியானவை, ஜோடிக்கப்பட்டவை. அவற்றைப் பரப்பியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கி வருகிறோம்” என்று கூறியிருந்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, மொத்தம் 29 சமூக வலைதளக் கணக்குகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் ஏ.ஐ. மூலம் ருக்மணி வசந்தின் போலியான புகைப்படங்களை வெளியிட்டதாக ரவி குமார் (24), சந்திர காந்த் (33), ரஞ்சித் (25) ஆகியோரை பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு: ஜூன் 20-
‘காந்தாரா’ பட புகழ் பிரபல பன்மொழி நடிகை ருக்மிணி வசந்த்.
இவருடைய புகைப்படங்களை ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பினர். இது நடிகையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவருக்குப் பெருத்த மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தது.
கடந்த மே மாதம் இந்த போலி வீடியோக்கள் வைரலான போதே நடிகை ருக்மிணி வசந்த் கடும் ஆவேசம் அடைந்தார். “இணையத்தில் உலா வரும் அந்தப் படங்கள் முற்றிலும் போலியானவை. தொழில்நுட்பத்தை இப்படி அசிங்கமாகப் பயன்படுத்தி,
ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிப்பது கண்டனத்திற்குரியது. யாரும் இதை பகிர வேண்டாம்” எனப் பதிவிட்டதோடு, கிரிமினல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். ரசிகர்களும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கொந்தளித்தனர்.
இதைத் தொடர்ந்து, இந்த ஆபாச மார்பிங் கும்பல் குறித்து நடிகை ருக்மிணி வசந்த் போலீசில் அதிரடியாகப் புகார் அளித்தார். புகாரை அடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், நடிகையின் தனிப்பட்ட ரகசியங்களைச் சீரழித்த ரவிகுமார், சந்திரகாந்த் மற்றும் ரஞ்சித் ஆகிய 3 கில்லாடிகளைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர்கள் இந்த மோசடிக்குக் கையாண்ட 3 விலையுயர்ந்த செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 3 பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.


No comments:
Post a Comment