Thursday, June 25, 2026

நடிகை ருக்​மணி வசந்​தின் டீப்ஃபேக் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டதாக 3 பேர் கைது

 கன்னட நடிகை ருக்மணி வசந்தின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மார்பிங் செய்து ஆபாசமாக பரப்பிய 3 பேரை பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

https://www.hindutamil.in/news/cinema/south-cinema/three-person-arrested-who-released-deepfake-image-of-actress-rukmini-vasanth


இவர்களிடமிருந்து குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.[1, 2]

கைது செய்யப்பட்டவர்கள் விவரம்:
  • ரவிகுமார் (வயது 24): பாகல்கோட்.
  • சந்திரகாந்த் (வயது 33): ஷிவமொக்கா.
  • ரஞ்சித் (ஆர் - வயது 25): பெங்களூரு. [1]
பிரச்சினையின் பின்னணி:
  • 'காந்தாரா: சாப்டர் 1', 'சப்த சாகராதாச்சே எல்லே' போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்தவர் ருக்மணி வசந்த். [1, 2]
  • இவரது புகைப்படங்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தவறாகப் பயன்படுத்தி, பிகினி உடை அணிந்தது போன்ற மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. [1, 2]
  • இது குறித்து நடிகை ருக்மணி வசந்த் பெங்களூரு சைபர் கிரைம் போலீசாரிடம் நேரில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. [1, 2, 3, 4]

விஜய் சேது​தி​யின் ஏஸ், சிவ​கார்த்​தி​கேயனின் மதராஸி ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர் ருக்​மணி வசந்த். ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படம் மூலம் பான் இந்​தியா நடிகை​யாக பிரபலமானார். இப்​போது ‘டாக்​ஸிக்’, ‘டி​ராகன்’ படங்​களில் நடித்​துள்​ளார்.

இவர், பிகினி உடை​யில் காணப்​படும் நீச்​சல் குள புகைப்​படங்​கள் கடந்த மாதம் இணை​யத்​தில் வேக​மாகப் பரவின. அவை செயற்கை நுண்​ணறி​வால் உரு​வாக்​கப் பட்​டவை என்​றும் அதைப் பகிர வேண்​டாம் என்​றும் ருக்​மணி வசந்த் கேட்​டுக்​கொண்​டார். “ஏஐ மூலம் உரு​வாக்​கப்​பட்ட அப்​பு​கைப்​படங்​கள் முற்​றி​லும் போலி​யானவை, ஜோடிக்​கப்​பட்​ட​வை. அவற்​றைப் பரப்​பிய​வர்​கள் மீது சட்​டப்​பூர்வ நடவடிக்​கைகளைத் தொடங்கி வரு​கிறோம்” என்று கூறி​யிருந்​தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்​படை​யில் விசா​ரணை நடத்​தப்பட்டு, மொத்​தம் 29 சமூக வலை​தளக் கணக்​கு​கள் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாகத் தகவல் வெளி​யானது. இந்​நிலை​யில் ஏ.ஐ. மூலம் ருக்​மணி வசந்​தின் போலி​யான புகைப்​படங்​களை வெளியிட்​ட​தாக ரவி​ கு​மார் (24), சந்​திர​ காந்த் (33), ரஞ்​சித் (25) ஆகியோரை பெங்​களூரு சைபர் க்ரைம் போலீ​ஸார் கைது செய்துள்​ளனர்.


பெங்களூரு: ஜூன் 20-
‘காந்தாரா’ பட புகழ் பிரபல பன்மொழி நடிகை ருக்மிணி வசந்த்.
இவருடைய புகைப்படங்களை ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பினர். இது நடிகையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவருக்குப் பெருத்த மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தது.
கடந்த மே மாதம் இந்த போலி வீடியோக்கள் வைரலான போதே நடிகை ருக்மிணி வசந்த் கடும் ஆவேசம் அடைந்தார். “இணையத்தில் உலா வரும் அந்தப் படங்கள் முற்றிலும் போலியானவை. தொழில்நுட்பத்தை இப்படி அசிங்கமாகப் பயன்படுத்தி,
ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிப்பது கண்டனத்திற்குரியது. யாரும் இதை பகிர வேண்டாம்” எனப் பதிவிட்டதோடு, கிரிமினல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். ரசிகர்களும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கொந்தளித்தனர்.
இதைத் தொடர்ந்து, இந்த ஆபாச மார்பிங் கும்பல் குறித்து நடிகை ருக்மிணி வசந்த் போலீசில் அதிரடியாகப் புகார் அளித்தார். புகாரை அடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், நடிகையின் தனிப்பட்ட ரகசியங்களைச் சீரழித்த ரவிகுமார், சந்திரகாந்த் மற்றும் ரஞ்சித் ஆகிய 3 கில்லாடிகளைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர்கள் இந்த மோசடிக்குக் கையாண்ட 3 விலையுயர்ந்த செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 3 பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

TVK - TNEB White paper