Tuesday, June 23, 2026

பழனி ஆயக்குடி கிராம 674 வருட பழமையான பெருமாள் கோவில்-சொந்தமாக 600 ஏக்கர் நிலம் இருந்தும் ஒரு இருந்தும் பூஜை கூட HRCE நடப்பதில்லை.


பழனி அருகே ஆயக்குடி கிராமத்தில் 674 வருட பழமையான பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 600 ஏக்கர் நிலம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட இந்த கோவிலில் ஒரு நேர பூஜை கூட நடப்பதில்லை.

ஆனால் இந்து சமய அறநிலைத்துறை வருமானத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பெருமாள் கோவிலை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இந்த கோவிலுக்கு சொந்தமான பழமையான மரத்தேர் காணாமல் போய்விட்டது. இரண்டு வருடங்களாக திருவிழாவும் நடைபெறுவதில்லை. கோவிலை நிர்வகிக்க வக்கில்லாத அறநிலையத்துறை எதற்காக கோயிலை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்கு ஆறுகால பூஜையும், கோவில் திருவிழா கொண்டாடுவதற்கும் உரிய ஏற்பாடும், புதிதாக சாமி உலா வருவதற்காக தேர் செய்திடவும், கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றி, வருமானத்தை கோவிலுக்கு செலவு செய்யவும் இந்து முன்னணி வலியுறுத்துகிறது

No comments:

Post a Comment

நீட் உயர் மருத்துவகல்வியில் அரசு டாக்டர் என இடஒதுக்கீட்டில் படித்துவிட்டு தலைமறைவு என தனியாக கொழிக்கும் 229 மருத்துவர்கள்

அரசு மருத்துவமனையில் பயின்று அரசு மருத்துவமனைகளில், மருத்துவக் கல்லூரியில் பணியில் அறிவிப்பு இல்லாம (abscond) மருத்துவர்கள் மீது உரிய சட்ட ந...