நீர்வளத் துறையில் பல்லாயிரம் கோடி சம்பாதித்த அதிகாரிக்கு டம்மி போஸ்ட் :
கடந்த காலத்தில் மணல் குவாரிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் மீது அமலாக்கத்துறை வீட்டிற்கு சென்று ரெய்டு நடத்தியது. அவர் திருவள்ளூர் கோட்டத்தில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தார். அவர் வேலை செய்த நாட்களில் கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் பணம் சம்பாதித்துள்ளார். மணல் குவாரி முறைகேடுகளில் அவருக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்க துறைக்கு தெளிவான ஆதாரம் கிடைத்ததன் பேரில் அவரது வீட்டில் ரைய்டு நடந்தது.
ஆனால் கடந்த ஆட்சியில் அவர் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பு ஏற்ற பிறகு ஊழல் அதிகாரிகள் ஒவ்வொருவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு தற்போது வரை கெத்தாக வலம் வரும் அதிகாரி ஒருவரை டம்மி போஸ்ட்க்கு மாற்றம் செய்து நீர்வளத் துறை உத்தரவிட்டிருப்பது அந்த துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் அதிமுக திமுக என எந்த ஆட்சி வந்தாலும் அவர் கோல் ஊற்றி வந்தார். அவரை மீறி யாரும் முக்கிய பணியிடத்துக்கு வர முடியாது. அப்படிப்பட்ட அதிகாரி ஒருவரை தமிழக வெற்றிக்கனக அரசு தூக்கி எறிந்து உள்ளது தான் குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment