Tuesday, September 23, 2025

தமிழர் கேடுகளுக்கு முதல் குற்றவாளி திருவள்ளுவர் -ஈவெராமசாமியார் - விடுதலை 90 வது பிறந்தநாள் மலர்


...தமிழர்களின் பகுத்தறிவுக்கும், சமுதாயக் கேடு நீக்கலுக்கும் அய்ந்து பேர்கள் எதிரிகளாவார்கள். 1.வள்ளுவன், 2. தொல்காப்பியன், 3. கம்பன், 4. இளங்கோவன், 5. சேக்கிழார். இந்த அய்ந்து பேர்களுக்கும் பகுத்தறிவில்லை என்பதோடு இவர்கள் இனஉணர்ச்சி அற்ற இனவிரோதிகளாக ஆகி விட்டார்கள்.

...வள்ளுவன் அறிவைக் கொண்டு ஒரு நூல் (குறள்) எழுதினான் அதில் மூடநம்பிக்கை, பெண்ணடிமை, ஆரியம் ஆகியவை நல்லவண்ணம் புகுத்தப் பட்டிருக்கின்றன. குறளுக்கு மதிப்புரை கொடுத்தவர்களில் சிலர் “குறள் வேத, சாஸ்திரங்களின் சாரம்” என்று கூறியிருக்கிறார்கள். குறளை ஊன்றிப் பார்த்தால் அது உண்மை என்று புலப்படும்.

...தமிழனுக்கு வேண்டியது மானம், அறிவு, இனஉணர்ச்சி ஆகியவைகளே ஆகும். இவற்றிற்கு மேற்சொன்ன திருவள்ளுவன், தொல்காப்பியன், கம்பன், இளங்கோவன், சேக்கிழார் ஆகிய அய்வரும் - இவர்களது நூல்களான குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம் ஆகிய அய்ம்பெரும் இலக்கியங்களும் எந்த அளவுக்குப் பயன்படும் என்று சவால் விட்டுக் கேட்கிறேன். -- தோழர் பெரியார், விடுதலை 90 வது பிறந்தநாள் மலர்

குறளைத் தூக்கி எறிய வேண்டியது தான்!

...தமிழனின் வாழ்வு முறைக்குக் குறள்தான் என்று சொல்வார்கள். நாம் காட்டு மனிதனாக இருந்த வரை குறள் சரி. நாட்டு மனிதனான பின், பெண்களுக்குத் தான் அதில் கற்பு நீதி சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, ஆண்கள் கற்பு நீதி பற்றி அதில் ஒன்றுமில்லை. குறளைத் தூக்கியெறிய வேண்டியது தான். - தோழர் பெரியார் - விடுதலை, 15.06.1968

வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்!

...நம் அறிஞர்களும், புலவர்களும் நமக்கு மனித தர்மத்திற்குக் குறளைத் தான் எடுத்துக் காட்டுவார்கள். அந்த வள்ளுவன் கூட இருக்கிற மற்றவனைவிடக் கொஞ்சம் பரவாயில்லை என்பதுதானே யொழிய, அவன் தான் எல்லாவற்றிற்கும் என்பது பொருந்தாதது. நேற்று ஒரு பள்ளியில் பாரதிதாசன் படத்தைத் திறந்து வைத்துப் பேசும் போது, வள்ளுவன் படத்தைத் தூக்கி எறிந்து விட்டு பாரதி தாசன் படத்தை வைக்க வேண்டுமென்று சொன்னேன். பாரதி தாசனைப் போல சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்ல நம் புலவர்கள் முன்வர வேண்டும். - தோழர் பெரியார் - விடுதலை - 06.08.1968

...நான் குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர்கூட அதை (குறள்) ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்ன கேட்டார். குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக் கிட்டாரு. இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தையது குறள். அதை அப்படியே இப்பவும் ஏத்துக்கணும்னா? -- தோழர் பெரியார், கலைமகள் ஏடு, பிப்ரவரி 1973

 திருக்குறளும் ஆரியக்குரலே! - தோழர் பெரியாரின் எழுத்தும் பேச்சும் - 48 பக்கங்கள் 30 ரூபாய். காட்டாறு வெளியீடு - திராவிடர் இயக்கங்களின் தொடக்க நாட்களை முன்னிட்டு ஆகஸ்ட் முழுவதும் ரூ 20 க்குக் கிடைக்கும். தொடர்புக்கு: 9791811513, 9942738950, 9942119077, http://www.periyarbooks.in

No comments:

Post a Comment

தமிழக தேர்தல் 2026 -நாடாளுமன்றத் தேர்தல் 2024 முடிவுகளின் அடிப்படையில் பாஜக கூட்டணி பலம்

The above given 76 seats are selected on the basis of 2024 Lok Sabha Votes (combining AIADMK+ Votes and BJP + Votes  overall giving a discou...