Tuesday, September 30, 2025

திருநெல்வேலியில் மதமாற்ற கும்பலை தடுத்தவர் மீது பொய் வழக்கு

மதமோதலை தூண்டி கொலை மிரட்டல் நயினாரின் உதவியாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலிருந்து  22.09.2025, சுமார் 30-க்கும் மேற்பட்ட அன்னிய மதத்தினர்நெல்லை மாவட்டம் கீழக்கல்லூர் மற்றும் நடுக்கல்லூர் கிராமங்களுக்கு சென்று உள்ளனர். தமிழராக இந்துக்களே பெருமளவில் உள்ள கிராமத்தில்  கீழக்கல்லூர் பகுதியில் மதமாற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டும், தமிழர் மெய்யியலை சாத்தான் வழிபாடு எனப் பேச அங்கு தமிழர் எதிர்த்துள்ளனர்.

ஆலங்குளத்தைச் சேர்ந்த வக்கீல் டேவிட் நிர்மல்துரை, கடந்த 22ம்தேதி சுத்தமல்லி காவல் நிலையத்தில் பொய்புகார் கொடுக்க -வக்கீல் மணிகண்டன் மகாதேவன், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவின் அலுவலக உதவியாளர் அங்குராஜ் மற்றும் அவரது சகோதரரான சங்கர் ஆகிய 3 பேர் மீது இந்திய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 126(2) (மத அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்), 299 (கொலை மிரட்டல்), மற்றும் 351(2) (கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல்) ஆகிய 3 பிரிவின் கீழ் சுத்தமல்லி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழராக வாழ விடாமல் அன்னிய மதமாற்றத்தை தொழில் ரீதியாக செய்வதும், ஆளும் கட்சி தொடர்பால் பொய் வழக்கு போடுவதும் தடுக்க வேண்டும்
https://www.dinakaran.com/inciting_religiousconflict_threatening_kill_abettor_assistant_case/


No comments:

Post a Comment

தமிழக தேர்தல் 2026 -நாடாளுமன்றத் தேர்தல் 2024 முடிவுகளின் அடிப்படையில் பாஜக கூட்டணி பலம்

The above given 76 seats are selected on the basis of 2024 Lok Sabha Votes (combining AIADMK+ Votes and BJP + Votes  overall giving a discou...