Monday, December 1, 2025

சார்லஸ் மார்ட்டின் (லாட்டரி) பாண்டிச்சேரியில் பாஜக எதிர்த்து புது கட்சி

 சார்லஸ் மார்ட்டின் (லாட்டரி) பாண்டிச்சேரியில் புது கட்சி,

“டிசம்பரில் அரசியல் கட்சி... தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி!” - மனம் திறக்கும் மார்ட்டின் மகன் நேர்காணல் சி.கண்ணன் Published on:  28 Nov 2025

https://www.hindutamil.in/news/tamilnadu/jose-charles-martin-interview

லாட்டரி அதிபர் சந்தியாகு மார்ட்டினின் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். புதுச்சேரி பாஜக-வில் பத்தாண்டுகள் பயணித்த இவர், இப்போது அதிலிருந்து விலகி, ‘ஜேசிஎம் மக்கள் மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி மக்களுக்கான நல உதவிகளை வழங்கி வருகிறார். இந்த அமைப்பையே டிசம்பரில் அரசியல் கட்சியாகவும் மாற்ற முடிவெடுத்திருக்கும் சார்லஸ், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கப் போவதாகச் சொல்லப்படும் நிலையில், ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக அவரிடம் பேசினோம்.

Q

பாஜக-விலிருந்து ஏன் விலகினீர்கள்?

A

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள், செயல்பாடுகள் பிடித்திருந்ததால் பாஜக-வில் இணைந்தேன். ஆனால், கட்சியில் எனக்கு பொறுப்புத் தரவில்லை என்பதுடன் புதுச்சேரியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கேட்டும் தரவில்லை. அதனால், பாஜக-வில் இருந்து வெளியேறிவிட்டேன்.

Q

உங்கள் சகோதரியின் கணவர் ஆதவ் அர்ஜூனா விஜய் கட்சியில் முக்கிய இடத்தில் இருப்பதால் உங்களுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதோ?

A

ஆதவ் அர்ஜூனாவுக்கு முன்பிருந்தே நான் அரசியலில் இருக்கிறேன். பதவிக்காக அரசியலில் இருக்கும் அவரை நான் அரசியல்வாதியாகவே நினைக்கவில்லை.

Q

காங்கிரஸ் பின்னணி உள்ளவர்களே பெரும்பாலும் வெற்றிபெறும் புதுச்சேரியில் புதியவரான உங்களால் சாதிக்க முடியுமா?

A

பிஹார் முடிவுகளைப் பார்த்தாலே காங்கிரஸ் நிலைமை புரிந்துவிடும். இன்னொருவரை நம்பியே காங்கிரஸ் உள்ளது. புதுச்சேரியின் வளர்ச்சியை பற்றி என்.ஆர்.காங்கிரஸ் சிந்திப்பதில்லை. இங்கு ரவுடிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. புதுச்சேரியை கல்வி, மருத்துவம், சுற்றுலா, திரைப்படத் துறை உள்ளிட்டவற்றில் சிறந்த மாநிலமாக மாற்றலாம். அப்படிச் செய்யாமல் மாநிலத்தை வீணடிக்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் புதுச்சேரியை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வோம்.

Q

தவெக-வுக்கு இப்போது ஆதவ் அர்ஜூனா தான் ‘கஜானா’ என்கிறார்களே... உண்மையா?

A

ஆதவ் அர்​ஜு​னா​வுக்கு கொடுக்க வேண்​டியதை நாங்​கள் கொடுத்​து​விட்​டோம். அவர் செலவு செய்​கிறாரா இல்​லையா என்​பது எனக்கு முழு​மை​யாகத் தெரி​யாது. அப்​படி செலவு செய்​தால் அதை நாங்​கள் கொடுத்த பணத்தை வைத்​துத்​தான் செய்​ய​வேண்​டும்.

Q

உங்களுக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் என்ன தான் பிரச்சினை? ஆதவ் அர்ஜுனா மீது தொடர்ந்து குற்றச்சாட்டு வைப்பது ஏன்?

A

தி​முக, அதி​முக, பாஜக கட்​சிகளை விமர்​சித்து வரும் ஆதவ் அர்​ஜூ​னா, இன்​னொருபக்​கம் அந்​தக் கட்​சிகளிடம் நெருக்​க​மாக​வும் இருக்​கிறார். “நான் பேசுவதற்​கும் மார்ட்​டின் குடும்​பத்​துக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்​லை” என்று அவர் தெளிவுபடுத்​தாத​தால் அவரின் செயல்​களுக்​குப் பின்​னணி​யில் எனது தந்தை மார்ட்​டினும், நாங்​களும் இருப்​ப​தாக நினைக்​கின்​றனர். அதனால் எங்​கள் குடும்​ப​மும் சேர்ந்து பாதிக்​கப்​படு​கிறது. அதனை தெளிவுபடுத்த வேண்​டிய கடமை எனக்கு இருக்​கிறது. அதனால் சில விளக்​கங்​களை சொல்ல வேண்டி இருந்​தது.

Q

புதுச்சேரி அரசியலில் நீங்கள் யாரை எதிர்த்து அரசியல் செய்யப் போகிறீர்கள்?

A

ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக என அனைத்துக் கட்சிகளையும் எதிர்த்து நாங்கள் செய்கிறோம்; அதை இன்னும் தீவிரப்படுத்துவோம்.

Q

புதுச்சேரியில் விஜய்க்கும் செல்வாக்கு இருப்பதால் அவருடன் கைகோக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா..?

A

ஆம். இதுகுறித்து கட்சி தொடங்​கிய பிறகு அதி​காரபூர்​வ​மாக விஜய் கட்​சி​யுடன் கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்தை நடத்​து​வோம்.

Q

உங்களை பாஜக தனது ‘பி டீம்’ லெவலுக்கு தயார்படுத்து வதாகவும் ரங்கசாமிக்கு பதிலாக முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் திட்டத்தில் அக்கட்சி இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறதே..?

A

இது முழுக்க முழுக்க புரளி. நாங்கள் பாஜக-வையும் எதிர்த்துத் தான் அரசியல் செய்கிறோம்.

Q

புதுச்சேரி அரசியலில் ரங்கசாமி, நாராயணசாமி, வைத்தியலிங்கம் போன்ற ஜாம்பவான்களை தாண்டி நினைத்ததைச் சாதிக்க முடியும் என நம்புகிறீர்களா?

A

அவர்களின் அரசியல் அனுபவம் எல்லாமே ஆட்சியை பிடிக்க மற்றவர்களை எப்படிக் கவிழ்ப்பது என்பது தான். புதுச்சேரியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதில் இல்லை. அப்படி இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வரவேண்டிய தேவையே இருந்திருக்காது.

Q

நீங்கள் தேர்தலில் லாட்டரி பணத்தை கோடி கோடியாய் கொட்டி எப்படியும் வெற்றியை தன்வசமாக்க திட்டமிடுவதாகக் கூறப்படுகிறதே..?

A

அரசி​யல்​வா​தி​கள் எல்​லோருமே இது​வரைக்​கும் பணத்தை வைத்​துத் தான் வெற்றிபெற்​றார்​களா... அவர்​களுக்​கெல்​லாம் கொள்​கை, மக்​களுக்கு நல்​லது செய்ய வேண்​டும் என்ற எண்​ணமே இல்​லை​யா? எங்​களுக்கு எதி​ராக இப்​படிச் சொல்​வது அவர்​களின் பயத்​தைக் காட்​டு​கிறது. குறிப்​பாக, திமுக ஊழலுக்கு பேர் போன கட்​சி. அந்​தக் கட்​சி​யில் அதி​க​மாக ரவுடிகள் தான் உள்​ளனர்.

தப்​பான பல தொழில்​களைச் செய்​வோர் தான் அங்கு இருக்​கிறார்​கள். திமுக-​வால் நாடு வளர்ச்சி அடை​யாது. எனவே, எங்​களை விமர்​சனம் செய்ய அவர்​களுக்கு எந்​தத் தகு​தி​யும் இல்​லை. மக்​களுக்கு நல்​லது செய்​வதற்​காக அரசி​யல் களத்​தில் இறங்​கி​விட்​டோம். எதை​யும் சந்​திக்​கத் தயா​ராக இருக்​கிறோம்.

Q

உங்கள் கைக்கு அதிகாரம் வந்தால் புதுச்சேரிக்காக என்ன செய்வீர்கள்?

A

புதுச்​சேரி​யில் சரி​யான பாது​காப்பு இல்​லை. அதனால், முதலில் சட்​டம் - ஒழுங்கு சரிசெய்​யப்​படும். பாது​காப்பு கொடுத்​து​விட்​டால், இங்​குள்ள மக்​களும், சுற்​றுலா வருபவர்​களும் சந்​தோஷப்​படு​வார்​கள். முதலீடு​களும் அதி​கரிக்​கும். மக்​களின் அடிப்​படை வசதி​களை செய்து தரு​வதோடு ‘அனை​வருக்​கும் வீடு’ என்ற திட்​ட​மும் எங்​களின் எண்​ணத்​தில் இருக்​கிறது.


No comments:

Post a Comment

நோபல் பரிசு பெற்ற தமிழர் விஞ்ஞானி சு.சந்திரசேகர் ஐயாவை போற்றும் அமெரிக்க அறிவும், மதிக்காத திராவிடம்

  சுப்பிரமணியன் சந்திரசேகர் — ஒரு தமிழரின் மறைக்கப்பட்ட பெருமை https://x.com/kevinpaulshow/status/1995862971164361161 சுப்பிரமணியன் சந்திரசே...