Sunday, August 9, 2026

பாண்டியர்கள் யார்?

 பாண்டியர்கள் யார்?

https://x.com/sureshkalipandi/status/2086489590379254204/photo/2

பாண்டிய வம்ச மன்னர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று வெகுநாட்களாக ஒரு சர்ச்சை உண்டு. தென்னகத்தில் மறவரைப் "பாண்டியமார்" என்றும் தனியொரு மறவரை "பாண்டியன்" எனவும் அழைப்பது பிற சாதியினரின் மரபாகும். மேலும் தென்பகுதி மக்களில் பெரும்பாலோரின் கருத்தும் கூட மறவரே பாண்டியர் என்பதுதான் நடைமுறையில் நிதர்சனமாகக் காணப்படும் உண்மையும் ஆகும். இதற்கான தரவுகள் ஏற்கனவே இருப்பினும் பாண்டியன் என்பது மறவரில் எந்த பிரிவினர்? என்று சிலரால் கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதற்கு பதில் தரும் விதமாக, ஒரு ஓலை ஆவணம் ஒன்று கிடைத்துள்ளது. இதனை, "தமிழகம் அரப்பன் நாகரீகத் தாயகம்" எனும் நூலில், 83-92 ஆகிய பக்கங்களில் அரியலூர் வன்னியர் பாளைய ஆவணம் என்ற பெயரில் பதிந்துள்ளார். பிறகு இது பன்னீராயிரம்பண்னை பாளைய ஆவணம் என அவரால் கருதப்பட்டுள்ளது. இந்த ஆவணம் திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழக கீழ்த்திசை சுவடிகள் காப்பகத்தில் உள்ள "அரியலூர் பள்ளி வில்லி படையாண்டவர் கதை" ஓலை ஆவணம் ஆகும். •"கொண்டம கோட்டற் குலம்"• மேற்கண்ட ஓலை ஆவணமானது மொத்தம் 14 ஓலைகளைக் கொண்டதாகும். இதில் பதினொன்றாவது ஓலையில் 53வது வரிகளில் பாண்டியனின் குலம் தெரிவிக்கப்பட்டுள்ளது., அது யாதெனில்,.. 53... ...... .... " மாற்றார் துதிக்க வாளும் அன்னாளில் "கொண்டம கோட்டற் குலமது" தளைக்க 54.மானியம் காத்து மனுமுறை செலுத்தி தென்காசி தன்னில் சிறந்த பாண்டியனை சேவித்திருந்து 55.செகமெலாம் புகழ் உண்மை உபதேசம் உறைத்த சற்குருவாம் ஊருடைய தேசிகற் {குகந்த} நக" - என தெளிவாக பாண்டியரின் குலமானது,"கொண்டம கோட்டற் குலம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டம கோட்டற் குலம் என வருவது, மறவரின் "கொண்டையன் கோட்டை பிரிவே ஆகும். ஏனெனில் இவ்வுலகு அறிந்தவரை வேறு எவருக்கும் கொண்டம கோட்டற் குலம் என்று எங்கும் வராது. இதிலிருந்து பாண்டிய வம்சத்தவர்கள் கொண்டையன் கோட்டை மறவர் குலத்தவர் என்பது மேலும் உறுதியாகிறது.

No comments:

Post a Comment

தேனி Benedict Matriculation School தாளாளர் திரு. Selva Manoharan - Devasirvatham மீது நில அபகரிப்பு புகார் அதிர்ச்சி கிளப்பிய Selva Manoharan - Felix Gerald

தேனி மற்றும் குமுளி பகுதிகளில் நில அபகரிப்பு சம்பவங்கள் குறித்து Benedict Matriculation School தாளாளர் திரு. Selva Manoharan அவர்கள், TVK தே...