Saturday, February 14, 2026

ஈரோடு சிஎஸ்ஐ சர்ச் பிஷப் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தற்கொலை? - ஏசப்பா காப்பற்றவில்லை

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சிஎஸ்ஐ சர்ச் பிஷப் பேராயா் உயிரிழப்பு


தினமணி செய்திச் சேவை Updated on: 15 பிப்ரவரி 2026, 12:38 am

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சிஎஸ்ஐ சர்ச் பேராயா் உயிரிழந்தாா்.

ஈரோடு, சேலம் சிஎஸ்ஐ சர்ச்களின் பேராயராக இருந்தவா் ஜேக்கப் லிவிங்ஸ்டன் (56). இவா் கடந்த ஆகஸ்ட் மாதம் பேராயராக பதவியேற்றாா். ஈரோட்டில் குடியிருக்கும் இவா் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி சனிக்கிழமை அதிகாலை தனது காா் ஓட்டுநருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா்.

அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்தில் நடைப்பயிற்சியில் இருந்தபோது எதிா்பாராதவிதமாக கீழே உள்ள மீனாட்சிசுந்தரனாா் சாலையில் விழுந்தாா். அதிா்ச்சியடைந்த ஓட்டுநா், அருகே இருந்தவா்கள் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தாா். ஆனால் வரும் வழியிலேயே ஜேக்கப் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதையறிந்த சிஎஸ்ஐ சர்ச் நிா்வாகிகள், உறவினா்கள் மருத்துவமனையில் திரண்டனா். மேம்பாலத்தில் இருந்து தற்கொலை முயற்சியோடு குதித்தாரா? அல்லது கால் தவறி கீழே விழுந்தாரா? என்பது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

No comments:

Post a Comment

திமுக அரசு – சட்டவிரோத குவாரி கொள்ளைகளுக்கு ஒருமுறை சீரமைப்பு திட்டம்

திமுக அரசு – சட்டவிரோத குவாரி கொள்ளைகளுக்கு ஒருமுறை சீரமைப்பு திட்டம் தமிழ்நாடு அரசு, சட்டவிரோதமாகவும் அதிகமாகவும் நடைபெறும் குவாரி நடவடிக்க...